Friday, 16 December 2022
அவதார் 2 - பார்வை
Wednesday, 2 November 2022
தோட்டியின் மகன் - புத்தக பார்வை
Tuesday, 1 November 2022
கார்பொரேட் கோடாரி - புத்தக பார்வை
Monday, 31 October 2022
நண்பனின் தந்தை - புத்தக பார்வை
Saturday, 29 October 2022
தேசாந்திரி - புத்தக பார்வை
Thursday, 27 October 2022
பண்பாட்டு அசைவுகள் - புத்தக பார்வை
Wednesday, 26 October 2022
ஜானு - புத்தக பார்வை
Tuesday, 25 October 2022
பாரபாஸ் புத்தக பார்வை
Monday, 24 October 2022
எப்போதாவது எண்ணிப்பாருங்கள் - புத்தக பார்வை
Friday, 21 October 2022
சாதல் இல்லையேல் காதல் - புத்தக பார்வை
Sunday, 16 October 2022
சிறுவர்களுக்கான தத்துவம் - புத்தக பார்வை
Sunday, 9 October 2022
மகாகவி பாரதியின் பாஞ்சாலி சபதம் புத்தக அறிமுகம்
Wednesday, 5 October 2022
The Adventure of Iron Man 1&2 View
Friday, 23 September 2022
உயிரினங்களின் தோற்றம் புத்தக பார்வை
Saturday, 17 September 2022
எண்ணங்கள் புத்தக பார்வை
Thursday, 1 September 2022
தாயுமானவள்
Tuesday, 30 August 2022
கழிவறை இருக்கை புத்தக பகுப்பாய்வு
Friday, 19 August 2022
கானல் ❤
Wednesday, 13 July 2022
இசையின் முகவரி பறை
Wednesday, 1 June 2022
பறை சத்தம் வேண்டும்
Monday, 23 May 2022
கொலைக்களம்
கொலைகள் நடக்க பல காரணங்கள், கதைகள் உண்டு, களம் அதை தீர்மானிப்பதில்லை... ஒவ்வொர் முறையும் ஒரு கொலை நடந்த களம் நம் மனத்துல் எதோ ஒரு உறுதலை உண்டாக்க வாய்ப்புண்டு, கொலைக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லாத போதும் அந்த உருத்தல் பயமாகவோ அல்லது ஏதொரு வடிவில் ஒட்டிக்கொள்ள வாய்ப்புண்டு... ஆனால் இந்த கொலையில் களமும் என்னுடையது கொலையாளியும் நானே...
சிறுகதைகளுக்கு நல்ல பேர் வாங்கிய என் பெயர் மாதவி... மணிமேகலையை ஏற்காத மணம் முடிக்காத 30 வயது ஆகியும் எந்த கோவலனையும் சிந்திக்காத மாதவி... சில தெளிவுகள், உணர்ச்சி வயத்தை தாண்டி யோசிக்கும் சிந்தனை பகரும் அற்புத வயதை எட்டிய நான் இந்த சமூகத்துக்கு ஒரு முற்போக்கு சிந்தை எழுத்தாளர்... செயற்பாட்டாலர்... இன்னொரு புறம் ஒற்றை தாயின் அன்பு மகள்... வாழ்க்கை முழுவதும் நான் சுமந்த வெறுமையை வெற்று காகிதங்களில் நிரப்பி சிறந்த படைப்பாய் மாற்றிய எழுத்தாளர்... யார் நான் என்று இன்றும் தேடும் தன்முனைப்பாளர்...
