Monday, 23 May 2022

கொலைக்களம்

கொலைகள் நடக்க பல காரணங்கள், கதைகள் உண்டு, களம் அதை தீர்மானிப்பதில்லை... ஒவ்வொர் முறையும் ஒரு கொலை நடந்த களம் நம் மனத்துல் எதோ ஒரு உறுதலை உண்டாக்க வாய்ப்புண்டு, கொலைக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லாத போதும் அந்த உருத்தல் பயமாகவோ அல்லது ஏதொரு வடிவில் ஒட்டிக்கொள்ள வாய்ப்புண்டு... ஆனால் இந்த கொலையில் களமும் என்னுடையது கொலையாளியும் நானே...

    சிறுகதைகளுக்கு நல்ல பேர் வாங்கிய என் பெயர் மாதவி... மணிமேகலையை ஏற்காத மணம் முடிக்காத 30 வயது ஆகியும் எந்த கோவலனையும் சிந்திக்காத மாதவி... சில தெளிவுகள், உணர்ச்சி வயத்தை தாண்டி யோசிக்கும் சிந்தனை பகரும் அற்புத வயதை எட்டிய நான் இந்த சமூகத்துக்கு ஒரு முற்போக்கு சிந்தை எழுத்தாளர்... செயற்பாட்டாலர்... இன்னொரு புறம் ஒற்றை தாயின் அன்பு மகள்... வாழ்க்கை முழுவதும் நான் சுமந்த வெறுமையை வெற்று காகிதங்களில் நிரப்பி சிறந்த படைப்பாய் மாற்றிய எழுத்தாளர்... யார் நான் என்று இன்றும் தேடும் தன்முனைப்பாளர்...

இன்று அம்மாவிடம் ஒரு உண்மையை சொல்ல வேண்டும் இதயம் 12 வருடமாய் சொல்ல துடிக்கும் உண்மை... என் ஆழ்மனதில் என்னை தினமும் கொள்ளும் உண்மை, பாவி நான் கொலையாளி எனும் உண்மை... ஆலகால விஷத்தை தொண்டையில் தாங்கி நிற்கும் சிவனை போல், என்னை அறுக்கும் இந்த உண்மையை மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன்... இது தெரியாமலே கூட காலத்தை கடக்கலாம்.. ஆனால் என் மனம் யாரிடமாவது மன்னிப்பு வேண்ட சொல்கிறது... எனதல்லாத தவறேன்று ஒதுக்கிட முடியவில்லை. அப்படி செய்தால் அது எனக்கு நானே பொழியும் பொய்யாகும்.

சரியாக 12 வருடங்களுக்கு முன்பு என் பதின்ம வயது 12வது படித்துகொண்டிருந்த என் இளம் வயதின் காலங்கள்.. அத்தனையும் அழகாக தெரிந்த காலம், எல்லாமே ஈர்ப்பு விசையுடன் இருந்த காலங்கள்... சொல்ல முடியாத அளவுக்கு பேரழகி இல்லையென்றாலும்... ஆண்களின் பார்வையில் தப்பாத தெருவோற தேவதைகளில் நானும் ஒருத்தி, பார்க்கும் பார்வையில் ஒரு பெருமை சுமக்கும் பல அப்பாவி பெண்களில் நான் விதிவிலகில்லாதவள்... காதல் தோன்ற நேரம் பார்த்து காத்திருந்த கன்னி...

பலர் பார்க்க அவன் மீது மட்டும் ஏன் அத்தனை ஈர்ப்பு... மனதார சிரிக்கும் அந்த முகம் எதோ ஒரு வசிகரிப்பின் முகவரி தான்... பொருந்தாத உடை நிறம் அதிலும் பேரழகாய் தெரியும் அவன்... என் உள்ளத்தின் கிளர்ட்சியை மேலும் தூண்டும் ஆத்தும தோழிகள், சொல்லிய வார்த்தைகளெல்லாம் அவனைப்பற்றியது, பார்க்கும் திசையெல்லாம் அவனையே யோசிக்கவைத்தது... இதுதான் காதல் போல.. உள்ளம் ஏங்கி அவனை தேட தொடங்கியது... என் காதலை ஒத்திசைக்கும் கருவியாய் சினிமா காணங்கள்... என் மனதில் ஒவ்வொர் சினிமாவின் சீருடை காதலும் என் எண்ணத்தில் தவறில்லை என்று அட்சராமிட்டது... ஆணும் பெண்ணும் காதலிக்க வயதென்ன... நானும் அவனும் அன்பை பரிமாற அனுபவம் தேவையா என்ன?

அவனே வந்தான் தடுமாறி, காதல் மொழி பொழிந்தான்... அத்தனை பெருமை, பேரழகிகள் பலர் அவன் மேல் மையம் கொள்ள அவன் தேடி வந்தது என்னை... எத்தனை இனிமையான தருணம்... மொத்த உலகமும் என் காலுக்கடியில் இருப்பதாய் உணர்ந்தேன்... மெல்ல வான் நோக்கி பறந்தேன்... ஹே பறவைகளே இவ்வளவுதானா உங்கள் உயரம் என் இதயம் உங்களினும் மேலே பறக்கிறது பாருங்கள்... அகன்று சுடர்விடும் சூரியனே, வெந்து தனிப்பாய் என்று அருகில் வந்தால்... இத்தனை இனிமையாய் தென்றல் வீசுகுறாயே, என்
இதயம் இப்படி இருமாப்படைந்து அலைந்தது இதற்கு முன்பு எப்போதும் நிகழ்ந்ததில்லை... நிலைக்குற்றி நிலத்தில் நின்றது நான் மட்டுமே.. இதயம் இன்னும் பறந்துகொண்டுதான் இருக்கிறது...

சொல்லிவிட்டானே... என் பள்ளியின் சாகதோழிகள் என்மேல் பொறாமைக்கொள்ள இந்த ஒற்றை நொடி போதாதா... என் கர்வம் தழைத்தோங்க இந்த கணம் போதாதா... ஏற்காமல் இருந்தால் என் மனமே காலத்திற்கும் என்னை மன்னிக்காது... சம்மதித்தேன் அவன் காதல் மொழிகளுக்கு.. மீண்டும் இதயம் பூமி இறங்கியது... என்னை வட்டமிட்ட பெண்கள் கண்ணில் சற்றே பொறாமை தூக்கலாய்தான் இருந்தது... இருந்து விட்டு போகட்டும் இது என்னுடைய நாள்... அழகில் குறைந்தாலும்.. குணத்தில் நிறைந்தவள் என்று என்னவனே கூறிவிட்டான்... ஆம் என்னவன் இந்த கனம் முதல்...

