Monday, 31 October 2022

நண்பனின் தந்தை - புத்தக பார்வை

103/110

#NaanVijay

நான் விஜய்

எழுத்தாளர் அசோக மித்திரன் அவர்களின் இரண்டு குறுநாவலும், 3சிறுகதையின் தொகுப்பே இந்த புத்தகம்,

வேறு மண்ணில் பிறந்து தமிழ்நாட்டிற்கு வந்து இங்கே தன்னை ஒரு சிறந்த எழுத்தாளராய் நிலைநிறுத்தி கொண்டவர் ஆசிரியர், இவரின் பல படைப்புகள் இந்திய மொழிகள் பலவற்றுள் மொழிபெயர்க்கபட்டுள்ளது, இந்த நூற்றாண்டின் சிறந்த படைப்பாளிகளில் இவரும் ஒருவர்..

ஒரு நாவல் என்பது அல்லது சிறுகதை என்பது அது எழுதப்பட்ட காலத்தின் பிரதியாகும், நமக்கு 2ம் உலகப்போரை பற்றி தெரிந்திருக்கும் ஆனால் அதை சிலவரிகளில் கடந்து இருப்போம், அந்த போர் நடக்கும் போது இந்தியா எப்படி இருந்தது, இங்கிருந்த மக்களின் மன நிலைமை என்ன? இங்கு இருந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? போன்ற கேள்விகளுக்கு நம்மிடயே பதில் இருக்காது.. அந்த கேள்விக்கான பதில் என்பது அந்த காலத்தை மையமாக கொண்ட எழுத்தாளர்களின் எழுத்துகளே ஆகும்,

சங்ககாலம் என்பதையும் அதற்கு முட்பட்ட காலத்தையும் நம்மிடையே இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்கள் எப்படி ஆதாரமாய் நின்று விளக்குகிறதோ, அது போல ஆசிரியரின் பம்பாய் 1944 என்கிற குறு நாவல் அன்றைய மக்களின் ஆசாதாரண சூழலை பேசுகிறது, அவர்களின் உணர்வுகளை நமக்கு கடத்துகிறது...

லீவ் லெட்டர் எனப்படும் இன்னொரு குறு நாவல் ஒரு சிறுவனை கதை சொல்லியாக்கி அவனை கொண்டு தன் அப்பாவின் பணி சூழலை புரியவைக்க முயற்சி செய்வதும், 2மனைவிகளை உடைய ஒருவரின் மன நிலையையும் ஓர் குடும்பம் அதனால் சந்திக்கும் சிக்களையும் அதையும் மீறி இருக்கும் ஒரு துளி காதலையும் இயல்பாக பேசி இருக்கிறது,

இவைகள் இல்லாம இன்னும் 3 சிறுகதைகளும் இருக்கிறது நண்பனின் தந்தை என்னும் கதையில் ஒரு எல்லாவற்றையும் இயல்பாக கடக்கும் ஒருவன் தன் தந்தை மரணத்தை எப்படி ஏற்றுக்கொள்கிறான் என்பதை 3நபராய் நின்று பார்த்து கதை சொல்லி இருக்கிறார் ஆசிரியர்

ஹார்மோனியம் வாசிக்கும் ஒரு ஏழை யாசகனின் சில நொடி சந்திப்பை, அவனின் திறமை என்று 2பக்கங்களில் ஒரு சிறு ஆய்வு போல அந்த நொடிகளை விளக்கி, அதன் வலியையும் நமக்கு கடத்த முயற்றிருக்கிறார்,

மூன்றாவது கட்டைவண்டி என்னும் சிறுகதை, இந்த மூன்று சிறுகதைகளும் அந்த 2குறு நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்மட்டில், 2-3 பக்கங்களில் முடிந்தாலும் ஒரு செய்தி சொல்லி கடந்துபோகும் ஒரு நிகழ்வு போல இருக்கிறதே அன்றி ஒரு கதையாய் மனதில் நிற்கவில்லை, இது என்னுடைய புரிதல், ஆனால் 2 குறு நாவல்களும் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார், என்ன மாதிரியான மன நிலைமையை பேசுகிறார் என்பதை மிக தெளிவாய் புரியவைக்கிறது..

இந்த குறு நாவலும், சிறுகதைகளும் 2010-11 காலகட்டத்தில் எழுதப்பட்டவை, இந்த காலகட்டத்தில் அமர்ந்து 2ம் உலகப்போரின் நிகழ்வுகளை கதையாக்கி இருப்பது அவரது மனோபலத்தின் வலிமையை புரியவைக்கிறது.

புத்தகம் : நண்பனின் தந்தை
ஆசிரியர் : அசோக மித்திரன்
பக்கங்கள் : 112
விலை : 100
பதிப்பகம் : நற்றிணை

Saturday, 29 October 2022

தேசாந்திரி - புத்தக பார்வை

100/100

#NaanVijay

நான் விஜய் 

உலகம் முழுக்க சுற்றி வரவேண்டும் என்பது பலபேரின் கனவு, சிறுவயதில் ஜாக்கி சான் நடித்த அரௌண்ட் த வேர்ல்ட் என்ற திரைப்படம் எப்படி பட்ட ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று வார்த்தைகளால் விளக்க முடியாது, இன்றும் ஜீன்ஸ் என்ற திரைப்படத்தில் 7உலக அதிசயமும், கடைசியில் வந்த டைனாசூரும் தான் மனதில் ஆழ நின்றயிருக்கிறது, பயணங்கள் தான் உலகின் பெரிய மாற்றங்களை, போர்களை, கொடூரங்களை,  நம்பிக்கைகளை, வாழ்க்கையை தந்திருக்கிறது என்று அறுதியிட்டு கூறுபவன் நான், நீங்கள் எவ்வளவு பயணம் செய்கிறீர்களோ அவ்வளவாய் வாழ்ந்திருக்கிறீர்கள், புத்தகங்களும், பயணங்களும் மட்டுமே உலகை மனிதனுக்கானதாய் மாற்றுகிறது, அந்த நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக்கொண்டேன் இந்த புத்தகத்தின் மூலம்.. 

ஒரு பயணம் என்பது புகைப்படம் எடுக்க மட்டுமல்ல, பல நாட்கள் என் நண்பர்கள் ஒரு பகுதிக்கு சென்றதும் கேமரா ஓன் செய்து முன்னாடி நின்று அந்த இயற்கையை கொஞ்சமாய் படம் பிடித்துவிட்டு அங்கிருந்து நகர்வர், அதை முற்றுமாய் வெறுப்பவன் நான், நின்று நிதானித்து ரசிக்கவே பயணங்கள், ஒரு பயணம் அந்த இடத்தை பற்றியது மட்டுமல்ல அது ஒரு வாழ்வியலை பற்றியது, அங்கிருக்கும் ஒரு உலகம் ஒரு வியப்பு அதை புரிந்துகொள்ளுதல் அவசியம் ஆகிறது... 

