இன்றோர் உணர்வு...
யாரவது பறை இசையுங்கள்...
நான் ஆட வேண்டும்..
வெற்று ஆட்டம் அல்ல...
பறை ஓசை காதில் நுழைந்து..
ஐந்து புலங்களையும் அடக்கி..
அதன் இசைக்கெற்ப்பா ஒரு தாண்டவம் ஆட வேண்டும்..
ரத்தங்கள் கொதித்து நித்தம் உண்டான வேதனைகள் மறந்து...
கொட்டும் ஓசையில் கொடியதொரு ஆட்டம் ஆட வேண்டும்...
பற்றும் அற்று.. பரதேசியாய் மாறி..
பக்குவம் தூக்கி எரிந்து, எவனையும் சிந்தியாமல்...
கேட்க்கும் இசையில் எனை மறந்து ஆட வேண்டும்...
கொஞ்சம் கொஞ்சமாய் உள் நுழைந்து..
உதிரம் முழுவதும் பரவி... நாளங்கள் பரபரத்து...
என்னை கேட்காமலே என் கையும் காலும் அதன் இஷ்டத்திற்கு ஆட வேண்டும்...
பார்ப்பவன் திகைக்க வேண்டும்... முனியோ, கருப்பனோ.. பட்டனோ என்று கூற வேண்டும்..
தெய்வம் உடைத்த மிருகமாய்... ஒரு வெறியாட்டம் ஆட வேண்டும்...
உச்சி வெயில் மண்டையில் இறங்கி உடம்பை உறுத்தும் வேளையில்... நிறுத்தாமல் இருக்கட்டும்...
உள்ளிருக்கும் அழுக்குகள் யாவும் வேர்வையாய் ஆடி தீர வேண்டும்...
இன்றோ நேற்றோ நாளையோ எதைக்குறித்த கேள்வியும் அற்று.. ஓசையின் மாயை வேண்டும்...
உணர்வுகள் அற்ற, உறவுகள் அற்ற.. வேற்றுடம்பாய் ஆட வேண்டும்..
படைத்தவன் ஒருவன் இருந்தால் அவனுக்கு என்னோடு ஆட ஆசை வரவேண்டும்..
நானே சகலமும் என்ற கர்வம் உடைக்க ஒரு மரண ஆட்டம் ஆட வேண்டும்...
வேள்வியில் உதித்தவனோ... கேள்வியில் பிறந்தவனோ.. மதியில் சிறந்தவனோ.. எதுவும் மறந்து போக வேண்டும்..
நீயும் நானும் வெற்று ஜடமாகி. லோகத்தின் மோகமாய் ஆட வேண்டும்
கோவிலோ தெருவோ... சேரியோ, அக்ரகரமோ, உயர்வோ, தாழ்வோ.. அற்ற ஆட்டம் வேண்டும்...
பிறந்தவன் இறப்பான் என்ற புரிதல் கொண்ட தறிகெட்ட ஆட்டம் வேண்டும்...
யாரேனும் பறை இசையுங்கள் எனக்கு ஆட வேண்டும்....
No comments:
Post a Comment