அழகாய் கடந்தன நாட்கள்... காதல் மொழியும், காம மொழியும் கலக்க ஆரம்பித்தன.. தேர்வுகள் முடிந்தது... அவனை பாக்க முடியாத துயர் என்னை என்னவோ செய்தது... இன்னும் அதிகமாய் பேசினோம்... காதலோடு காமமும் அதிகமானது... பேச்சின் திசை சிலநேரங்களில் பிடிக்க வில்லை என்றாலும்.. அவனுக்காக என்னை வார்த்தைகளிலே வாரி கொடுத்தேன்... பல நேரம் நேரில் இந்த காமம் வேண்டும் என்று கேட்டும் முற்றாய் மறுத்தேன், இருப்பினும் அந்த நாள் வந்தது.. அத்துணை நாள் பேசிய காம வார்த்தைகள் செயலாய் மாற நாள் கனிந்தது, என்னுள் சிறு இச்சை எட்டி பார்த்தது உண்மை தான் ஆயினும் என்னுள் அடங்கியே இருந்தேன். உணர்வுகளை காட்டுக்குள்ளே வைத்திருந்தேன், இருப்பினும் அவன் பேசிய வார்த்தைகள் என்னை தலையாட்ட செய்தது. நம்பிக்கை இல்லையா என்றான், மரணிகட்டுமா என்றான், அட உன்னைவிடவா என் கற்பு உயர்ந்ததென்று என்னையே விருந்தாக்கினேன் அவனுக்கு... அவனும் நானும் காமலோகத்தில் திளைத்து களித்து எழுந்தோம்..

இது தொடர்கதையானது, எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம் கூடினோம்.. இன்று கல்லூரி முதல் நாள்.. அவன் இல்லாத நாட்கள் கொஞ்சம் வலிக்கவே செய்தன, நீண்ட நாட்கள் பின்பு மீண்டும் வரும் ஞாயிறு சந்திக்க போகிறோம், மனதில் பேரானந்தம், ஆனால் இன்னொரு பயமும் உண்டு எனக்கு நாள் தள்ளி போய்விட்டது.. இதற்கு காரணம் என்னுள் அவன் உயிர் முலைத்திருக்குமோ என்று அச்சம்.. இதுவரை வீட்டிற்கு தெரியாமல் காத்துவிட்டேன்.. நாளை 45வது நாள் நாளை முடிவு தெரிந்துவிடும்... நான் கர்ப்பம் என்றால் அவன் என்னவாக யோசிப்பான், நாங்கள் எப்படி இதை எதிர்கொள்ள போகிறோம்.. அவனை சந்திக்கும் போது இதற்கான விடை தெரியும்.

சந்திக்கும் நாள் வந்தது, என்னுள் இருக்கும் கருவை சொன்னேன், காரணம் நான் அல்ல என்றுவிட்டான், அதோடு நில்லாமல் எனக்கு வேசி பட்டமும் கொடுத்துவிட்டான்.. அந்த உத்தமியின் மகனும் நான் சுமக்கும் கரு வேசியுனடையதானது, இனி என் செய்வேன், மரணம் ஒன்றே வழி, இந்த பழியை சுமந்து இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்வேன், மரணிக்க வேண்டியதுதான் ஒரே வழி... இல்லை அப்படி மரணித்தால், என் கர்ப்பம் பற்றிய உண்மை அம்மாவுக்கு தெரியவருமே.. என்னை நினைத்து தினம் தினம் மரணிப்பாரே... இல்லை மரணம் எனக்கு வேண்டாம்.. அந்த கொடூரன் வாழும் பூமியில் எனக்கு மட்டும் ஏன் மரணத்தண்டனை, இந்த கர்ப்பதை துறப்பேன்.. பெரிதினும் பெரிதாய் ஜெயிப்பேன், இந்த உலகம் என்னை வேசி என்று அடையாளபடுத்தாது, என்னை முன்னுதாரணமாகி கொண்டாடும்.. கொண்டாட செய்வேன்.. அவனிலும் சிறந்த வாழ்வை எனக்கு நானே பரிசளிப்பேன், அவன் என்னை தூக்கி எரிந்தது போல, அவந்தந்த இந்த கருவை நான் எரிவேன்.

காலங்கள் உருண்டோடியாது, காலத்தின் வேகத்தில் போட்டியிட்டு எனக்கான அடையாளத்தை இந்த சமுதாயத்தில் நிலைத்து விட்டேன்.. இதைத்தான் சொன்னேன் என் அம்மாவிடம், கட்டிப்பிடித்து சில மணிநேரங்கள் அழுதார்... தன்னைத்தானே தேற்றி கொண்டு, என்வெற்றியை இணைத்து பெருமிதம் கொண்டார்... மன்னித்தருளினார், அவரிடம் மறைத்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைத்துவிட்டது ஆனால் உள்ளம் என் கொலைக்கு தண்டனை வேண்டி இப்பொது நிற்கிறது..

அன்பே என் கருவில் உதித்ததை தவிர்த்து வேறென்ன குற்றம் புரிந்தாய்...
என் பாவங்களுக்கு நீ ஏன் சிலுவை ஏறினாய்...
பெற்றெடுத்து அள்ளி அனைத்திருக்க வேண்டிய கரம்தனில்...
உத்திரமாய் நீ வழியும் போது அள்ளி முகம் பூசி அழுதேனே...
கொலைகாரி நானே உன்னை கொள்ளும் தைரியம் கொண்டேனே...
பூவாய் பூத்த உன்னை கொலைகலமாய் மாறி கொன்றேனே..
எத்தனை பிறவி வேண்டும் உன் பாதம் பற்றி மன்னிப்பு வேண்ட..
என்றேனும் ஒருநாள் மன்னித்து அம்மா என்று அழைத்திடுவாய...
படுக்கை அறையில் என்னை கொன்றேன்..
சுயம் கொண்டு எழுந்திருக்கையில் நீ மரணித்துவிட்டாயே அன்பே...