ஒரு இடத்தில் ஆசிரியர் சொல்கிறார் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு மேகங்கள் என்று எத்தனை உண்மை, மழைக்கால மேகம் கூட சென்னையில் ஒன்றாய் ஊட்டியில் ஒன்றாய், மும்பை ஒன்றாய் இருப்பதை நேராக பார்த்திருக்கிறேன், ஒவ்வொன்றும் ஒரு பிரம்மாண்டம் இயற்கையின் அதிரூபம்..
சில இடங்களில் பயணங்கள்  மனிதர்களை காட்டும், சில மனிதர்கள் பயணங்களை காட்டுவார்கள், இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் என் பயணங்களை நினைவு படுத்தியது, ஆசிரியர் போல இந்தியாவை குறுக்கும் மருக்குமாய் நான் அலைந்தது இல்லை, ஆனால் என் வரையில் சில பயணங்கள் கொடுத்த அனுபவங்களை இங்கே ஏக்கதோடு திரும்பி பார்த்துக்கொள்கிறேன்,

ஒரு பயணம் கலை சார்ந்தோ எதோ ஒரு நோக்கம் சார்ந்தோ கூட இருக்கலாம், ஆனால் அதில் நீங்கள் இதை பெற்றுக்கொள்ள போகிறீர்கள் என்பது பயணம் தான் முடிவு செய்யும், சிற்பங்களை, ஓவியங்களை பார்க்க சென்ற ஆசிரியருக்கு பயணம் அறிமுக படுத்தியது டீ கடை நடத்தும் ஒரு வயதானவரை, பஸ் ஸ்டாண்டில் உடல் நலமற்று கிடந்தவரை சரி செய்த அந்த நல்ல உள்ளத்தை அந்த சிற்பங்களும், ஓவியங்களும் மறைக்க முடியவில்லை, அந்த பயணம் அந்த நல்ல மனிதரை ஆசிரியர்க்கு அறிமுகபடுத்தி இருக்கிறது... இப்படி ஒரு பயணம் அது தரும் அனுபவத்தை அதன் முடிவில் மட்டும்தான் அவதாணிக்க முடியும், சில முடிவுகளை பயணங்கள் தான் எடுக்கும்,  இவைகள் தான் என் பயணங்களும் இந்த புத்தகமும் எனக்கு சொல்லி கொடுத்தவை

இறுதியில் ஆசிரியர் சொல்லி இருப்பார் எல்லா பயணங்களும் என் வீட்டில் வாசலில் இருந்துதான் உலகம் தொடங்குகிறது என்பதை காட்டுவாதாக எத்தனை சத்தியமான வார்த்தை, பல நாட்கள், மும்பையிலும், அஹமடாபாத் இருந்து மீண்டும் சென்னை திரும்பும் போது சென்னை உங்களை வரவேற்கிறது என்கிற வார்த்தை பலகை மனதுக்கு தரும் ஒரு நிம்மதி எப்படிபட்டது என்றால், பல நாள் தாயை பிரிந்த கன்று மீண்டு சந்திக்கும் போது ஒரு ஏக்க ஓசை எழுப்பும், ஒவ்வொருமுறை சென்னையை சில நாட்கள் கழித்து பார்க்கும் போது என் மனம் அதே ப்ரேமையில் சிக்கி கொண்டிருந்ததை ஒவ்வொருமுறையும் உணர்ந்திருகிறேன், இல்லம் வருவதும் பயணத்தின் ஒரு பகுதிதான் ஆனால் எந்த முறையும் அது எனக்கு வேறொரு உணர்வை கொடுத்ததில்லை, ஒவ்வொருமுறையும் என்னை ஏற்றுக்கொள்ளும் இல்லம் ஒரு தாய் மடியாகவே அரவனைக்கிறது..

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே...!
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ?
 மன காட்சி பிழைதானோ..?

மகாகவி பாரதி

புத்தகம் : தேசாந்திரி
ஆசிரியர் : எஸ். ரா
பக்கங்கள் : 257
விலை : 275
பதிப்பகம் : தேசாந்திரி

Thursday, 27 October 2022

பண்பாட்டு அசைவுகள் - புத்தக பார்வை

99/100

#NaanVijay

நான் விஜய்

எப்பொழுதும் கல்கியின் பித்தால் நாவல்கள் மட்டுமே படித்துகொண்டிருந்த எனக்கு ஒரு நாள் சுயமுன்னேற்ற புத்தகங்களின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது அதற்கு காரணம் என் பணி சூழல், அதோடு சில லைட் ஹெர்டிட் கட்டுரை புத்தகங்களையும் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது அதன் நீச்சியாக ஒரு Raghu Raavan அறிவுரை படி தொ. ப படிக்க ஆரம்பித்தேன், அன்றுதான் உண்மையில் நான் சரியான முறையில் புத்தகங்கள் படிக்க தொடங்கியதாய் உணர தொடங்கினேன், ஒரு சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், எல்லாமும் எளிதாய் கிடைகின்ற ஒரு நாகரிகத்தில் தில்லைய்துகொண்டிருக்கிறோம், எல்லாமும் எளிதாய் நடந்துவிட்ட ஒரு வாழ்வியலை அடிப்படையாய் கொண்டிருக்கிறோம், ஆனால் இதன்பின் உள்ள அரசியல் என்ன? நாம் தொலைத்த மரபு என்ன? நான் பார்க்கும் மனிதர்களின் வாழ்க்கை எப்படிபட்டது? நான் வணங்கும் கடவுளர்கள் யார்? ஏன் ஒரு கடவுள் ஊருக்கு வெளியில் உள்ளது? ஏன் எல்லோரும் எல்லா கடவுளையும் வணங்குவதில்லை? ஏன் சில கடவுள்கள் மட்டும் கோட்டை போன்ற கோவில்களில் இருக்கின்றன? ஏன் சில கற்கள் கடவுளாக்க பட்டிருக்கிறது? நான் நம்பும் புராணத்திற்கும் இன்றைய கடவுளுக்கும் என்ன தொடர்பு? இந்த கடவுளுக்கும் என் வாழ்வியளுக்கும் என்ன தொடர்பு?

என் உணவு முறை இப்படி இருக்க காரணமென்ன? என் முந்தைய தலைமுறை என்ன உண்டிருக்கும்? அவர்களாய் விரும்பி உண்ணார்களா? அல்லது திணிக்கப்பட்டதா? இந்த உடைகள் எப்படி மாறியது? இப்படி கேள்விகள் நீள தொடங்கியது... எங்கோ நடக்கும் ஒரு கூட்டத்தில் ஒருவர் போட்ட கையெழுத்து ஒரு சமூகத்தையே மாற்றுமானால் அதன் விளைவுகள் தெரிவிக்க படுவதில்லையே ஏன்? யாருக்காக இந்த அரசியல் என்று மனம் தவிக்க தொடங்கியது அதற்க்கான பதிலை இன்றைய நாட்களில் தேடினால் எப்படி கிடைக்கும் அதன் வேரில் அறிதல் வேண்டும் அதற்கு வானமாமலை, தொ. ப, பக்தவச்சல பாரதி, அ. க பெருமாள் போன்றோர் துணை தேவைப்படுகிறது..

பண்பாட்டு அசைவு என்பது அறியப்படாதா தமிழகம் மற்றும் தெய்வங்களும் சமூக மரபுகளும் என்னும் இரண்டு புத்தகங்களின் தொகுப்பாகும், இதை மக்கள் பதிப்பாய் முயல் கூடு பதிப்பகம் 75ரூபாய்க்கு வெளியிட்டது 208 பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய தகவல் களஞ்சியம் இந்த விலைக்கு என்பது பாராட்டதக்க முயற்சி, நல்ல தரமான தால்களில் வெளியிட்டிருக்கின்றனர் ஆயினும் சிறிய மனவருத்தம், என் கண்ணுக்கே புலப்படும் அளவுக்கு அத்தனை எழுத்து பிழை, ஒரு பெரிய எழுத்தாளர்க்கு மரியாதை செலுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்த முயற்சியில் இது ஒரு சிறிய தவறாக கருத்த முடியவில்லை, இதை பதிப்பகத்தார் கவனத்தில் கொள்ளுதல் முக்கியமாகும்

அறியப்படாதா தமிழகம் பற்றி ஏற்கனவே என் பார்வையை தனிப்பதிவாக போட்டிருப்பதால் எஞ்சிய பகுதியான தெய்வங்களும் சமூக மரபுகளும் பற்றி என் பார்வையை இதில் முன்வைக்கிறேன்

தெய்வம் என்றால் என்ன எத்தனை வகை தெய்வம் உள்ளது, எதானல் ஒரு தெய்வம் பெரியது என்று இன்னொன்று சிறியது என்று அழைக்கப்படுகிறது அதற்கு பின் இருக்கும் இலக்கிய சான்றுகள் என்று ஒரு குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பது போல் ஆரம்பம் முதல் தாய் வழி மரபில் தொடங்கி இன்றைய தெய்வ வழிபாடு வரை அழகாக சொல்லி இருக்கிறார்