இன்று அம்மாவிடம் ஒரு உண்மையை சொல்ல வேண்டும் இதயம் 12 வருடமாய் சொல்ல துடிக்கும் உண்மை... என் ஆழ்மனதில் என்னை தினமும் கொள்ளும் உண்மை, பாவி நான் கொலையாளி எனும் உண்மை... ஆலகால விஷத்தை தொண்டையில் தாங்கி நிற்கும் சிவனை போல், என்னை அறுக்கும் இந்த உண்மையை மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன்... இது தெரியாமலே கூட காலத்தை கடக்கலாம்.. ஆனால் என் மனம் யாரிடமாவது மன்னிப்பு வேண்ட சொல்கிறது... எனதல்லாத தவறேன்று ஒதுக்கிட முடியவில்லை. அப்படி செய்தால் அது எனக்கு நானே பொழியும் பொய்யாகும்.
சரியாக 12 வருடங்களுக்கு முன்பு என் பதின்ம வயது 12வது படித்துகொண்டிருந்த என் இளம் வயதின் காலங்கள்.. அத்தனையும் அழகாக தெரிந்த காலம், எல்லாமே ஈர்ப்பு விசையுடன் இருந்த காலங்கள்... சொல்ல முடியாத அளவுக்கு பேரழகி இல்லையென்றாலும்... ஆண்களின் பார்வையில் தப்பாத தெருவோற தேவதைகளில் நானும் ஒருத்தி, பார்க்கும் பார்வையில் ஒரு பெருமை சுமக்கும் பல அப்பாவி பெண்களில் நான் விதிவிலகில்லாதவள்... காதல் தோன்ற நேரம் பார்த்து காத்திருந்த கன்னி...
பலர் பார்க்க அவன் மீது மட்டும் ஏன் அத்தனை ஈர்ப்பு... மனதார சிரிக்கும் அந்த முகம் எதோ ஒரு வசிகரிப்பின் முகவரி தான்... பொருந்தாத உடை நிறம் அதிலும் பேரழகாய் தெரியும் அவன்... என் உள்ளத்தின் கிளர்ட்சியை மேலும் தூண்டும் ஆத்தும தோழிகள், சொல்லிய வார்த்தைகளெல்லாம் அவனைப்பற்றியது, பார்க்கும் திசையெல்லாம் அவனையே யோசிக்கவைத்தது... இதுதான் காதல் போல.. உள்ளம் ஏங்கி அவனை தேட தொடங்கியது... என் காதலை ஒத்திசைக்கும் கருவியாய் சினிமா காணங்கள்... என் மனதில் ஒவ்வொர் சினிமாவின் சீருடை காதலும் என் எண்ணத்தில் தவறில்லை என்று அட்சராமிட்டது... ஆணும் பெண்ணும் காதலிக்க வயதென்ன... நானும் அவனும் அன்பை பரிமாற அனுபவம் தேவையா என்ன?
அவனே வந்தான் தடுமாறி, காதல் மொழி பொழிந்தான்... அத்தனை பெருமை, பேரழகிகள் பலர் அவன் மேல் மையம் கொள்ள அவன் தேடி வந்தது என்னை... எத்தனை இனிமையான தருணம்... மொத்த உலகமும் என் காலுக்கடியில் இருப்பதாய் உணர்ந்தேன்... மெல்ல வான் நோக்கி பறந்தேன்... ஹே பறவைகளே இவ்வளவுதானா உங்கள் உயரம் என் இதயம் உங்களினும் மேலே பறக்கிறது பாருங்கள்... அகன்று சுடர்விடும் சூரியனே, வெந்து தனிப்பாய் என்று அருகில் வந்தால்... இத்தனை இனிமையாய் தென்றல் வீசுகுறாயே, என்
இதயம் இப்படி இருமாப்படைந்து அலைந்தது இதற்கு முன்பு எப்போதும் நிகழ்ந்ததில்லை... நிலைக்குற்றி நிலத்தில் நின்றது நான் மட்டுமே.. இதயம் இன்னும் பறந்துகொண்டுதான் இருக்கிறது...
