Friday, 10 November 2023

The Boy Who Harnesses The Wind

#TheBoyWhoHarnessedTheWind

#africanmovies #WilliamKamk #Netflix 

#chiwetelEjiofor

#NaanVijay 

ஒரு வாழும் மனிதனை பற்றி எடுக்கப்படும் ஒரு திரைப்படம் அதுவும் ஆப்பிரிக்கா நாட்டில் ஒரு பழங்குடியினர் பின்னனியில் என்றால் நாம் என்ன எதிர்பார்ப்போம் ஒரு கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை, அல்லது ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியை, அல்லது ஒரு அழிக்கப்பட்ட இனத்தின் கோரத்தை, ஆனால் இந்த படம் அப்படிப்பட்டது அல்ல, இது நம்பிக்கையை விதைக்கிறது... என்னால் முடியும் போது உன்னாலும் முடியும் என்று கட்டியம் கூறுகிறது..

இது ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞனின் பதின்பருவ சாதனை...

Spoiler alert

ஒரு சிறுவன் ஒரு குட்டி கிராமத்தில், மின்சாரம் கூட இல்லாத ஒரு கிராமத்தில் படிக்கிறான் ஆம் வாழ்கிறான் என்பதை விட படிக்கிறான் என்று சொல்வதே மேல், அவன் கண்முன்னே ஒரு கடும் பஞ்சம் கோரதாண்டவம் ஆடுகிறது, மனிதர்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொள்வதை பார்க்கிறான், தன் வீட்டில் ஒருவன் உணவு தானியத்தை திருடி செல்வதை அறிகிறான், அரசு உதவி தங்களை எட்டவில்லை என்பதை புரிந்து கொள்கிறான், பின்பு அந்த கிராமத்தின் தலையெழுத்தை மாற்றுக்கிறான் இதுதான் கதை, இது எப்படி நடந்தது என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு கடுமையான வாக்குவாதம் நடந்திருப்பதை காண்கிறோம், படிப்பு அவசியமா இல்லையா, இந்த படம் அதற்க்கான பதிலை தருகிறது, படிக்க பள்ளிக்கு சென்ற ஒரு சிறுவன் தன் ஊரின் வாழ்வியலை மாற்றி தருகிறான், அரசு கைவிட்ட, அந்த ஊர் பெரியவர்களால் முடியாமல் திணறி கொண்டிருந்த போது ஒரு பதின்பருவ சிறுவன் அந்த நிலைக்கு விடை அளிக்கிறான், பின்னர் அவனுக்கு இன்னொரு பள்ளியில் படிக்க வாய்ப்பு வரும்போது அவன் செல்லாமல் விவசாயம் செய்கிறேன் என்று சொல்லு போது அவன் தந்தை நீ படி, நீ படிச்சா இங்க எல்லாம் சரியா நடக்கும்னு சொல்றாரு, படிப்பு தரும் நம்பிக்கையை உலகில் வேறு எதனாலும் தர முடியாது..

இந்த திரைப்படத்தின் இயக்குனர் தான் இந்த படத்தில் சிறுவனின் தந்தையாக நடித்திருப்பார், அதிலும் இது அவருக்கு இயக்குனராக முதல் படம் என்பது ஆச்சரியத்தின் உச்சம், அத்தனை அழகான திரைக்கதை அமைப்பு முதலில் அந்த உலகத்தில் நம்மை பொருத்தி, பின்பு அவர்களின் வலிகளை கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு கடத்தி கடைசியில் அந்த சிறுவன் ஜெயித்த பிறகு அவனை அவன் அப்போ ஒரு பார்வை பார்ப்பார், அதே பார்வையில் நம்மையும் அவனையும் பார்க்க வைத்திடுவார், வெய்யிலை இவ்வளவு இதமாக காட்சி படுத்த முடியுமா என்று தெரியவில்லை, அதே போல மழைக்கு கோரமுகம் கொடுத்து அதன் வெள்ளத்தின் ஆற்றமையும் புரியவைக்கிறார், வெறுமனே ஒரு பெரிய கார்பொரேட் கம்பெனி காட்டி இதுதான் எல்லாத்துக்கும் காரணம் என்கிற இந்திய சினிமாவின் கதையாடலாக இருந்திடுமோ என்று நினைக்கும் போது, இவர் சரியான அரசியலை நோக்கி இந்த படத்தை நகர்த்தி இருக்கிறார்..