சிறுதெய்வங்கள் யார் இந்த சொல்லாடல் எங்கிருந்து வந்தது, யாரெல்லாம் சிறுதெய்வம், சிறுதெய்வம் யாருக்குறியது, என்னென்ன வழிபாடுகள் இருக்கின்றன, எவையெல்லாம் இன்று எஞ்சி இருக்கிறது என்பதை பற்றிய விளக்கங்கள் தெளிவு பெறவைக்கிறது

பலராமன் என்பவன் ஒரு தசவதாரம் என்றும் அதை சுற்றிய சில கதைகள் மட்டுமே தெரிந்த எனக்கு, இந்த புத்தகம் பல ஆச்சரியங்களை வைத்திருக்கிறது.. இரு வகை தொழில்கள், அவர்களை குறிப்பால் உணர்த்தும் இரண்டு கடவுள்கள், அவர்களுக்கு இந்திரன் என்னும் கடவுளோடு இருக்கும் பகை அதற்கு பின் இருக்கும் அன்றைய காலகட்ட அரசியல் என்று திணறவைக்கிறார், தாய்வழி சமூகத்திற்கும் தந்தை அதிகார சமூகமாற்றத்திற்கும் பலராமன் கதையை கொண்டு சொல்லும்போதுதான் அந்த கதையின் உண்மை அர்த்தம் புரிகிறது, கோவர்த்தன மலையை தூக்கிய கண்ணனுக்கும் இந்திரனுக்கும் உள்ள சண்டையின் உள்ளர்த்தம் இதுவரை நான் கேள்விப்படாத ஒன்று, இப்படி அநேக ஆச்சரியங்கள் இந்த அத்தியாயத்தில் வைத்திருக்கிறார்.

அழகர்கோவில் இதுவரை நான் நேரில் கண்டதில்லை, ஆனால் அதை கண்முன்னே ஒரு முப்பரிமான வடிவமாக கற்பனை செய்யும் அளவுக்கு அங்குல அங்குலமாய் விலகி இருக்கிறார், அதனுள் இருக்கும் வைணவ மத நிறுவனத்தின் அரசியலையும், அந்த அமைப்பில் இருக்கும் பல ஆகம விதி மீரல்களையும், இருந்து வைணவம் அதை கொண்டாடுவதற்க்கான காரணமும் இன்னொரு வகையான மத போட்டியை புரியவைக்கிறது, இந்த மத போட்டியில் சாமானியனின் உணர்வுகள் எப்படி கைப்பற்ற பட்டது சைவத்திற்கு எதிராக தன்னை நிறுத்திக்கொள்ள அழகர் கோவில் போன்ற நிலையங்கள் எப்படி பயன்பட்டன என்பது போன்ற தகவல்கள் இனி அந்த கோவிலை பார்க்கும் பிம்பதையே மாற்றி விடும்

கள்ளர் இனத்திற்கும் அழகருக்கும் உள்ள சம்மந்தம் என்ன? கோவிலில் உள்ள 100ம் மேற்பட்ட கல்வெட்டு ஒன்றில் கூட கள்ளழகர் என்ற சொல் இல்லாத போது வழக்கத்தில் வந்தது எப்படி? மேல்நாட்டு கள்ளரின் உடைகளுக்கும் அழகருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? வேறு எந்த சமூக மக்களெல்லாம் அழகரின் வழிபாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர் ஏன்?, அழகருக்கு மட்டும் இப்படியா வேறு ஏதேனும் வைணவ தளங்களும் இப்படி முரண்பட்ட, வேதங்களை மீறின வழிபாட்டு முறைகளை கொண்டிருக்கின்றனவா? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் உள்ளே பதில் இருக்கிறது..

தாய்வழி சமூகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி நில உடைமை அல்லது சொத்ததிகார சமூகத்தில் வந்திருக்கும் நாம், அந்த உரிமை அதிகாரம் கோவிலுக்குள் எப்படி போனது அங்கிருந்து அது எப்படி மீட்க பட்டது, ஏன் சிவ பெருமான் உடையார் ஆனார், ஏன் விஷ்ணு ஆழ்வார் ஆனார் இந்த பெயர்களுக்கும் உடைமை அதிகாரத்துக்கும் என்ன சம்மந்தம், நாட்டார் வழகியலில் இவைகள் ஏன் முக்கியம் பெறுகின்றன, இவைகளை பல ஆதரங்களுடன் ஒவ்வொன்றாய் விளக்குகிறார் ஆசிரியர். அதோடு உடைமைக்கும் ஒழுக்கத்திற்கும், ஒழுக்கத்திற்கும் கடவுளுக்கும், பெண்ணுக்கும் உள்ள தொடர்புகளை புரியவைக்கிறார், பரத்தையர் என்ற பிரிவு ஏன் மத நிறுவனங்களால் கொண்டுவரப்பட்டது, அதன் பின் இருக்கும் அதிகார காரணம் என்ன, என்று ஒரு பெரிய ஆய்வயை மிக எளிதாய் புரியவைக்க முயண்டிருக்கிறார்..

வைணவம் இங்கிருந்த பல சமயங்களோடு சண்டையிட்டு தன்னை எப்படி நிறுத்திகொண்டது, சைவம் போல தமிழ்நாட்டில் அரசு உதவி பெறாமல் சாமானியர்களை எப்படி ஈர்த்தது, எப்படியெல்லாம் சாதிய நிறுவனத்திற்கு வாழைந்துகொடுத்து தன்னை காத்து கொண்டது, ராமானுஜர் போன்ற ஞானிகள் அந்த மதத்தை எப்படியெல்லாம் நிலை நிறுத்தினர், அனைத்து மக்களையும், முக்கியமாக தன்னை ஒரு நாட்டார் வழக்கியல் பிரிவோடு இணைத்து கொண்ட மதமாக வைணவம் எப்படி செயல்பட்டது என்றெல்லாம் பல நிகழ்கால செய்திகளை கொண்ட புரியவைக்கிறார்.

பார்ப்பனர் என்பர் யார்? அந்த பெயருக்கானா அர்த்தம் என்ன? அவர்கள் வருகைக்கு முன்பு இங்கு பூஜித்தவர்கள் யார்? இளையர் பார்ப்பனர் என்றால் அவர்களின் மூத்தவர் யார்? பறையரும் பார்ப்பனரும் ஒரு தொழில் புரிந்தவர்கள் என்பதற்கு இன்றும் பல திருவிழாக்களில் பறையர் சமூக மக்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை அடையாலமாக எஞ்ஜி இருக்கிறது, எனில் அவர்கள் இடத்தை பார்ப்பனர் பிடித்தது எப்படி? இப்படி கேள்விகள் நீள அழகான விளக்கங்கள் தரப்பட்டிருக்கிறது

1939ல் அரிசன ஆலய பிரவேசம் நடக்கிறது, இதற்கு காரணம் காந்தி அதை எதிர்த்தவர் அம்பேத்கர், சொல்லும் பொழுதே வினோதமாய் இருக்கிறதல்லவா, ஆமாம் மதுரையில் வைத்தியநாத அய்யர் நடத்திய அரிசன ஆலய நுழைவுக்கும் பூனா ஒப்பந்ததிற்கும் உள்ள தொடர்பை இந்த பகுதியில் ஆசிரியர் விளக்குகிறார், பட்டர்பிளை எபெக்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு, அதாவது எங்கோ நடக்கும் சிறு விஷயம் இன்னொரு இடத்தில் நடக்கும் பெரிய மாற்றத்திற்கு காரணம் ஆகும், இதுவும் அப்படியே, அம்பேத்கார் ஆலய நுழைவு எனக்கு இப்போது அவசியமற்றது, எங்கள் மக்கள் முதலில் படிக்கட்டும், நல்ல வேளையில் அமரட்டும் ஆலய நுழைவு தானாய் நடக்கும் என்று காந்தியின் ஆலய நுழைவு போராட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார், அதே சமயம் ராஜாஜி தன்னுடைய ஆதரவாலரான வைத்தியநாத அய்யரை கொண்டு மதுரையில் ஆலய நுழைவு போராட்டம் நடத்திக்காட்டுகிறார், இவைகள் ஒன்றோடுன்று தொடர்பு கொண்ட காங்கிரஸ்ஸின் சித்து விளையாட்டுக்கள், காந்தியின் பூனா ஒப்பந்ததை மறைக்க செய்த முயற்சிகள், இன்னும் இதைப்பற்றி பலவிளக்கங்களும் அதானல் மதுரையில் நடந்த வினோத சம்பவங்களையும் ஆசிரியர் விளக்கி இருக்கிறார்...