பெண்ணே மரணித்துவிடுவேன் என்று ஒருவேளை அவன் மன்றாடலாம்...
தினம் தினம் நீ இறப்பதற்கு பதில் ஒருமுறை அவன் இறந்து விட்டு போகட்டும்...
என்மீது நம்பிக்கை இல்லையா என்பான்...
வெற்று நம்பிக்கையை வேடனிடத்தில் கொடுத்துவிடாதீர்கள்...
அத்தனையும் காதல் என்றே தோன்றும் வயது...
காக்கும் கரம் கடவுளிடம் இல்லை என்பதை உணருங்கள்...
காதல் காமம் கேட்காது, படுக்கையறை தேடாது...
அது அன்பின் ஊடாக பெண்ணியம் பேசும், கண்ணியம் காக்கும்...

உன்னை நீ காக்காமல் போனால் நீயும் இன்னொரு கொலைகளம் ஆவாய்... என்னை போல...


முற்றும்



-நான் விஜய் - 

Sunday, 22 May 2022

என் சுவாச காற்றே!

ஒரு இளம் மாலை நேரம்.. ரம்மியமான காற்று... ஒரே ஒரு மரம் மொத்த ஊருக்கும்... அதுவும் இன்றோடு கடைசி... நாளை எங்கள் வீட்டு பலகணிகளையும், முற்றத்தையும், வரவேற்பரையையும்... பல்வேறு கலங்களாய் மாறி ஆக்ரமிக்க போகிறது இந்த மரம்... என் நண்பனோடு உரையாடல் முடிவு செய்தோம் நாளை வேலையை முடிப்பது என்று... இனி மாலை பொழுதில் எங்கள் ஊரின் கடைசி மரத்தின்... கடைசி நாளின் கொஞ்சம் காற்றை ரசித்து ஸ்லோகித்து துயில் கொள்ள போகிறேன்.. உறக்கம் எத்தனை இனிமையானது.. உறக்கம் என்று ஒன்று இல்லாமல் போனால் மனம் அமைதி கொள்வதுதான் எப்படி, உணர்வடக்கி, ஆழ தூங்கி, கனவுகள் அற்ற வேற்று தூக்கம் கவலையை மறக்கும் ஒளஷதம்...


நல்ல தூக்கம், எதோ ஒரு சத்தம் உடம்பை உசுப்பி விட்டு எழுப்ப செய்கிறது, தொலைக்காட்சி ஒளி ஒலி, மனிதனின் படைப்பில் இடையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி இன்று பார்க்க ஆளின்றி நிற்காமல் ஓடி ஒலி எழுப்பி கொண்டிருக்கும், தினமும் ஓடிகொண்டிருக்கும் தேவை அற்ற ஒலி ஒளி எதோ, அட இது என்ன உலகம் திடீரென்று இத்தனை பரபரப்பாகி இருப்பதாய் தோன்றுகிறது... அத்தனை ஆர்ப்பாட்டத்திலும் மனம் முதலில் தேடியது அலைபேசி எனும் ராட்சசனை தான்... ஆம் நேரம் கொள்ளும் ராட்சசன், காலை எழுவது துவங்கி, இரவு சாய்வது வரை கரங்களை விடாது பிடித்திருக்கும் தொழில்நுட்ப பேய்.. அந்த பேயிடம் தான் வெளியில் நடக்கும் கலவரத்திற்கு காரணம் தேட போகிறேன்...


அட என்ன இது இங்கு இருந்த மரத்தை காணவில்லை... என் நண்பன் எத்தனை வேகமானவன், அதிகாலையிலே வேலையை துவங்கி விட்டான் போலா.. வெட்டிய மரதுண்டங்கள் இங்கு இருக்கிறது வெட்டிணவர்களை காண வில்லையே... இது என்ன புது வலி தலைக்குள் மூச்சு முட்டும் படி வேறு இருக்கிறதே... இத்தனை நேரம் பரபரப்பாய் இருந்தா ஊரில் நிசப்தம் குடியேறியது எதனால், என் கவனம் வீட்டின் தொலைக்காட்சி ஒலியில் சாய்ந்தது

தொலைக்காட்சியில் : இன்று திடீரென்று ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டை விரிவடைய துவங்கி இருப்பதாக தகவல்கள் வர துவங்கி இருக்கிறது, இதன் விலைவாக மரங்கள் அற்ற பகுதியில் ஆக்சிஜென் அளவு குறையும் என்றும், நேரடியாக சூரிய வெட்பம் தாக்கும் அபாயம் இருப்பதால், மக்கள் மரங்கள் சூழ் பகுதியில் தஞ்சம் அடைய கேட்டு கொள்ளப்படுகின்றனர், உயிர் இழப்பு அபாயங்கள் பெரியளவில் எதிர்பாக்கப்படுவதாக ஐ நா அமைப்பு எச்சரிக்கை வெளியிட்டிருக்கிறது... உயிர் இழப்பை தவிர்க்க மக்கள் தயவுசெய்து மரங்களின் கீழ் தஞ்சம் புக கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்... ஒரு முதிர்ந்த மரம் 2 நபர்களுக்கான பிராண வாயுவை கொடுக்கும் தன்மை உடையது, ஒரு குடும்பத்திற்கு குறைந்தது இரு மரங்களாவது இந்த சூழ்நிலையில் காக்க தேவைப்படும் என்று ஐநா கூறியுள்ளது, இந்த அறிக்கை அடுத்து நாட்டில் ஆங்காங்கே மரங்களை கைப்பற்ற கொலைகளும் கலவரங்களும் நடக்க துவங்கி உள்ளது, மக்கள் கூட்டம் கூட்டமாய் அருகில் உள்ள காடுகள் மற்றும், மலைபகுதி நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.. இதனால், மலைவாசி மக்களும், காட்டில் வசிக்கும் ஆதிகுடிகளும் தடுப்புகள் ஏற்படுத்தி மக்கள் வரவை தடுக்க முயல்கின்றனர், விலங்குகள் கூட்டம் கூட்டமாய் ஒற்றை இடத்தில் சேர துவங்கி உள்ளனர்... இதனால் விலங்குகளாலும் மக்கள் கொள்ளப்படும் ஆபாயம் அதிகரித்துள்ளது... அதோடு ஆக்சிஜென் சிலிண்டர்களை ஒரு பக்கம் பதுக்க துவங்கி உள்ளனர்... அதோடு ஆக்சிஜென் சிலிண்டர் விலை 10லட்சங்களை தாண்டி விற்பனை ஆகிறது.. இதனால் பணம் படைத்தவர்கள் மட்டுமே வாழக்கூடிய சூழல் உருவாகி உள்ளது... ஏழைகள் கொத்துகொத்தாய் சாகும் கொடூரம் உலகெங்கும் அரங்கேர துவங்கி உள்ளது, இதுவரை உலகில் 10 கோடி மக்கள் உயிர் இழந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது, இன்னும் சிலநிமிடங்களில் அது நூறு கோடியை கடக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது...