சொல்லிவிட்டானே... என் பள்ளியின் சாகதோழிகள் என்மேல் பொறாமைக்கொள்ள இந்த ஒற்றை நொடி போதாதா... என் கர்வம் தழைத்தோங்க இந்த கணம் போதாதா... ஏற்காமல் இருந்தால் என் மனமே காலத்திற்கும் என்னை மன்னிக்காது... சம்மதித்தேன் அவன் காதல் மொழிகளுக்கு.. மீண்டும் இதயம் பூமி இறங்கியது... என்னை வட்டமிட்ட பெண்கள் கண்ணில் சற்றே பொறாமை தூக்கலாய்தான் இருந்தது... இருந்து விட்டு போகட்டும் இது என்னுடைய நாள்... அழகில் குறைந்தாலும்.. குணத்தில் நிறைந்தவள் என்று என்னவனே கூறிவிட்டான்... ஆம் என்னவன் இந்த கனம் முதல்...
அழகாய் கடந்தன நாட்கள்... காதல் மொழியும், காம மொழியும் கலக்க ஆரம்பித்தன.. தேர்வுகள் முடிந்தது... அவனை பாக்க முடியாத துயர் என்னை என்னவோ செய்தது... இன்னும் அதிகமாய் பேசினோம்... காதலோடு காமமும் அதிகமானது... பேச்சின் திசை சிலநேரங்களில் பிடிக்க வில்லை என்றாலும்.. அவனுக்காக என்னை வார்த்தைகளிலே வாரி கொடுத்தேன்... பல நேரம் நேரில் இந்த காமம் வேண்டும் என்று கேட்டும் முற்றாய் மறுத்தேன், இருப்பினும் அந்த நாள் வந்தது.. அத்துணை நாள் பேசிய காம வார்த்தைகள் செயலாய் மாற நாள் கனிந்தது, என்னுள் சிறு இச்சை எட்டி பார்த்தது உண்மை தான் ஆயினும் என்னுள் அடங்கியே இருந்தேன். உணர்வுகளை காட்டுக்குள்ளே வைத்திருந்தேன், இருப்பினும் அவன் பேசிய வார்த்தைகள் என்னை தலையாட்ட செய்தது. நம்பிக்கை இல்லையா என்றான், மரணிகட்டுமா என்றான், அட உன்னைவிடவா என் கற்பு உயர்ந்ததென்று என்னையே விருந்தாக்கினேன் அவனுக்கு... அவனும் நானும் காமலோகத்தில் திளைத்து களித்து எழுந்தோம்..
இது தொடர்கதையானது, எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம் கூடினோம்.. இன்று கல்லூரி முதல் நாள்.. அவன் இல்லாத நாட்கள் கொஞ்சம் வலிக்கவே செய்தன, நீண்ட நாட்கள் பின்பு மீண்டும் வரும் ஞாயிறு சந்திக்க போகிறோம், மனதில் பேரானந்தம், ஆனால் இன்னொரு பயமும் உண்டு எனக்கு நாள் தள்ளி போய்விட்டது.. இதற்கு காரணம் என்னுள் அவன் உயிர் முலைத்திருக்குமோ என்று அச்சம்.. இதுவரை வீட்டிற்கு தெரியாமல் காத்துவிட்டேன்.. நாளை 45வது நாள் நாளை முடிவு தெரிந்துவிடும்... நான் கர்ப்பம் என்றால் அவன் என்னவாக யோசிப்பான், நாங்கள் எப்படி இதை எதிர்கொள்ள போகிறோம்.. அவனை சந்திக்கும் போது இதற்கான விடை தெரியும்.