இன்னும் நமது சமூகத்தை தெரிந்துகொள்ள இதை போன்ற புத்தகங்கள் அவசியம் ஆகிறது.. இவைகள் தான் நாம் யார் என்கிற அடையாளத்தை நமக்கு கொடிட்டு காட்டுகிறது.

புத்தகம் : பண்பாட்டு அசைவுகள்
ஆசிரியர் : தொ. ப
பக்கங்கள் : 208
விலை : 75
பதிப்பகம் : முயல் கூடு

Wednesday, 26 October 2022

ஜானு - புத்தக பார்வை

98/100

#NaanVijay

நான் விஜய்

இந்தியா என்னும் நாட்டின் இறையான்மை என்னும் பொய்யை சில புத்தகங்கள் முகத்தில் காரி உமிழ்ந்து கிழிதெரியும், சில கட்சிகள் தங்களை பாமரர்களின் கட்சிகள் என்று மார்தட்டிக்கொள்ளும் போது நெஞ்சில் மிதித்து கேள்விகேட்கும், சில மாநிலத்தின் அழகில் நாம சிலாக்கிது நிற்கும் போது அதன் கொடூரபக்கங்களை நம் கண்முன்னே வரிவரியாய் காட்டும், இதையெல்லாம் ஒரே புத்தகம் செய்தால் அந்த புத்தகம் ஒருவரின் வாழ்வின் பயணங்களாய் இருந்தால்...

ஸி. கே ஜானு வயநாட்டின் போராளி பெண், இதற்க்கு முன்பு இப்படி ஒரு பெயரை கேட்டிருக்கிறீர்களா, நான் கேள்விக்கூடபட்டதில்லை, ஆனால் இன்று வியந்து பார்க்கிறேன், இந்தியாவின் மலையின மக்களின் முகவரியாய் ஐ. நா. வின் படிக்கலை ஏறிய ஒரே இந்திய பெண், இவர் வாழ்வியலை படியுங்கள் பின்பு கேரளா கடவுளின் தேசமாய் தெரியாது, பிணம் தின்னி கழுகின் கூடாரமாய் தெரியும், கம்யூனிஸ்ட்கள் போராளிகளாக தெரிய மாட்டார்கள், கொடூர பொறுக்கிகளாய் தெரிவார்கள்...

இந்த புத்தகம் காட்டை பற்றி ஆரம்பிகிறது, அதன் வாழ்வியலை பேசுகிறது, அதன் அழகை காட்டுகிறது, அங்கிருப்பவர்களின் தனித்தன்மையை போற்றுகிறது, மலையின மக்களை வாழ்த்துத்துகிறது...

கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் காட்டு வேலை போக மீதி நேரத்தில் பண்ணையாரிடம் செய்த வேலைகளை பேசுகிறது, அப்படி வேலை செய்யும் போது எங்கிருந்தோ வந்த கட்சியினர் அவர்களை வாழ்க ஒழிக கோசம் போட வண்டியில் ஏற்றி சென்றதை கூறுகிறது, அந்த கட்சியின் கொடியில் இருந்த சுத்தியலும் அறிவாலும் எதோ ஒன்றை பேச, எதற்கென்றே தெரியாமல் நின்ற மலையின மக்களின் அறியாமையை பேசுகிறது..

உங்கள் நிலத்தை காப்பற்றுகிறோம் வா போராடுவோம் என்றது கட்சி, உனக்கு சம்பள உயர்வை தருகிறேன் வா போராடுவோம் என்றது கட்சி, உன் வாழ்க்கையை வசந்தமாகிறேன் வா என்றது கட்சி, இதையெல்லாம் அழிப்பவர்கள் பண்ணையார்கள் என்றது கட்சி... ஆவேசம் பொங்க அந்த கூட்டம் போராட்டத்திற்கு போனது... போனபின் ஒவ்வொருவர் முகத்தை பார்த்து இப்படியாய் பேசிக்கொண்டது, ஏலே மேடையில இருக்கிறது உங்க பண்ணையாருதான, அட ஆமாம், பக்கத்துல பாரு உன் பண்ணையாரு உக்காந்துட்டு இருக்காரு... அட இது என்னப்பா அவங்கள எதிர்த்து போராட அவங்களே வந்திருக்காங்க என்று ஆச்சரிய ஓசைகள்...

சிகப்பு நிற கொடி கட்சியின் தலைவர்கள் அவர்கள் மேடையில் அமர்ந்த பண்ணையார்கள், இதுதான் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மலையின மக்களுக்கு செய்த போராட்ட வல்லமை..

ஒரு காலத்தில் கட்சி ஆட்கள் மலையின மக்களின் ஆண்களை எங்கோ கூட்டி சென்றார்கள் வகை வகையாய் மது வாங்கி கொடுத்தார்கள், பல வித புகையிலை கொடுத்தார்கள் பதிலுக்கு அந்த ஆண்களின் நிலங்களை பெற்றார்கள், அவர் வீட்டு பெண்கள் கட்சிகாரர்களின் பிள்ளைகளை பெற்றார்கள், இருந்து அந்த கட்சிகள் இவருங்களுக்கானது என்று சாராய வாடையில் நம்ப வைத்திருக்கிறார்கள்,

இந்த பெண்கள் என் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற அதிமேதாவிதன கேள்விகள் எழுவது இயல்பு, விடிந்தால் கட்சி காரர்களின் தோட்டத்தில் தான் வேலை, அவர்கள் கொடுப்பதுதான் சம்பளம், தங்கள் நிலத்தில் இன்று கூலியாய் வேலை செய்ய அவர்கள் அனுமதி வேண்டும், எனில் இந்த அரசாங்கம் என்ன செய்கிறது...

மலையின மக்கள் யானைக்கூட்டத்திற்கு தொந்தரவாய் இருக்கின்றனர் என்று அவர்களே சில யானைகளை ஊருக்குள் புகவிட்டு அவர்களை விரட்டுகிறது, அவர்களே காட்டு தீயை உண்டாக்கி, உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று துரத்துகிறது, அதையும் மீறி போக வில்லை என்றால் இவர்கள் தான் கொளுத்தினார்கள் என்று பழியிட்டு உள்ளே தூக்கி போட்டு மிதிக்கிறது.. மீறி இருந்தால் ஒரு நாள் காட்டுதீ அவர்கள் குடிசையை லாவகமாக எரிக்க உதவியாய் இருக்கிறது...

மழையினமக்கள் தங்கள் பிணங்களை எரிக்கும் இடம் கூட இன்று பட்டா போட்டு கட்சிக்கும் பண்ணையார்களுக்கும் கொடுக்கப்பட்டுவிட்டது, 1856ல் வெள்ளையர்கள் மலையின மக்களை துரத்தி அடிக்க பயன்படுத்திய காட்டு பாதுகாப்பு சட்டத்தை இன்று பத்திரப்படுத்தி அவர்களை சரியான முறையில் விரட்டிகொண்டிருக்கிறது..