மொத்தத்தில் புழுதி காற்றில் ஒரு விஞ்ஞானி பிறந்த கதைதான் இந்த திரைப்படம்...

Movie : The Boy Who Harnessed the Wind
Language : English
OTT: Netflix

#நான்விஜய்

Wednesday, 8 November 2023

Scam 2003 - The Telgi Story

#Webseries : 5

#Scam2003 #TheTelgiStory #SonyLIV #NaanVijay 

ஹர்ஷத் மேத்தா கதைக்கு பிறகு அதே குழு மீண்டும் இணைந்து தயாரித்திருக்கும் இன்னொரு உண்மை சம்பவம் இந்த ஸ்கேம் 2003, பள்ளிக்கூட நாட்களில் முத்திரைத்தால் மோசடி என்கிற வார்த்தை மிகவும் பிரபலம், பலமுறை பல செய்தித்தால்களிலும், தொலைக்காட்சியிலும் கேட்டது உண்டு, ஆனால் அதன் பின் இருக்கும் இந்த பிரமாண்ட கதையும் கேட்கும் போது ஒரு நிமிடம் ஸ்ஸ்த்தம்பிதே போய்விட்டேன்.

ரயிலில் பழம் விற்கும் ஒரு பட்டதாரி எப்படி இந்தியாவின் மிக பெரும் ஊழலை செய்தான் என்பதை மிகுந்த சுவரசியமிக்க திரைக்கதையுடன் சொல்லி இருக்கின்றனர், நிஜத்தில் இருக்கும் டெல்கியை போலவே ஒருத்தரை கொண்டுவந்து நம் கண்முன் நிறுத்தியத்தோடு அவரது நடிப்பு திறனும் வியக்க வைக்கிறது..

இதுவும் சரி இதுக்கு முன்பு வந்த ஹர்சத் கதையும் சரி ஒன்றை மட்டும் தெளிவாக விளக்குகிறது அது.. அரசியல்வாதிகள் என்றுமே பாதிக்க படுவதில்லை, அவர்கள் எளிமையாக இதில் இருந்து தப்பித்து கொள்ளுவார்கள்,

இந்த கதையில் ஒரு வசனம் வரும்.. நான் ஒரு எலியாக மட்டும் இருக்கும் வரை இந்த சட்டத்தின் ஓட்டையில் ஓடி ஒளிந்துகொண்டு தப்பித்து கொள்ளுவேன் என்று, ஆனால் அந்த எலி பெரிச்சாளியாக மாறாமல் யானையாக மாறினால் யாரால் தான் ஒளித்து வைக்க முடியும், இன்னும் இது போன்ற எத்தனையோ பெரிச்சாளிகள் கிங் கொங் உருவத்தில் இருந்தும் சட்டத்தின் ஓட்டையில் பெரியதாக்கி கொண்டு தப்பித்து கொண்டுதான் இருக்கின்றன, அதிகபட்சம் இன்னும் சில வருடங்கள் கழித்து இது ஒரு content ஆக மாறி இது போல இணைய தொடறாகவோ அல்லது திரைப்படமாகவோ வரும் போது எப்படில்லாம் பண்ணி இருக்கானுங்க பாரேன் அப்புடின்னு உச்சுக்கோட்ட தான் முடியுமே தவிர வேறு ஒன்னும் செய்ய போவதில்லை..