தொலைக்காட்சி அலறல் செவிகளில் மரண ஓலமாய் எழுந்தது... இதோ உலகின் முடிவு என் கண்கள் அதை பார்க்கிறது... இத்தனை நாள் இல்லாமல் என் மரம் போனதும் என் மரணம் வருகிறது... ஐயோ என் குடும்பம் என்னானது... இதோ தாய் மூச்சு முடிந்து கிடக்கிறாள்... நீயும் மரமும் ஒன்றாய் இந்த வீட்டில் நுழைந்ததாய் சொன்னாய்... நான் மரத்தை கொன்றேன் நீயும் உடன் சென்றுவிட்டாய.. என்னைவிட மரம் உன்னை அதிகம் நேசித்த்து விட்டதோ... வெறும் மரத்தின் அன்பில் கூட நான் தொற்றுவிட்டேனா...? என் அன்பு பெரிதில்லையா அம்மா... என் மனம் அரன்றுகிறது, என்னைவிட மரம் உயர்ந்ததுதான்... எனக்கு சுவாசம் கொடுத்த உனக்கும் சேர்த்து சுவாசம் கொடுத்த பிரபஞ்ச தாய் மரம், அவளை கொன்றது பாவம் தான், ஆனால் அதற்கு தண்டனை என்னை கொள்வது தானே.. தாய் என்ன செய்வாள் தனையனின் தவறுக்கு...


இதோ என் கண்களும் சொருகுகிறது, என்னையும் மரணம் ஆற தழுவுகிறது... மரமே நீ என்னை விட்டு என் தாயை பிரித்தால் ஆனால் பார் என் தாய் குரல் கேட்கிறது சொர்க்கத்திலுருந்து... என்னையும் அழைக்கிறாள் நானும் செல்கிறேன்... உன்னை வீழ்த்திய பாவத்திற்கு நரகம் கேட்கிறேன்... என் தாயை கொன்ற பாவத்திற்கு அதனினும் கொடுமையான இடம் வேண்டுவேன்... வருகிறேன் இயற்கையே என்னை மன்னித்து விடு...


அம்மா : எரும மாடு இன்னுமா தூங்குற எழுந்துரு உன் பிரண்ட் வந்துருக்கான் பாரு மரத்தை வெட்ட ஆள கூட்டிட்டு... வேண்டாம் சொன்னாலும் கேக்குறதுல...வான ஒசர மரம் என்ன பாவம் பண்ணுச்சோ இவன் கண்ணுல விழுந்துருக்கு... இதோட சேர்த்து அதையும் புள்ளைய வளத்த, இப்போ ஒண்ணுத சாய்க்க இன்னொன்னு வந்து நிக்குது... டேய் எழுந்து தொலை ஆள் வந்துருக்கு பாரு...


எது இவ்வளவும் கனவா... ஆத்தாடி... என்ன கொடூரம்... டேய் மரத்தை வெட்டிடாதாடா... இதோ வந்துட்டான்...



முற்றும்...

நான் விஜய் 

Saturday, 21 May 2022

வெண்மணி : நெஞ்சில் நின்ற தீ


3 வருடங்கள் முன்பு குஜராத் கலவரம் புத்தகம் படித்து அதன் வலியில் இருந்து மீள பல மாதங்கள் எடுத்துக்கொண்டேன்.. அப்படியான ஒரு வலியை மீண்டும் புகுத்தி இருக்கிறது இந்த புத்தகம்... புத்தகம் குறித்து பார்ப்பதற்கு முன்பு ஆசிரியர் பற்றி பேசுவது மிக முக்கியமாகபடுகிறது..

இந்த புத்தகத்தின் ஆசிரியர் திருமதி. மைதிலி அவர்கள் ஒரு நடுத்தர பிராமண குடும்பத்தில் பிறந்து அமெரிக்காவில் சென்று படித்து, அந்த கனவு தேசத்தில் ஐ. நா. அமைப்பில் இந்திய தூதரகத்தில் பணிபுரிந்தவர்... கியூபாவின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு, அமெரிக்கா அரசுக்கு தெரியாமல் அங்கு பயணித்து, அதன் புரட்சியின் தாகத்தில், தனக்கான இடம் இதுவல்ல என்று உணர்ந்து இந்தியாவிற்கு ஓடிவந்து புழுதியிலும், வரப்புகளிலும் நடந்து இந்த மண்ணுக்கான விடுதலையை தேடி, எழுதி, பேசி, போராடி ஒரு முன்னோடி பெண்ணாய், பாரதியின் புரட்சி மகளாய் என் மனகண்ணில் ஒளிருகிறார்...

சத்தியத்தில் இதுவரை எந்த ஆசிரியர்க்கும் நான் இவ்வளவு பெரிய உரை இதுவரை எழுதியதில்லை, இவரை பற்றி எழுதாது இந்த புத்தகத்தை குறித்து பேசுவது கொஞ்சமும் நியாயம் சேர்க்காது என்பதாலே அவரை கொண்டே தொடங்குகிறேன், மைதிலி அவர்கள் எழுதியா 7கட்டுரைகளின் மொழிபெயர்பே இந்த புத்தகம் ஆகும், இதில் கடைசி தலைப்பு அவரே நேரடியாக எழுதியது...

இனி புத்தகத்திற்குள்...