இதில் சிலரே எதிர்த்து நிற்கிறார்கள் அதில் ஒருவர் தான் ஜானு, தன் மக்களுக்காய் அதிகாரத்தை கேள்விக்கேட்டார், கட்சியை தூக்கி எரிந்தார், முதல்வர் வீட்டு வாசலில் நின்று நியாயம் கேட்டார், தலைமை செயலகத்தின் வாசலில் கூடாரமிட்டு அதிகாரத்தை அலறவிட்டார், இவரின் குரல் ஒருவேளை நமக்கு கேட்காமல் போய் இருக்கலாம், ஆனால் உலகம் கேட்டது ஐ. நா கவுரவம் கொடுத்தது.. சக போராளிகளை அவரிடம் கொண்டுவந்து நிறுத்தியது, ஒரு அரசாங்கத்தை தனிடம் ஒப்பந்தம் போட வைத்தது, அந்த ஒப்பந்ததை அரசு மீறும் போது அதிரடியாய் அதை நிறைவேற்றும் வலிமையை அந்த குழுவுக்கு கொடுக்க வைத்தது,

ஒரு பெண் எழுத்தறிவில்லாமல் தானே படித்து தானே கற்று, தானே சொல்லிக்கொடுத்து, தானே போராடி, தானே எதிர்த்து, தானே நின்று, தானே உலகை திரும்பிபார்க்க வைத்திருக்கிறார்... ஆனால் இந்த புத்தகம் அவரது குரலில் ஒரு மழலை வடிவமாய் கேட்கிறது, எல்லாமும் எளிதாய் நடப்பதைப்போல கடக்கிறது, தன்மேல் விழுந்த அடிகளில் மருத்துப்போய் சுரைனையில்லாததாய் வெளிப்படுகிறது..

ஜானு மலையின பெண்களில் ஒரு விடிவெள்ளி... மக்களை ஏமாற்றும் ஆணவ அரசுக்கு எதிரான கோடாரி காம்பு...

புத்தகம் : ஜானு
ஆசிரியர் : பாஸ்கரன்
பக்கங்கள் : 80
பதிப்பகம் : காலசுவடு
விலை : 40

Tuesday, 25 October 2022

பாரபாஸ் புத்தக பார்வை

97/100

#NaanVijay

நான் விஜய்

இம்ப்ரெவாய்ஸ் என்ற சொல்லாடல் சமீப காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அதிகம் கேட்டிருக்க வாய்ப்புண்டு, ஆனால் இது இலக்கிய உலகில் பலகாலமாக நடந்து கொண்டிருக்கிறது, ஒரு சம்பவதையோ, அல்லது ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு நாவலையோ, கவிதையோ எடுத்து அதில் ஒருபகுதியையோ அல்லது அதன் ஒரு குறிப்பிட்ட மனிதரின் வாழ்வியலையோ ஒரு தனி பதிவாக வெளியிடுவது தான் அது...

தமிழிலும் இப்படி பல நூல்கள் வந்திருகின்றன, பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக பலபேர் நாவல்களை எழுதி இருப்பதை நாம் அறிந்திருகிறோம், பாரதி கூட பெரிய மஹாபாரததின் துரோபதி துகில் உரியப்படும் நிகழ்வை மட்டும் தனியே கொண்டு பஞ்சாலி சபதம் எழுதி உள்ளார். இப்படி கையாளப்பட்ட நூல்தான் இந்த பரபாஸ்..

பரபாஸ் ஒரு ஸ்வீடேன் நாவல், எழுத்தாளர் பேர் லாகர் குவிஸ்டு என்பவரால் 1950ல் வெளியிடபட்ட நூல் இது, இதற்காக அவர் இலக்கியத்திற்கன நோபல் பரிசை 1951ல் பெற்றார், அப்படி என்ன சிறப்பு இந்த நாவலுக்கு என்று பார்க்கும் போது, முதல் செய்தியே இது பரபாஸ் பற்றியது என்பது இன்னொன்று இது விவிலியத்தின் பல கேள்விகளை சாமானியனாக கேட்கிறது.. இயேசுவின் கடவுள் தன்மையை பற்றி பேசுகிறது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

யார் இந்த பரபாஸ்? இயேசுவிற்கு பதில் சிலுவையில் இருந்து விடுதலை பெற்ற கொடூரமானவன், பல கொள்ளை கொலைகளை செய்தவன் என்று சில வரிகளில் விவிலியத்தில் கடந்து போனவன், அவ்வளவு தரவுகளே அவனைப்பற்றி விவிலியத்தில் உங்களுக்கு கிடைக்கும், The Passion of The Christ என்னும் அகாடமி விருது பெற்ற ஒரு ஹாலிவுட் படம், அதில் ஒரு காட்சி இந்த புத்தகத்தை படிக்கும் போது நினைவுக்கு வருகிறது, இயேசுவிற்கு பதில் மக்கள் பிளாதுவை எங்களுக்கு பரபாஷை விடுதலை செய் என்று கோசமிடுவார்கள், பரபாசும் விடுதலை அடைந்த மகிழ்ச்சியில் துள்ளிகுதித்து ஓடுவான், அப்படி ஓடும்போது இயேசுவை தாண்டும் அந்த ஒரு நொடி அவன் பார்வையில் ஒரு மாற்றம் வரும், இவரா எனக்கு விடுதலை கொடுத்தவர் என்பது போல ஒரு பார்வை வீசுவான், அந்த ஒற்றை பார்வை தான் எனக்கு இந்த மொத்த புத்தகமாக தெரிகிறது.

பரபாஸ் நாவல் இயேசுவின் இறப்பிற்கு பின் என்ன நடந்திருக்கும் என்று விவிலியம் சொல்லாத ஒரு களத்தை காட்டுகிறது, அங்கிருக்கும் சாமானியர்கள் என்ன பேசி இருப்பார்கள், அவரை கொண்டாடியவர்கள் என்ன நினைத்திருப்பார்கள், பரபாஸ் மனநிலை எப்படி இருந்திருக்கும், அவன் இதை எப்படி ஏற்றுக்கொண்டிருப்பான், இவையெல்லாம் அந்த கணத்திலே கொண்டுப்போய் நிறுத்துகிறது,

பரபாஸ் கடவுள் நம்பிக்கை கொண்டவனில்லை, ஆனால் அவன் இயேசுவை நம்பினான என்றால் இல்லை, அவன் நம்ப முயற்சி செய்து கொண்டிருந்தான், அவனுக்கு அதிசயங்கள் நடந்ததா என்றால் ஆம் நிச்சயம் நடந்தது, ஆனால் அவன் அதை அதிசயம் என்று நம்பினான என்றால் அவனுக்கு அதில் பெரிதாக நாட்டமில்லை, அவன் கடவுளை நம்பவில்லை ஆனால் இயேசுவுக்காக எதையும் செய்ய ஒருக்கட்டத்தில் தயாராகிவிட்டான், எனில் அவன் கிறிஸ்தவனா இல்லை, இன்னும் கடவுளை தேடிகொண்டிருப்பவன், கிறிஸ்தவர்களால் வெறுக்கப்பட்டவன்.

