Friday, 23 September 2022

உயிரினங்களின் தோற்றம் புத்தக பார்வை


85/100

நான் விஜய்

#NaanVijay

கடவுள் இந்த உலகத்தை படைத்தார் திடீரென்று அவருக்கு என்னமோ ஆகி என்னத்தையாவது இன்று பண்ணி தொலைப்போம் என்று தேடும் போது தூரத்தில் ஒரு புள்ளி போல ஒரு வெற்று கிரகம் இருக்க use it என்று அவரது 29492010 மூலை சொல்லவும் டபக்குனு கழுதை இருந்துட்டு போங்க அப்புடின்னு நம்மையெல்லாம் படைத்துவிட்டார்... அதோட அப்போ அப்போ வேற language மக்களுக்கு வேற வேற நாட்டு மக்களுக்கு வித்தியாசமான பெயரில் அவதரித்து, வித்தியாச வித்தியாச சித்து விளையாட்டுக்கலையெல்லாம் செய்து... நீ போய் அவனை உன் மதத்துக்கு மாத்து, அவன் பின்னாடியே நீ போய் அவனை உன் மதத்துக்கு மாத்துனு மதத்துக்கு ஒரு புரோக்கர் செட் பண்ணி அனுப்பி இருக்காரு... இவ்வளவு பண்ணிட்டு கொஞ்சோம் சாயிவோம்னு படுத்தா இந்த டார்வின் உன் இஷ்ட படில நாங்க பொறக்கல நான் பரிணாம வளர்ச்சி படித்தான் பொறந்தோம் வளந்தோம்னு தூக்கிட்டு வந்துட்டான் மனுஷன்... ராஸ்கல்...

Anyway மதவாதிகள் பெரும் பலமாய் இருந்த பிறப்பின் ரகசியத்தை நார்நாராய் கிழித்தெரிந்தது அவரது இந்த பரிணாம கோட்பாடு... உலகின் அனைத்து மக்களும் நம்பிகொண்டிருந்த ஒரு விதியை முற்றிலும் மாற்றி அமைத்தது இந்த பரிணாம கோட்பாடு... இதனால் பல மதங்கள் பலம் இழந்தது... பல பேர் வாழ்க்கை கேள்விகுறியானது... உடன் சிலரின் பிழைப்பை காக்கவும் தவறவில்லை

இந்தியாவை பொறுத்தவரை கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சியினர் பலநாள் காப்பாற்றியது டார்வின் இந்த பரிணாம கொள்கை தான், அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.. ஆனாலும் நாம் நிச்சயம் புரிந்து கொள்ளவேண்டியது உள்ளது இது ஒரு தியரி அதுவும் முழுதும் நிரூபிக்கப்படாதா, தக்க சான்றுகள் அற்ற ஒரு அரைவேற்காட்டு தியரி, இதை நான் சொல்லவில்லை டார்வின் பக்கத்திற்கு பக்கம் சொல்லி இருக்கிறார்..  இப்படி முழுமை பெறாத ஒரு தியரி உலக சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது காரணம் இதை இல்லை என்று மறுத்து மாற்று சொல்ல வேறு ஒரு நல்ல தியரி நம்மிடம் இல்லை என்பது தான்...

டார்வின் என்ன சொல்கிறார்.. உலகத்தின் அனைத்து இனமும் ஒன்றாய் இருந்து இன்னொன்றாய் பரிணமித்தவை தான், ஆனால் இந்த மாற்றம் நடந்ததற்க்கான சரியான சான்றோ எப்படி நடந்திருக்கும் என்றோ தனக்கு தெரியாது என்கிறார்.

ஒரு இனம் இன்னொன்றாய் பரிணமிக்க அவை ஒரு இடத்திலே பலகாலம் தங்கி இருத்தல் அவசியம் ஆகும்... ஆனால் உலகின் வெவ்வேறு பக்கங்களில் ஒரே போன்ற உயிரினம் காணப்படுகிறது... இந்த நகர்த்தல் எப்போது நடந்தது பரிணாமத்திற்கு முன்பா அல்லது பின்பா என்றால் அதற்கும் பதில் இல்லை..

கலப்பில் பிறந்த விலங்கு அல்லது உயிரினம் எப்போதும் மலட்டு தன்மையுடன் காணப்படும் என்கிறார்.. எனில் எப்படி இத்தனை புதிய இனங்கள் அல்லது உயிர்கள் தோன்றி இருக்க கூடும் என்ற கேள்விக்கு பதில் இல்லை

ஒரு இயலில் பறவைகளால் பல விதைகளை சுமந்து சென்று இன்னொரு இடத்தில் விதைத்து அவை கூட்டமாய் முளைக்க வாய்ப்பில்லை என்கிறார்.. அவரே 13வது இயலில் வாத்தின் பாதத்தில் பல விதைகள் கொண்டு செல்லப்பட்டு பரவுவதை நான் காண்கிறேன் என்று வேறுபடுகிறார்...