ஒரு சமூகம் தாழ்ந்தது ஒன்று உயர்ந்தது என்று சொல்லும் ஐயோக்கியா நிலைமை தான் இன்றைய அணைத்து சமூக பிரச்சனைகளுக்கும் காரணம்... ஒரு கிராமம் எரியுட்டபடுகிறது, 44 உயிர்கள் உயிரோடு கொளுத்தப்படுகிறது, அரசோ, வேறு எந்த அமைப்போ நீதியை தேடி தருவதற்கு பதில், அவர்கள் எதனால் கொள்ளப்பட்டார்கள் தெரியுமா என்று கொலைக்கான நியாயம் பேசுகிறது... என்ன காரணம் இறந்தவர்கள் யார் ஒன்றும் அறியாத குழந்தைகள், இளம் பெண்கள், முதிர் ஆண்கள், வாயோதிக பாட்டிகள், இல்லை அவர்கள் அரிஜனங்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், அதனால் அவர்களை கேக்க நாதி இல்லை இந்த நாட்டில்...

சமத்துவம், சமதர்மம் பேசும் ஒரு கட்சியின் ஆட்சியில் நடந்த கொடூரம் தான் கீழ் வெண்மணி சம்பவம், எதற்க்காக இந்த கொலைகள், உழைத்த சம்பளத்தை உயர்த்தி கேட்டதற்கு என்பது பொதுவான கருத்து... நேற்றுவரை அடிமையாய் இருந்தவன், பின் வாசலில் கைகட்டி சேவகம் பண்ணவன், இன்று எதிர் கேள்வி கேட்கிறான், முன் வாசலில் செருப்போடு வந்து நிக்கிறான், குடியானவன் தெருவில் போராடுகிறான், அதாவது இங்கு பிரச்சனை கூலி உயர்வு அல்ல இது, ஒரு சமூக எழுச்சியை கொள்ளும் துணிவு, அடிமையை அடிமையாகவே வைக்க செய்யும் பிரயர்த்தனம், இதற்கு ஆதரவு யார் நம் வாழ்க்கை இவர்கள் மாற்றி விடுவார்கள் என்று நம்பிய அரசியல்வாதிகள்,

வெறும் கீழ்வெண்மணி கதை மட்டுமல்ல இந்த புத்தகம் பேசுவது, ரத்தினகிரி கொடுமைகளை சொல்கிறது, காருக்குடி மக்கள் தங்கள் சவங்களை புதைக்க இடுகாடு கேட்டதற்கு, போராடினால் வாழ்க்கை முழுக்க வழக்குகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று கலெக்டர்ரால் மிரட்ட படும் கொடூரத்தையும் பேசுகிறது...

இவைகள் 70களில் நடந்துவிட்டது இப்பொது என்ன இருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம், பொள்ளாச்சி சம்பவத்தை மறந்துவிடாதீர்கள் இன்னும் இந்த ஆண்டைகளின் ரத்தவெறி அடங்கவில்லை, தொடர்ந்து போராடுவது, பாதிக்கப்படும் மக்களுக்கு கைகோர்த்து நம்பிக்கை அளிப்பதுதான் இந்த பிரச்சனைகளை தீர்க்கும், என்பதைத்தான் இந்த புத்தகம் ஆணிதாரமாக பேசுகிறது... நிலவுடய்மை என்னும் ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு எத்தனை கொடூரங்களை ஒரு பிரிவு மக்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் புள்ளிவிவரத்தோடு அலசுகிறார் ஆசிரியர்.. உண்மையில்

வெண்மணி நெஞ்சில் ஓங்கி எரிந்து கொண்டிருக்கும் தீ தான்...

புத்தகம் : வெண்மணி : நெஞ்சில் நின்ற தீ
ஆசிரியர் : மைதிலி சிவராமன்
பக்கங்கள் : 96
விலை : 90
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

தீ

தீ
   அறிவிப்பு :
இந்த கதையில் வரும் பெயர்கள் (ஜாதி பெயர்கள் உட்பட), வாழுமிடம், அமைப்புகள் என அனைத்தும் என் கற்பனையே... நம்புனா நம்புங்க...

        யானை கொண்டு போரடித்த ஊர் அது, ஒரு காலத்தில் பெரிய வரலாறுகளை சுமந்து அதன் எச்சம் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் ஊர்... அந்த ஊரின் வட்டத்திற்குள் ஒருமூலையில் நாம் போகப்போகும் ஊரும் இருக்கிறது.. சுற்றி எங்கும் அழகு பொங்கும் அலாதியான மனம் எங்கும் இன்பம் பேரிடும் அற்புதமான காட்சிகள்... எந்த கதைகளை கேட்டு இங்கு வரப்பில் உயர்ந்திருக்கும் இந்த நெற்கதிர்கள் தலையாட்டுகிறதோ தெரியவில்லை, அப்படி ஒரு ஆளாபனை, எங்கும் பச்சை உடுத்தி நிலமகள் அழகுற பார்க்கிறாள்... சூரிய வீச்சு பார்வையில் அவள் அழகு இன்னும் மிளிர்கிறது.. அடடே நிலமகள் அழகில் இங்கையே நின்றுவிட்டோமே.. இவள் இப்படி அழகுற செழித்திருக்க யார் காரணம், அந்த விவசாயிகள் தானே வாருங்கள் அவர்களை தான் பார்க்க போகிறோம்... இந்த மண்ணை பொன்னாக்கியா அந்த அற்புத கரங்களை தேடிப்போவோம்