இந்த பரபாஸ் நாவல் என்பது மதில்மெல் பூனை போல, மிகவும் கவனமாக எழுதப்பட்ட ஒன்று என்றே நம்புகிறேன், ஒருவனின் கடவுள் நம்பிக்கையயை இந்த புத்தகம் கேள்விகேட்கவில்லை, அதே சமயம் எல்லாவற்றையும் உண்மையைன்று வாதிடவும் இல்லை, இது மிகுந்த சிரமமான ஒரு முயற்சி, கொஞ்சம் பிசகினாலும் உலகின் மிக பெரிய மதத்தை இழிவு செய்த பழி ஆசிரியர் தலையில் விழுந்துவிடும், அப்படி இருக்க, இத்தனை நம்ப தன்மையோடு இதை கையாண்டதை புகழ்ந்தே ஆகவேண்டும்,

பரபாஸ் தனிமையை அனுபவிக்கும் போது இந்த நாவலில் நீங்களும் அதை உணர்வீர்கள், அவன் ஒவ்வொரு உணர்ச்சிகளிலும் நீங்கள் பயணப்படுவீர்கள் அதுவே இந்த புத்தகத்தின் மிகப்பெரிய வெற்றி, அவனின் பயணம் அன்றைய இயேசுவை நமக்கு அடையாளம் காட்டுவத்தோடு, அன்றைய மத அரசியலின் வீரியத்தையும் புரியவைக்கிறது, ஒருவரை ஒருவர் நேசியுங்கள் என்பது எவ்வளவு புதிய கொள்கை அந்த காலத்திற்கு என்பதை இந்த நாவல் புரியவைக்கிறது, அன்பே பிறதானம் என்று வாழ்ந்த ஒரு மனிதனின் மரணம் இன்னொருவனை என்னலாம் செய்திருக்கிறது என்ற கற்பனை எழுத்தின் ஆதிக்கமே

தன்னைத்தான் நேசிப்பதைப்போல பிறனையும் நேசிப்போமாக, இதுவே எல்லா கட்டளைக்கும் பிரதான கட்டளையாய் இருக்கிறது
- தோழர். இயேசு

புத்தகம் : பரபாஸ்
ஆசிரியர் : பேர் லாகர் குவிஸ்டு
தமிழில் : க. நா. சு
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 128
விலை : 100

Monday, 24 October 2022

எப்போதாவது எண்ணிப்பாருங்கள் - புத்தக பார்வை

95/100

#NaanVijay

நான் விஜய்

இந்தியா சுதந்திர போராளிகள், தங்களுக்குள்ளும் தன் குடும்பத்தினருக்கும் எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்த புத்தகம், இந்த புத்தகத்தை இந்திய ஒலிபரப்பு அமைச்சகதுக்காக தொகுத்து வழங்கியவர் வானொலி புகழ் சரோஜ் நாராயன்சாமி,

இந்த புத்தகம் மிக முக்கிய கடிதங்களின் கோர்வை மட்டுமல்ல இவைகள் அன்றைய இந்தியாவை, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடுமைகளை, நம் தலைவர்களின் வீரத்தை பறைசற்றுகின்றது, ஜான்சி ராணி தொடங்கி நேதாஜி வரை ஒவ்வொரு கடிதங்களும் ஒவ்வொரு வரலாற்றை பேசுகிறது, இதில் நான் கற்றுக்கொண்ட அல்லது புரிந்து கொண்ட சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

1, மன்னர்கள் காலத்தில் ஆங்கிலயேர்க்கெதிரான போராட்டம் என்பது நாடு தழுவியதல்ல அவைகள் மாகாண போராட்டங்களே, ஒரு குறிப்பிட்ட மாகாண அரசுக்கும் ஆங்கிலேயர் எதிரான போர் மட்டுமே

2, சமஸ்தானங்கள் தங்கள் நலனை கருதியே போரிட்டனவே அன்றி ஒருங்கிணைந்த இந்தியாவிற்கனா போர் அது கிடையாது

3, இணைந்து போறிட்ட மன்னர்களுக்கும் கூட வெற்றிக்கு பின் அதை யார் சொந்தமாக்கி கொள்வது என்பதில் போர் தொடங்குவதற்கு முன்பே சண்டை ஏற்பட்டிருக்கிறது.

4, ஒன்றுபட்ட மன்னர்களுக்கு கூட ஒற்றுமை என்பது துளி அளவுக்கும் இருந்ததாக புலப்படவில்லை, இது சுயநல போராக தான் இருந்திருக்கிறது.

5, பகத் சிங் காலகட்டத்தில் இருப்பெரும் பிரிவு இருந்ததாக தெரிகிறது

6, நாட்டிற்காக போராடி கைது செய்யப்பட்ட புரட்சியாளர்களை காங்கிரஸ் கைவிட்டது என்பது அப்பட்டமாக தெரிகிறது.

7, காங்கிரஸ் மனது வைத்திருந்தால் பகத் சிங் உட்பட பல பேர் தூக்கு மேடையில் இருந்து தப்பித்திருக்கலாம் என்பது புரிகிறது.

8, பிச்சை எடுத்து பெரும் விடுதலை தனக்கு எவ்வளவு பெரிய இழுக்கு என்பதை பகத் தன்னுடைய தந்தைக்கு எழுதிய கடிதத்தில் தெரிகிறது.

9, ஒரு போராளி அரசின் சூழ்ச்சிக்கு வளைந்து கொடுத்து விடுதலைக்கு முயற்சி செய்வதை ஒரு கடிதத்தில் பகத் வன்மையாக கண்டிக்கிறார், இதில் இருந்து அன்றைய புரட்சி கட்சி காரர்களின் மனவலிமை வெளிப்படுகிறது.

10, ராம் பிரசாந்த் பிஸ்மில் கடிதம் அன்றைய காலகட்டத்தில் இருந்த மத வேற்றுமைகளை தோளுரித்து காட்டுகிறது, முக்கியமாக ஆரிய சமேஜம் போன்ற கட்சிகளை அவர் சாடுவதை உணரமுடிகிறது

11, பகத்தும் அவர் சகாக்களும் எழுதிய கடிதங்கள், கத்தி இன்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது என்னும் பாரதியின் கவிதையை வெறுக்க வைக்கிறது.

12, சிறைக்கு வெளியில் மட்டுமல்ல சிறைக்குள்ளும் தங்கள் உரிமைக்காக போராடிய பகத், லால், தத், ராம்பிரசாத், யதிந்திர தாஸ் போன்றவர்களின் போராட்டம் வியப்பளிக்கிறது,

13, 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து யதிந்திர தாஸ் சிறையில் மரணம் அடைந்ததும் அந்த அளவுக்கு மதிப்பற்ற முறையில் அன்றைய அரசும், இதைப்பற்றிய எந்த கவலையும் காங்கிரஸ் படவில்லை என்பதும் வேதனை அளிக்கிறது.

14, நேதாஜி கடிதம் அவர் இந்த நாட்டின் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை காட்டுகிறது, ஒரு பெரிய பதவியை உதறி தள்ளிவிட்டு இந்த நாட்டுக்காய் அவர் உழைக்க நினைப்பது அவரது கடிதங்கள் சொல்லும் செய்தி

15, எல்லா போராளிகளையும் காக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது என்பது புரிகிறது, புரட்சியாளர்கள் என்று ஒதுக்குவதை அவர் வெறுகிறார் என்பதை அவர் எழுதிய கடிதங்கள் புரியவைக்கிறது.

16, காங்கிரஸ் குறித்த ஒரு பெரிய கனவை நேதாஜி கொண்டிருந்தார் என்பது சிதறஞ்சன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிகிறது.

இப்படி அன்றைய அரசியலின் ஒரு புகைப்படமாய் இந்த புத்தகத்தில் உள்ள கடிதங்கள் நமக்கு வெளிப்படுத்துகிறது.

புத்தகம் : எப்போதாவது எண்ணிபாருங்கள்
தொகுப்பாளர் : சரோஜ் நாராயன்சாமி
பதிப்பகம் : இந்திய ஒலிபரப்பு அமைச்சகம்
பக்கங்கள் : 200
விலை : 55

Friday, 21 October 2022

சாதல் இல்லையேல் காதல் - புத்தக பார்வை

93/100

#NaanVijay

நான் விஜய்

சோ ஏன்னும் நகைச்சுவை நடிகரை உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும், அதுமட்டுமல்ல அவர் சிறந்த அரசியல் விமர்சகர் அவருக்கென்று இந்திய அரசியலில் மிக முக்கியமாய் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றியவர், ஆனால் சோவின் இன்னொரு பக்கம் இருக்கிறது அவர் ஒரு எழுத்தாளர், மிக பெரிய செய்திகளை மிக அழகிய சொல்லாடலில் எளிதில் புரியவைக்க கூடியவர்...