சந்திக்கும் நாள் வந்தது, என்னுள் இருக்கும் கருவை சொன்னேன், காரணம் நான் அல்ல என்றுவிட்டான், அதோடு நில்லாமல் எனக்கு வேசி பட்டமும் கொடுத்துவிட்டான்.. அந்த உத்தமியின் மகனும் நான் சுமக்கும் கரு வேசியுனடையதானது, இனி என் செய்வேன், மரணம் ஒன்றே வழி, இந்த பழியை சுமந்து இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்வேன், மரணிக்க வேண்டியதுதான் ஒரே வழி... இல்லை அப்படி மரணித்தால், என் கர்ப்பம் பற்றிய உண்மை அம்மாவுக்கு தெரியவருமே.. என்னை நினைத்து தினம் தினம் மரணிப்பாரே... இல்லை மரணம் எனக்கு வேண்டாம்.. அந்த கொடூரன் வாழும் பூமியில் எனக்கு மட்டும் ஏன் மரணத்தண்டனை, இந்த கர்ப்பதை துறப்பேன்.. பெரிதினும் பெரிதாய் ஜெயிப்பேன், இந்த உலகம் என்னை வேசி என்று அடையாளபடுத்தாது, என்னை முன்னுதாரணமாகி கொண்டாடும்.. கொண்டாட செய்வேன்.. அவனிலும் சிறந்த வாழ்வை எனக்கு நானே பரிசளிப்பேன், அவன் என்னை தூக்கி எரிந்தது போல, அவந்தந்த இந்த கருவை நான் எரிவேன்.
காலங்கள் உருண்டோடியாது, காலத்தின் வேகத்தில் போட்டியிட்டு எனக்கான அடையாளத்தை இந்த சமுதாயத்தில் நிலைத்து விட்டேன்.. இதைத்தான் சொன்னேன் என் அம்மாவிடம், கட்டிப்பிடித்து சில மணிநேரங்கள் அழுதார்... தன்னைத்தானே தேற்றி கொண்டு, என்வெற்றியை இணைத்து பெருமிதம் கொண்டார்... மன்னித்தருளினார், அவரிடம் மறைத்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைத்துவிட்டது ஆனால் உள்ளம் என் கொலைக்கு தண்டனை வேண்டி இப்பொது நிற்கிறது..
அன்பே என் கருவில் உதித்ததை தவிர்த்து வேறென்ன குற்றம் புரிந்தாய்...
என் பாவங்களுக்கு நீ ஏன் சிலுவை ஏறினாய்...
பெற்றெடுத்து அள்ளி அனைத்திருக்க வேண்டிய கரம்தனில்...
உத்திரமாய் நீ வழியும் போது அள்ளி முகம் பூசி அழுதேனே...
கொலைகாரி நானே உன்னை கொள்ளும் தைரியம் கொண்டேனே...
பூவாய் பூத்த உன்னை கொலைகலமாய் மாறி கொன்றேனே..
எத்தனை பிறவி வேண்டும் உன் பாதம் பற்றி மன்னிப்பு வேண்ட..
என்றேனும் ஒருநாள் மன்னித்து அம்மா என்று அழைத்திடுவாய...
படுக்கை அறையில் என்னை கொன்றேன்..
சுயம் கொண்டு எழுந்திருக்கையில் நீ மரணித்துவிட்டாயே அன்பே...
பெண்ணே மரணித்துவிடுவேன் என்று ஒருவேளை அவன் மன்றாடலாம்...
தினம் தினம் நீ இறப்பதற்கு பதில் ஒருமுறை அவன் இறந்து விட்டு போகட்டும்...
என்மீது நம்பிக்கை இல்லையா என்பான்...
வெற்று நம்பிக்கையை வேடனிடத்தில் கொடுத்துவிடாதீர்கள்...
அத்தனையும் காதல் என்றே தோன்றும் வயது...
காக்கும் கரம் கடவுளிடம் இல்லை என்பதை உணருங்கள்...
காதல் காமம் கேட்காது, படுக்கையறை தேடாது...
அது அன்பின் ஊடாக பெண்ணியம் பேசும், கண்ணியம் காக்கும்...
உன்னை நீ காக்காமல் போனால் நீயும் இன்னொரு கொலைகளம் ஆவாய்... என்னை போல...
முற்றும்
-நான் விஜய் -