அதோ ஒரு கோவில் அருகே பெரியவால் தெரு... நீங்கள் பிறப்பில் தலையில் பிறந்திருந்தால் அங்கே நுழைந்து எளிதில் பின்னால் உள்ள குடியான தெருவில் போய்விடலாம் இல்லையென்றால் என்னோடு கொஞ்சம் இப்படி சுற்றி வாருங்கள், அந்த கோவில் பெரியவால் தெருவின் முனையில் இருக்கிறது.. ஒரு 500 வருடத்திற்கு முன்பு இந்த ஊரின் கடைசியில் இருக்கும் சேரி மக்களால் கட்டப்பட்டது, அப்போது இவர்கள் பக்கத்து ஊர், வெள்ளத்தில் தங்கள் ஊரை இழந்து இங்கு வந்து குடியேறிய போது, யாரும் மதியாமல் கிடந்த இந்த சிவன் சிலைக்கு உயிர் கொடுத்து கோவில் எழுப்பி அருகில் இருந்துகொண்டனர், சிலநாட்கள் பின்பு பெரியவால் ஒருவர் இந்த பக்கம் பசியோடு யாசகம் கேட்க வந்தபோது, இந்த கோவிலை பார்த்துக்கொள்ளும் பணியை பெற்றார், பின்பு கோவில் அருகே தன் இருப்பை நிறுத்திக்கொள்ள, அங்கிருந்த சேரி மக்கள் கொஞ்சம் தள்ளி தங்கள் குடிலை போட்டனர்... அதன் பின் அந்தப்பக்கம் வியாபாரம் பாக்க வந்த ஒரு கூட்டம், இவர்கள் விளைவிப்பதை விற்க அவர்களும் அங்கையே இருப்பை ஏற்படுத்தி கொண்டனர், அடிக்கடி பயணம் செய்யவேண்டிய அவசியம் இருப்பதால் கோவிலுக்கு அடுத்த கட்டில் தங்கள் இருப்பை சேரி மக்கள் கொண்டே ஏற்படுத்தி கொண்டனர்... இதனால் இன்னும் பின்னால் இந்த மக்கள் தள்ளிப்போய் வாழ ஆரம்பித்தனர்.


சில வருடங்கள் போன பின்பு தங்கள் வியாபாரம் செழிக்க அதன் கணக்கு வழக்குகளை பார்க்க பெரியவாலை பயன்படுத்திகொண்டார்.. பின்னர் பெரியவாளின் அறிவுறுத்தலின் படி, சேரி கூட்டத்தில் நல்ல வாட்ட சாட்டமான சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை காவலுக்கும், வசூலுக்கும் பயன்படுத்தி கொண்டார்.. சில வருடங்களில் கடும்பஞ்சம் ஏற்பட சேரி மக்கள் வியாபாரிகள் எனப்படும் குடியானவர்களை தேடி உதவி கேட்க, பெரியவாலின் அறிவுரைப்படி அதில் சிலரை தங்கள் பண்ணையில் கூலியாளாய் சேர்த்துக் கொண்டார், மிச்சம் நிலம் வைத்திருக்கும் மக்களிடம் அதிக வட்டி போட்டு கட்ட முடியாத நிலைமை உண்டுபண்ணி அவர்கள் நிலத்தையும் வாங்கிகொண்டனர்.. அதோடு அவர்கள் எல்லாரும் கடவுளின் காலில் பிறந்தவர்கள் என்பதை அவர்களுக்கு புரியவைத்து அவர்கள் இனி ஊருக்குள் வர கூடாது என்றும், இனி தங்களை ஆண்டே என்று கூப்பிட வேண்டும் என்றும் கட்டளையிட்டனர், காலில் பிறந்த கூட்டமும் சம்மதித்தது..

அதோடு அவர்களுக்கு கோவிலில் நுழையும் உரிமையும், ஆண்டை இருக்கும் தெருவில் முகப்பில் நடக்கும் அதிகாரமும் பறிக்கப்பட்டது, அதோடு கால்நடைகள் வளர்க்கும் உரிமையும் பறிக்கப்பட்டது.. ஏனெனில் அவர்கள் கால் நடைகள் ஆண்டேவின் நிலத்தில் மெய்ந்து விடுமாம், அது பெரிய தீட்டாகிவிடும், அதனால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.. காலில் பிறந்த கூட்டமும் இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் தலையாட்டியது.. இதற்கு காரணம் இவர்களின் பிறப்பை இறைவன் இப்படிதான் படைத்தான் என்று பெரியவால் சொல்ல, ஆண்டேக்களும், அடிமைகளும் நம்ப துவங்கினர்..

இதுதான் இந்த கிராமமும், மக்களும் உருவான கதை, கதைக்கேட்ட அவசரத்தில் குடியான தெருவில் நுழைந்து விடாதீர்கள், அதற்கு நீங்கள் கடவுளின் மார்பில் பிறந்த கூட்டமாய் இருக்கவேண்டும்.. பெரியவால் உத்தரவு இது... ஒருவேளை நீங்கள் அந்த கூட்டமும் இல்லை என்றால் இன்னும் கொஞ்சம் சுற்றி ஆண்டேக்களின் வீடுகளின் பின்புறம் சற்று ஒதுங்கி செல்லும் இந்த சகதி பாதையில் சென்றால் அதோ தூரத்தில் தெரிகிறது ஒரு பராதி கூட்டம், அதுதான் இந்த பூமியை ஊராக்கி, மண்ணை பொன்னாக்கிய பூர்வக்குடி, இன்று அடிமை கூட்டம், இந்த கூட்டத்தின் கதையைதான் இனி நாம் பார்க்க போகிறோம்... இந்த அடிமைகள் தாங்கள் யாரென்று உணர்ந்தால் என்ன ஆகும், அதற்கு ஆண்டேக்களும், பெரியவால்களும் என்ன செய்வார்கள் என்பதை தொடர்ந்து வாசிக்கும் போது தெரிந்து கொள்ளுங்கள்..


Thursday, 5 May 2022

சீதையின் துக்கம், தமயந்தியின் ஆவேசம்

 63/100


#NaanVijay


#நான்விஜய்


முதலில் இந்த புத்தகத்தை ஒரு நாவல் என கருதி தான் எடுத்தேன், முன்னுரையில் தெரிந்தது இது நாட்டார் வழக்கு பற்றிய புத்தகம் என்று... இன்னும் படிக்க படிக்க ஆச்சரியங்கள் கூடிக்கொண்டே போனது.. இது நம்மூர் நாட்டார் வழக்கை பேசிய புத்தகம் என்றாலும் இதில் வரும் மனிதர்கள் பாரதம், ராமாயணம் சார்ந்தவர்கள் என்பது


இந்த நூல் 4 மனிதர்களை குறித்து அதிகமாக பேசுகிறது, அரவான், கர்ணன், அரிச்சந்திரன், நளன், அதோடு சீதா தேவியும் இணைந்து கொள்கிறார்..