Comedy is a serious business என்று சொல்வார்கள் ஆனால் அது சோ அவர்களுக்கு casual walk, சோவின் பல கதைகள் புத்தகங்கள் என்பதை தாண்டி நாடகமாவும் திரைப்படமாகவும் மேடை கண்டிருக்கிறது.. இந்த புத்தகமும் ஒரு நாடக வடிவம்

மிக சிறந்த நகைச்சுவை நாடகம் என்றே சொல்லலாம் ஆங்காங்கே அவரது அரசியல் வசனங்கள் அவரது நகைச்சுவையுடன் கூடிய அரசியல் நையாண்டியை வெளிப்படுத்துகிறது, குறிப்பாக முதல் காட்சியில் ஒரு கல்லூரியை அறிமுகப்படுத்துவார், அப்போது இங்க மாணவர்கள் நிறைந்திருக்கிறார்கள் எனவே இது நிச்சயம் ஹிந்தி எதிர்ப்போராட்டத்திற்கு முற்பட்ட காலம் தான், என்று சொல்வார், இன்னொரிடத்தில் ஹிந்தி கற்றுக்கொண்டால் பதவி உயர்வு கிடைக்குமாம், 50வயதில் retire ஆகாமல் இவனுங்க ஏன் இப்போ படிக்குறானுங்க தெரியலையே என்று நக்கலடித்திருப்பார், இப்புடி புத்தகம் முழுக்க one liner போட்டு நகைச்சுவை விருந்தே படைத்துவிட்டார்..

இந்த கதையே பல இடியாப்ப சிக்கல் நிறைந்த ஒன்று அதில் தனது வார்த்தை ஜாலங்களை நிரப்பி விருவிறுப்பாய் கொண்டுச்சென்றிருக்கிறார், ஒரு கல்லூரி மாணவன் விளையாட்டை எழுதிய கவிதை அவன் மட்டுமே கலந்துகொண்டான் என்பதற்காக அவனுக்கு பரிசும் கிடைத்துவிடுகிறது, இதை பார்த்த ஒரு பெரிய பணக்கார பெண் அவரை காதலிக்க தொடங்க ஆரம்பமே நகைச்சுவை கலைகட்டிவிடுகிறது, பின்னர் சில காரணங்களால் அந்த பெண்ணின் அப்பா 2மாதத்திற்குள் 10000 சம்பாதிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட ( இந்த கதை நடக்கும் காலகட்டம் 1965களில் அப்போது 10000மிக பெரிய பணம்), அந்த சமயத்தில் தன் பம்பாய் நம்பனை எதிர்பாரத விதமாய் சந்திக்க அவன் பணம் சம்பாதிக்க உதவுகிறான்,

அந்த பணத்தை சம்பாதிக்க நாயகன் செத்துவிட்டதாக ஒரு பொய் செய்தி போட இப்புடி ஏகப்பட்ட கலாட்டாக்கள் கதையில் ஒரு கட்டத்தில் தான் சாகவில்லை என்று நிரூபித்தால் தான் தன் காதல் கைக்கூடும் என்கிற நிலையில் நாயகனும் அவர் நண்பனும் என்ன செய்தார்கள், 10000 பணம் சாம்பாதிதார்களா என்று படுவேகமாய் கதை நகர்கிறது..

ஒரு தரமான விரசம் இல்லாத இந்த காலத்தில் இருப்பது போல், உருவ கேலி இல்லாதா, நல்ல நகைச்சுவைகளை ஒரு சினிமா பார்ப்பதுபோல ரசிக்க நினைப்பவர்கள் நிச்சயம் இந்த புத்தகத்தை படிக்கவும், நல்ல நகைச்சுவை படம் எடுக்க நினைப்பவர்கள் நிச்சயம் முயற்சிமிக வேண்டிய புத்தகம்...

புத்தகம் : சாதல் இல்லையேல் காதல்
ஆசிரியர் : சோ. ராமசாமி
பதிப்பகம் : அல்லயன்ஸ்
விலை : 140
பக்கங்கள் : 312

Sunday, 16 October 2022

சிறுவர்களுக்கான தத்துவம் - புத்தக பார்வை

92/100

#NaanVijay

நான் விஜய்

இன்றைய கல்வி முறை பிள்ளைகளுக்கு ஒரு சிறைசாலை போல செயல்படுவதாக பலநாள் உணர்ந்தது உண்டு... பள்ளிக்கு செல்வது பிள்ளைகளுக்கு எவ்வளவு ஒரு கடுமையான செய்தி, நாளை பள்ளி விடுமுறை என்பது ஒரு கொண்டாட்டத்திற்கான செய்தியாக இன்று காணப்படுகிறது... அந்த அளவிற்கு பிள்ளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றனரா என்று சிந்தித்தால், பதில் அதில் பாதி உண்மை என்பதே

பள்ளிக்கூடம் ஒரு மகிழ்ச்சியின் தலமாய் மாறாததற்கு காரணம் எப்படி பள்ளியோ அதே போல தான் பெற்றோர்களும், பிள்ளைகளை வெறும் மதிப்பெண் பட்டியலாய் மட்டும் பார்க்கும் மனநோய் தான் காரணம், எனில் இப்படிபட்ட காலகட்டத்தில் பிள்ளைகளுக்கு பள்ளியை எளிமை படுத்துவது எப்படி என்பதை தான் 8தலைப்பில் இந்த புத்தகம் மிக எளிமையாக சொல்லி இருக்கிறது.. இது குழந்தைகளுக்கான புத்தகம் என்றாலும் அனைத்து பெரியவர்களும் நிச்சயம் படிக்க வேண்டும், அப்போதுதான் பிள்ளைகளின் கற்றல் பற்றிய தெளிவு பிறக்கும், எப்படி சொல்லி தரவேண்டும் என்ற அறிவு விருத்தி ஏற்படும்

பார்த்தல் என்பது வெறும் பார்த்தல் அல்ல நோக்குதல், அதாவது பார்க்கும் யாவையும் உள்வாங்க வேண்டும், அனைத்தையும் கூடுமான மட்டும் மனதில் பதிய வேண்டும், என்றும் அதை எப்படி செய்வது என்றும் அதற்க்கான பயிற்சிகளும், எடுத்துக்காட்டுகளும் அருமை.

சிந்தித்தல் என்றால் உள்ளுற பேசி பதிலை தேடுதல், தனக்குள் ஒன்றை உள்வாங்கி அதைக்குறித்து தனக்குள்ளே கேள்வி எழுப்பி  அதற்கு தானே பதில் அளித்தல், அதாவது சிந்தித்தல் என்றால் ஒன்றை மனதில் நிறுத்தி தீர ஆராய்தல்

படித்தல் என்பது வேறு பார்த்தல் என்பது வேறு என்று விளக்குகிறார் ஆசிரியர், அர்த்தம் புரியாத ஒரு வார்த்தையை படித்தால் அது வெறும் பார்த்தல் மட்டுமே அது படித்தல் ஆகாது, படித்தல் என்பது அந்த வார்த்தையை பார்க்கும் போது மனம் அதன் அர்த்தத்தை உணர்தல் என்று விளக்குகிறார்.