இந்த ஊழளுக்கெல்லாம் பின்னால் மறைந்து நிற்கும் அரசியல்வாதிகளை மீண்டும் வெட்கம் இல்லாமல் ஒட்டு போட்டு நாமும் பதவியில் உட்கார வைக்கதான் போகிறோம், காரணம் கேட்டால், ஒரு கும்பல் மதத்தை காப்பாற்ற என போகிறது இன்னொரு கும்பல் மதவாதிகளிடம் இருந்து காப்பாற்ற என்று சொல்ல போகிறது, ஆனால் யார் கண்ணுக்கும் பின்னால் நடக்கும் இந்த எகனாமிக்கல் crime எப்போதும் தெரியப்போவதில்லை...

So we will wait for another interesting scam story in coming days

#நான்விஜய்

Monday, 6 November 2023

Never Have I ever

#Webseries #Netflix #NeverHaveIEver

Just trying review in english.. So plz don't search for grammar.. Am out of it..

This series is all about a bunch of teens who doing there schooling, the entire story is around  one girl named Devi Viswakumar,

Spoiler Alert*

Devi Viswakumar is a Indian American actually a Tamil famil girl who switched to america from Chennai.. Devi and her 2friends starting the year with a goal, that is they all three should loose there virginity for sure, yet they don't have any boyfriend stuff, so there primary focus is on find a boy for there love and loose there virginity with him

Actually it's sounds like a proper adult movie content but actually its a Comedy drama,  you will enjoy all there comical expressions and dialogue throughout the webseries, but its actually not bitter or vulgar, its just a usual stuff between the college going adults,

Devi the girl who lost her most lovable father before her eyes, thats actually affected her lot, and she desired to out from the trama, by finding love of her life,

The beautiful things I gathered from the series

The love between the father and a imperfect girl is lit to watch, the way Viswakumar handle his daughter, every father will wish we should like him.

Mother of Devi, who struggled a lot to take her daughter without moral support of her husband, and how she gone through this agony and succed as a great mother for her daughter, and the way she handling the modern society vs Difficult Indian culture, just show how our Indian mothers will react on the modern society.. Its was amazingly screenplayed, where some of the cultural different lag will be there but overall it was fun to watch

Grandma who lost her son, relocating to America from India, and she suddenly adopted to the culture and finding her happiness on there is showing pain of elderly peoples loneliness, all they need is a happy supporting system, if they got, behalf of you they will throw the cultural barriers and its beautifully portrayed

Devi and her friends in the school are the main theme of the story I dont want to reveal this on this short review, because if ur interested to watch, you will defiantly enjoy the drama, and this kids will teach lot about the life, sacrifice, friendship values, and perfection on imperfection, love, sex and lot more.

Totally 4seasons and each seasons have 10episodes, Available in Netflix but tamil audio not available.. And english is very very understandable where as lot of indians acted in the series so Indian assent of English is enough to understand the webseries... Give it a try for a lite hearted series 👍🏽

#NaanVijay

Wednesday, 1 November 2023

கீதையோ கீதை, பைபிலோ பைபிள், குர்ஆனோ குரான்

#புத்தகம் : 25

#NaanVijay #நான்விஜய்

இந்த உலகின் பல பக்கங்களில் பல பிரச்சனைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது, இதற்கு என்னதான் அடிப்படை காரணம் என்று தேடினால் கிடைக்கும் பதில் மதம், கடவுள், வேதங்கள், அன்பை பரப்ப வந்திருக்கும் அனைத்து மதங்களும் அதை பரப்ப தன் கையில் ரத்த கரையோடு தான் அந்த பரப்புரையை செய்கின்றனர் என்பதுதான் அபத்தமான உண்மை