அரவான் என்னும் திரைப்படம் பார்க்கும் போது இதுதான் அவனது வாழ்வியல் அவன் ஒரு குற்றபரம்பரை சேர்ந்தவன் போல என நினைத்து இருந்தேன், அதை உறுதி படுத்துவது போல காவல் கோட்டம் நாவளில் படித்த சில பக்கங்களும் மனதில் ஓடின, ஆனால் கூத்தாண்டாவர்க்கும், அரவானுக்கும் இருக்கும் தொடர்பும், அவனை பற்றிய நாட்டார் கதைகளும், அவனது பிரம்மாண்ட அமைப்பை விவரிக்கும் பக்கங்களும் அதிசயம் மிக்கவை, இதுவரை பாரத கதைகளில் கர்ணனை போல என்னை ஈர்த்தவர்கள் யாரும் இல்லை, ஆனால் இந்த புத்தகத்திற்கு பின்பு அரவானின் பெரிய ரசிகனாகவே மாறிவிட்டேன் என்று சொல்லலாம்..


உலகம் ஒரு பார்வையில் பார்க்கும் போது தமிழ் மக்கள் வேறு ஒரு கோணத்தில் பல சம்பவங்களை அணுகியதை நான் உணர்ந்திருகிறேன்.. அப்படியாய் பாரத, ராமாயண கதைகளை பிறரோடு ஒப்பிடும் போது தமிழர்கள் கடத்திய செவி வழி கதைகளும், வில்லுப்பாட்டுக்களும், தோர்பாவை நிகழ்வுகளும், தெருகூதுக்களும் வேறு ஒரு ஒரு பார்வையை முன் வைக்கின்றனர் அப்படி அவர்கள் கொண்டாட நினைத்த மனிதர்களும் மற்றவர்களில் தாழ்வானவர்கள் என்று கருத்தப்பட்டவர்களும், மக்களுக்காய் தியாகங்கள் செய்தவர்களும், அநீதியை பொறுத்துக்கொண்டவர்களும் ஆவர்.. அப்படி பட்டவர்கள் தான் கர்ணன், அரவான், தமயந்தி, அரிச்சந்திரன், சீதை..


அரவான் சுற்றிய கதைகள் பல பாரத்தயிலேயே பலவாறு இருக்கிறது ஒன்று அவன் போற்கு முன்னே களப்பலி ஆனான் என்று இன்னொன்று போரில் 8ம் நாள் இறந்தான் என்றும், துரியோதனன் வதைத்தான் என்றும், கிருஷ்ணனே சூழ்ச்சி செய்து கொன்றான் என்றும் இப்படி பலவகை கதைகள் இருக்கிறது, இதில் பெரும்பாலும் கதைகள் அவனுக்கு மரணத்திற்கு முன்பு திருமணம் நடந்தது என்பதை கூற்கிறது, அதில் ஒரு கதை கிருஷ்ணனே பெண்ணாகி அவனை மணம் செய்து கொண்டான் என்றும் அவன் இறப்பிற்கு பின் மாரில் அடித்துக்கொண்டு அழுது புலம்பினான் என்றும் வருகிறது இதுவே இன்று வரை கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்று வருகிறது, அரவான் என்னும் பெயரில் இருந்துதான் 3ம் பாலினத்தவர் அரவாணி என்னும் பெயரை அடைந்திருகின்றனர்... இப்படி 3ம் பாலினத்தவரை அரவாணி என்று கூப்பிடுவதால், அவர்களை மத அடையாளங்களுக்குள் சுருக்கும் வேலை இருப்பதை அறிந்த பலர் போராடி இன்று திருநங்கை, திருநம்பி என்று அழைக்கும் சொல்பதம் வந்திருக்கிறது, இப்படி அரவானின் கதையில் 3ம் பாலினதவரின் செய்திகளையும் படங்களையும் ஆசிரியர் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு...


கர்ணனை நமக்கு நன்றாக தெரியும், அவனின் மீது கொனரப்பட்ட தீண்டாமை கொடுமைதான் தெருகூத்து கலைஞர்கலை அதிகம் பேசவைத்திருக்கிறது... தமிழகத்தில் மட்டும் 25 வகையான பாரத கதைகள் கர்ணனை வைத்து சொல்லப்பட்டிருக்கிருக்கிறது, இதில் எட்டில் எழுதமல், வாயிவழியே பேசி வழக்கொழிந்து போனவை இன்னும் ஏராளம் யாரெல்லாம் கர்ணனின் சாதியை காட்டினர் என்றால் வில்லிபாரதத்தில் அர்ஜுனன் மனைவி அல்லியை தவிர அனைவரும் அவனை அவனது ஜாதி பற்றி பேசி அவமானபடுத்தியுள்ளனர், துரியோதனன் ஒரு சமயத்தில் தன் மகள் கர்ப்பதிற்கு காரணம் கர்ணன் என்று முடிவு செய்து உன் ஜாதி புத்தியை காட்டிவிட்டாய் என்றும் திட்டி இருப்பதாக கதைகள் இருப்பதை ஆசிரியர் விளக்குகிறார்... இப்படி ஒடுக்கப்பட்ட ஒருவனை தமிழினம் கொண்டாடுவது இயல்பு