எழுதுதல் என்றால் தோன்றுவதை எழுதுவது, எழுதியபின் அந்த வாக்கியம் முழுமை பெற்றதா அல்லது அர்த்தமற்று நிற்கிறதா என்ற புரிதலை அடைதல், உணர்வதை சரியான வாக்கியமாய் வடிக்க முடிந்தால் அதுவே சரியான எழுதுதல் ஆகும் என்கிறார் ஆசிரியர் இந்த பகுதி குழந்தைகளுக்கு மட்டுமல்ல தன்னை ஒரு எழுத்தாலனாய் நிறுத்திக்க நினைக்கும் அனைவரும் படிக்க வேண்டியது

கணிதம் என்பது ஒரு கடின பாடம் என்பதை இந்த பகுதி எளிமை படுத்த உதவுகிறது, அதை ஒரு கதையாடல் போல எப்படி மாற்றியமைப்பது என்பதை அழகான உதாரணங்களால் விளக்குகிறார் ஆசிரியர்

கலை என்பதென்ன அது ஏன் சுவரஷ்யமாய் பிள்ளைகள் எடுத்துக்கொள்கிறார்கள், அதை போல பிற பாடங்களை பிள்ளைகள் கொண்டாட என்ன வழிமுறை என்று விளக்குகிறார்... சுதந்திரம் என்னும் சிந்தனையின் வலிமையை கலையின் மூலம் எளிமைப்படுத்தி இருக்கிறார்..

எப்படி ஒரு பிள்ளைக்கு நன்மைஎது என்று விளக்க முடியும், எது நன்மை தரும் செயல் என்று பிள்ளைகளை ஏற்க வைக்க முடியும், என்பதை நல்லவறாக இருத்தல் என்னும் தலைப்பில் தக்க உதாரணங்களோடு சொல்லி இருக்கிறார்..

கற்றல் என்றால் என்ன? எது உண்மையில் கற்றல் என்பதாகும், படித்தலும், சிந்தித்தலும் எப்படி கற்றலாய் மாறுகிறது, சரியான கற்றல் என்றால் என்ன? பிறரிடம் இருந்து எப்படி கற்பது, நம்மிடமிருந்து நாம் எப்படி கற்பது என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல நம்மை போன்ற பெரியவர்களுக்கும் ஒரு அத்தியாவசிய பாடம்...

உங்கள் வீட்டில் பிள்ளைகள் இருந்தால் அவர்களை புரிந்துகொள்ள நீங்களும், படிப்பை புரிந்துகொள்ள அவர்களும் நிச்சயம் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.

புத்தகம் : சிறுவர்களுக்கான தத்துவம்
ஆசிரியர் : சுந்தர் சருக்கை
பதிப்பகம் : எதிர் வெளியீடு
பக்கங்கள் : 100
விலை : 300

Sunday, 9 October 2022

மகாகவி பாரதியின் பாஞ்சாலி சபதம் புத்தக அறிமுகம்

87/100

#NaanVijay

நான் விஜய்

இந்தியாவின் மிக புகழ்பெற்ற கதைகள் இரண்டு, ஒன்று ராமாயணம், இன்னொன்று மஹாபாரதம், இதில் மஹாபாரதம் என்பது மிக அதிக மாந்தர்களையும், பற்பல கிளைகாதைகளையும் கொண்டவை, அதிலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கென சில கதைகள் வழங்கப்பட்டு வருகிறது, இந்த புத்தகம் ஒரு முழு மஹாபாரத கதை அல்ல அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே...

மஹாகவி பாரதியின் பஞ்சாலி சபதம் எனும் இந்த கவிதை காவியம் பாண்டவர்கள் சூது விளையாடி அனைத்தையும் இழந்து இறுதியில், பாஞ்சலியின் சபததோடு முடிவுறும்.. இந்த காதையின் சிறப்பு பாரதி பாஞ்சலியை பாரத தாயாகவும், பாண்டவர்களை இந்தியர்களாகவும், கெளரவர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாகவும் உருவகபடுத்தி எழுதி இருப்பதே,

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது இந்த கவிதை வரிகள் மிகப்பெரும் எழுச்சியை மக்களிடம் பரப்பிற்று என்றே கூற வேண்டும், அத்தனை காத்திரமான வரிகளால் பாரதி மக்களின் உணர்வுகளை தூண்டி இருப்பார்.

இந்த புத்தகத்தை பல அறிஞர்கள் மேடையேற்றி இருக்கின்றனர், அதில் ஒருவர் தான் ஐயா முனைவர் ஞானசம்பந்தன், அவரது கல்லூரி நாட்களில் அவர் நண்பர்களோடு அவர் இயற்றிய இந்த நாடகத்தின் வசன குறிப்பு பல வருடங்கள் கழித்து அதே நாடகத்தில் தனது நண்பர் மூலம் பரிசாக கிடைக்க அதை அவர் இன்று புத்தகமாக நம்மிடையே தவழவிட்டிருக்கிறார்..

இந்த புத்தகம் அப்படியே பாரதியின் கவிதைகளை வசனமாக மாற்றாமல், அதற்குள் தன் திறமையை புகுத்தி இந்த கதையை ஆசிரியர் தனதாக்கி கொண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும், பாரதியை போல் உருவகங்கள் ஏதுமில்லாமல் பாரத கதையாகவே இதை நாடக வடிவில் மாற்றி இருக்கிறார் ஆசிரியர்.. இந்த புத்தகம் மஹாபாரததின் ஒரு சிறுபகுதியாய் இருந்தாலும் படிப்பதற்கு எளிமையும், சீக்கிரம் முடிந்து விட்டதே என்ற உணர்வையும் நிச்சயம் கடத்துகிறது...

புத்தகம் : மகாகவி பாரதியின் பஞ்சாலி சபதம்
ஆசிரியர் : முனைவர். கு. ஞானசம்பந்தம்
பக்கங்கள் : 72
பதிப்பகம் : செண்பகா பதிப்பகம்
விலை : 45

Wednesday, 5 October 2022

The Adventure of Iron Man 1&2 View

86/100

#NaanVijay

நான் விஜய்

#comics #ironman #FredVanLente

We are the generation may grow up with the comics world like Irumbu kai Mayavi, Sambuvin saathanaigal, and yes the magazine called Ambulimama has special place in it.. But for the 2k generation is more obsessed with DC and Marvel comics and its suoer heroes, when in my teen I have seen Super man and his power, where I related him with our very own super hero Sakthi man, We had a great love to this hero.. Because he do whatever we imagine, he fly, he fight, he can invisible etc..

If anyone ask what is the different between DC and Marvel I could say DC for Matured Kids and Marvel for all kind of kids.. Why because Marvel never get into a very serious stereo type kind of shows.. They keen in to entertain the audience, Yes am a kind of Marvel fan but for not all the characters, and I never followed all characters of Marvel, one fine day whole india is started talking about Spydy, and Am watched the movie only on TV when the Vijay tv got the rights, that time I dont know what is marvel and dc, all I know is Spiderman The new age superhero, and then we slowly start grow up one day my friend introduced me the super hero called Iron Man, and  truely not the fan of Iron man, am a fan of Tony Stark, more then super hero Tony stark the multi millionaire and his ideology, and his vision impressed me in a great way.

When I decided to read a comics after so long time, immensely The Adventure of Iron Man grab my attention, this story is almost similiar to Iron Man movie Part-1, here Tony introduced his new techno marvel SKIN program, where a aged professor scold him that he destroyed his country which is not easily find in the world map, Tony decided to do the fact check on the old professor statement, mean time he decided to do trail drive on a jet which is made with SKIN technology, on this drive he stucked in a storm and the jet get trashed

AIR saved him from the storm and tony find the professor told country is get spoiled by his own technology which is misused by the AIR, and the AIR scientist supremo asked much improvement on his technology to destroy the country are else tony will get died, in the same location they also brought that old professor too.. How tony survived the situation, how he helped the country and how he get back to his place is the simple narration of this small comics..

Generally comics will give the movie effect if its perfectly designed, and of course marvel is master in it... In just 23 pages we had a amazing effect of watching one full Marvel movie.. And in kindle edition it was to great to read comincs.. If ur Marvel fan give a try you will really love it..

Book: Adventure of Iron Man -1, 2
Author : Fred Van Lente
Pages : 50
Price: 163Rs