தோழர் புவனன் எழுதிய இந்த புத்தகத்தை பற்றி கேள்விப்பட்ட சில தோழர்கள் பல இடங்களில் அலைந்து திரிந்து இதன் பாகங்களை திரட்டி இன்று ஒரு முழு புத்தகமாக நமக்கு திரட்டி தந்திருகின்றனர், இந்த புத்தகம் நான்கு குறு புத்தகங்களின் தொகுப்பாகும், பெரியாரின் சிந்தனையால் ஏற்கப்பட்ட தோழர் மதங்களை அதன் புனித நூல்களை பகுபாய்வு செய்து, அதன் கதைகளை பகுத்தறிந்து விமர்சனம் செய்திருக்கிறார், மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்ட எவர் இந்த புத்தகத்தை படித்தாலும் இவரை தேடிகண்டுபிடித்து அடிக்க கண்டிப்பாக தேடுவார்கள் என்பது உண்மை, ஆனால் அறிவுள்ளவர்கள் பகுத்தறிய தெரிந்தவர்கள் அதில் உள்ள உண்மையை புரிந்து கொள்வார்கள், வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் மத புத்தகங்கள் வெறும் பிதற்றல்கள் என்று நிரூபிக்கவே ஒருவர் அதை படித்து, அவர் எந்த நோக்கத்தோடு அதை படித்தாரோ அது நிறைவேறிவிட்ட சந்தோசத்தோடு அதை பற்றி பக்கம் பக்கமாக கிழித்து தொங்கவிட்டிருக்கிறார் என்பதே மிக பெரிய உண்மை,

இறுதியில் நாத்திகம் ஏன் தேவை, அதனால் இங்கு என்ன மாற்றம் நடந்திருக்கிறது, என்று பேசுகிறார், அவர் சொன்ன அத்தனையும் உண்மை தான் , இங்கு கலாச்சாரம் என்று சொல்லப்பட்ட பல விஷயங்கள் மாறிவிட்டது, முன்பு போல ஜாதிய கொடூரத்தை வெளிப்படையாக பல ஊர்களில் இன்று செய்ய முடியாது, பெண்களை அடிமைப்படுத்துவது என்பதை இன்று சட்டப்படி குற்றமாகியது, மறுமணம், விவாகரத்து எல்லாம் இயல்பில் வந்துவிட்டது, ஆனால் கடவுள் நம்பிக்கை?

இன்று உண்மையில் எத்தனை பெயர் நாத்திகவாதி, ஏன் தோழரின் கொள்கை குரு பெரியாரை பின்பற்றுவதாக சொல்லும் கட்சியில் யாரால் இன்று வெளிப்படையாக கடவுள் மறுப்பு பேச கூடிய தைரியம் இருக்கிறது, சனாதானத்தை எதிர்க்கிறோம் கடவுளை அல்ல கடவுள் நம்பிக்கையை அல்ல என்று சப்பைகட்டு கட்டும் பெரியாரியக்க தோழர்களை என்ன செய்வது?.. மனிதன் வளர அறிவு வளர்கிறது, அறிவு வளர பல மடைமைகள் உடைக்கிறது, கூடவே கடவுள் வேறு பரிணாமம் கொண்டு இங்கு வாழ்ந்து கொண்டே தான் இருக்கும்.. பயம் இருக்கும் வரை கடவுள் இருப்பார்..

சுவாமி விவேகானந்தர் சொன்னது போல இன்றைய உண்மையான நாத்திகம் என்பது மனிதன் தன்னம்பிக்கையோடு இருப்பது தான், தன்னம்பிக்கை அற்றவனுக்கு கடவுள் நம்பிக்கை தான் ஒரே பிடிப்பு.. ஆனால் அது பிற உயிரை வாங்கும் அளவுக்கு மூடத்தனம் ஆவதுதான் பயத்தின் உச்சம்..

புத்தகம் : கீதையோ கீதை, பைபிலோ பைபிள், குர்ஆனோ குரான்
ஆசிரியர் : தோழர் புவனன்
பதிப்பகம் : நிகர் மொழி பதிப்பகம்
பக்கங்கள் : 216
விலை : 150