அரிச்சந்திரன் நாடலும் மன்னன் பொய்யுறையாதான் இவனை கொண்டு வசிட்டர்க்கும், விஷ்வாமித்திரர்க்கும் ஏற்படும் போட்டியே அரிச்சந்திர புராணம், தமிழகத்தில் மட்டும், வில்லுபட்டுக்காரர்கள், தோர்பாவை கலைஞர்கள், தெருகூது கலைஞர்கள் 14 வகை அரிச்சந்திர புராணம் பாடுகிறார்கள், இதிலும் பல வழக்கில் கிடைக்காத கதைகள் இருக்கின்றன, விசுவாமித்திரர் பூமியை உதைக்க அதில் இருந்து 2 பெண்கள் பிறக்கின்றனர் பிறப்பில் இவர்கள் 5ம் வர்ணத்தினர் ஆவர், இவர்களை அரிச்சந்திரனிடம் அனுப்பி அவரை கலைகளால் ஈர்த்து 2 வரம் கேட்க சொல்கிறார்... ஒன்று அவரது வென்கொற்ற குடை அல்லது ஒரு இரவு இவர்களுடன் உறவு கொள்ளுதல் என்று.. அரிச்சந்திரன் இவர்களின் கலையில் மயங்கி வரம் கேட்க சொல்ல, இரண்டையும் மறுக்கிறான், அதோடு பரப்பெண்களுடன் நாய் கூட உறவுக்கொள்ளது, நான் அதை செய்ய மாட்டேன் என்று கூறி அவமானப்படுத்தி அனுப்புகிறான், இதை அறிந்த விசுவாமித்திரர், அவர்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிட, அதை தவிர வேறு எது சொன்னாலும் செய்கிறேன் என்று வாக்கு கொடுக்க, அவன் நாடு பதவி எல்லாவற்றையும் இழந்து ஒரு சுடுகாட்டு வெட்டியானுக்கு அடிமையாய் போகிறான்  இதன் பின் பல கதைகள் நடந்து இறுதியில் தன் மனைவியை கண்டுபிடித்து அவன் பொய்யுறையாத நல்லோன் என்று தேவர்கள் வாழ்த்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருகிறார்கள்... இந்த கதை தமிழகத்தில் வரும் போது, இதை கேட்கும் மக்கள் அனைவரும் கீழ்நிலை மக்களாய் இருப்பதை உணர்ந்த கலைஞர்கள் கதையில் சிறு மாற்றங்கள் செய்கின்றனர், குறிப்பாக பரப்பெண்களோடு உறவு கொல்லமாட்டேன் என்பதை நீக்கி, அவர் ஒரு ஏகபத்தினி விரதன் அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று திரிகின்றனர்... இதனால் அரிச்சந்திரன் தமிழகத்தில் நிலைபெறுகிறான்... ஜாதியை பற்றி பேசி ஒதுக்கிய அரிச்சந்திரன் இன்று அந்த ஜாதி மக்களுக்கே கடவுளாகி இருப்பது முரண்களின் உச்சம்


தமயந்தி, திரவுபதி, சீதை மூவரும் தமிழகத்தில் கைவிடப்பட்ட பெண்களின் ஆதரஸ்ஸமாய் நிற்கின்றனர், அடங்கிய பெண்களாய் புராணங்களில் வரும் பெண்கள், நாட்டார் வழக்குகளில் ருத்ர தேவியாய் மாறுகின்றனர், அவர்களின் நியாயங்களை இந்த கலைஞர்கள் பேச வைக்கின்றனர்... தமயந்தி பல நாள் கழித்து நளனை கண்டுபிடிக்கிறாள், அப்போது நளன் சந்தேகமுறுகிறான், அங்கு தமயந்தி, குதிரைகளை அறிந்த உனக்கு என்னை அறிய அறிவில்லாமல் போனதே என்று கூறுகிறாள், வசை சொற்களை வீசுகிறாள், கோபத்தின் உச்சத்தில் திட்டி தீர்கிறாள், இதெல்லாம் புராணங்களில் வருவதில்லை, அதை போல, சீதையின் நிலையை அறிந்த சத்ருக்கன் மனைவி சுபகீர்த்தி ராமனை வசைமாரி பொழிகிறாள், நீயெல்லாம் ஒரு மனிதான என்று கடவுள் என்று அறிந்தும் திட்டி தீர்கிறாள்... இதெல்லாம் தமிழக நாட்டார் வழக்கு பாடல்கள், கலைகளில் மட்டுமே சாத்தியம்


இப்படி ஒவ்வொரு கதையின் பின்புலத்தையும் தேடி அலைந்து பல அறிய தகவலை கொண்டு இந்த புத்தகத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் ஆசிரியர்... 2 பெரும் புராணங்களின் மறுப்பக்கத்தை அறிய இந்த புத்தகம்மிக முக்கியமானவை.


புத்தகம் : சீதையின் துக்கம், தமயந்தியின் ஆவேசம்


ஆசிரியர் : அ. கா. பெருமாள்

பக்கங்கள் : 192

விலை 225

Sunday, 1 May 2022

கருப்பு சட்டை- சுகி சிவம்

65/100

#NaanVijay

#நான்விஜய்

வேர்ட்ஸ் ஒர்த் புத்தக நிலையம் சார்பில் 03.01.16 அன்று நடைபெற்ற புத்தக கண்காட்சியில் வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 11, நூலை வெளியிட்டு ஐயா சுகி. சிவம் பேசிய உரையே இந்த புத்தகம்..

பொதுவாக அவரது காணொளி பேச்சுக்களில் நீங்கள் கேட்கும் தகவல்களே புத்தகமாக வெளி வந்திருக்கிறது.. சுகி. சிவம் அய்யா ஒரு ஆன்மிக பேச்சாளர் என்றாலும் சிறந்த பகுத்தறிவாலர் என்பதை அவரது பேச்சில் நம்மால் உணரமுடியும் அதனாலே பல சர்ச்சைகளில் ஒரு கூட்டம் அவரை சிக்க வைக்க பலநாட்களாக போராடி கொண்டிருக்கிறது...

அப்படி இருக்க இந்த புத்தகத்தில் பெரியார் சிந்தனைகள் ஏன் இந்த நாட்டுக்கு தேவை என்றும், விவேகானந்தர் அசைவம் சாப்பிட்டவர் என்று  பல கருத்துகளை முன் வைப்பதோடு அதற்கும் இன்றைய முட்டாள் தனமான அரசியல்கும் சம்மந்தம் இல்லை என்பதையும் புரிய வைக்கிறார்..

கி. வீரமணி அவர்கள் எழுதிய புத்தகம் என்பதால் நாத்திகத்தை தூக்கி பிடிக்கும் செயலாக இல்லாமல் பகுத்தறிதல் என்ற தளத்தில் இதை படிக்கும் பொழுது.. ஒரு சிறந்த சிந்தனையாளனின் பேச்சாக நிச்சயம் இந்த புத்தகம் மிளிரும்...

புத்தகம் : கருப்பு சட்டை
பக்கங்கள் : 32
ஆசிரியர் : சுகி. சிவம்
பதிப்பகம் : திராவிடர் கழகம்.
விலை : 30