ஒரே வகை உயிரினம் வெவ்வேறு இடங்களில் காணப்படுதல் என்பது அரிது அல்லது சாத்தியம் குறைவு என்கிறார்... ஒருவேளை அப்படி இருந்தாலும் குணாதிசயங்கள் மட்டுமே ஒற்றுப்போக வாய்ப்பிருப்பதாக சொல்லுகிறார்.. உலகின் அனைத்து மூளையிலும் மனிதன் என்னும் உயிரினம் இருந்ததை மறந்து... 🤔

இன்னும் இப்படி பல முரண்கள் இருக்கிறது, இந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பு ஆசிரியரே டார்வின் தான் சொன்ன பல செய்திகளை 2மற்றும் 3,4ம் பதிப்புகளில் மாற்றி இருக்கிறார் என்கிறார்... எனில் டார்வின் தன் தியரி மீது எத்தனை பெரும் நம்பிக்கை கொண்டவராய் இருக்கிறார் என்பது புரிகிறது... எனிலும் இப்படி ஒரு அரைகுறை தியரி உலகையே மாற்ற உலகம் முழுக்க இருக்கும் கேடுகெட்ட மதவாதீகளே காரணம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பரிணாம கோட்பாட்டில் இந்த புத்தகத்தில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால் பல வித இன கலப்பு ஏற்பட்டு பல புது இனங்கள் பிறந்திருகின்றன... அதில் வலிமைகுறைந்த இனங்கள் போட்டியிட முடியாமல் அழிந்து போகின்றன.... இதில் ஒரு இனம் தாதோன்றியாக தன்னைத்தானே தகவமைத்து மாறிக்கொள்கிறது என்பதில் எனக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை.  ஆனால் நாம் எதோ ஒரு கலப்பினம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்...

டார்வின் இந்த தியரி தான் சரி என்றால் அதை நிரூபிக்க இதுவரை எந்த சான்றும் இல்லை என்பதை நாம் பகுத்தறிதல் நியாயம் ஆகும், உடன் மனிதன் சிந்திக்க தொடங்கிய இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் எந்த மூளையிலும் எந்த உயிரினமும் தன்னை இன்னொன்றாய் தகமைத்து கொண்டதாய் ஏதும் காணப்படவில்லை...

இதில் பலர் என்னோடு முரண் படலாம் ஆனால் இது என்னுடைய புரிதல் அவ்வளவே...

புத்தகம் : உயிரினங்களின் தோற்றம்
ஆசிரியர் : சார்லஸ் டார்வின்
பதிப்பகம் : விடியல்
பக்கங்கள் : 138
விலை : 100

Saturday, 17 September 2022

எண்ணங்கள் புத்தக பார்வை

84/100

நான் விஜய்

#NaanVijay

நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்
- விவேகானந்தர்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
- திருவள்ளுவர்

சிந்தையிலே உயர்வு கொள்ளுதல் வேண்டும்
- பாரதி

கனவு காணுங்கள்
- அப்துல்கலாம்

உங்கள் சிந்தனையில் பாவம் இல்லாமல் இருக்கட்டும்
Bible

இப்படி உலகின் எந்த பக்கம் திரும்பினாலும் பெரும்பாலான தத்துவ மேதைகள் மதங்கள் இப்படி அனைத்தும் சிந்தனையின் முக்கியத்துவத்தை பேசுகிறது..

சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு மேலாளர் இருந்தார், அவர் எப்பொழுதும் நல்ல சிந்தனைகளை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்.. நேர்மறையான சிந்தனைகளை குறித்து விளக்குவார்.. அவரின் மீது பெரும் மரியாதை எனக்கு உண்டு, அதன் அடிப்படியில் நானும் அதை செயல்படுத்த முயன்றேன் இன்றும் முயற்றுக்கொண்டே இருக்கிறேன்.. ஆனால் அது அத்தனை எளிதல்ல என்பதை நடைமுறை வாழ்வில் புரிந்தும் வைத்திருக்கிறேன்..

ஆங்கிலத்தில் " A Power of Thinking Big" Secret போன்ற பல உலக பிரஸிதி பெற்ற புத்தகங்கள் உண்டு ஆனால் தமிழில் அப்படி ஒரு புத்தகம் யாரும் ஏன் இன்னும் எழுதவில்லை என்று பலமுறை தோன்றி இருக்கிறது..

என் அறியாமையை போக்கியது இந்த புத்தகம் 1970களிலே நம் மண்ணில் பிறந்த ஒருவர் இதைக்குறித்து இவ்வளவு தீர்க்கமாய் ஆராய்ந்து எழுதி இருப்பது வியப்பளிக்கிறது உதயமூர்த்தி அய்யாவை குறித்த செய்திகள் நமக்கு இத்தனை நாள் தெரியவில்லை என்பதே நமக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்று சொல்வதை அண்ணியாமாக மாற்றிவிட்டது.இயக்குனர் கே. பாலசந்தர் தனது உன்னால் முடியும் தம்பி படத்தில் இவரை கவுரவ படுத்தவே தனது நாயகனான கமலுக்கு உதயமூர்த்தி என்று பெயரிட்டிருக்கிறார் போன்ற செய்திகள் அதிசயிக்க வைக்கிறது..

நூலின் அம்சங்கள் ஒன்றே நல்ல சிந்தனை.. சிந்தனை சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இயங்கும் அதை விளக்கவும் நியாயப்படுத்தவும் பல சான்றிகளையும், சமகால நிகழ்வுகளையும் புத்தகம் முழுக்க வழங்கி இருக்கிறார்.. சிந்தனையால் என்ன நடக்கும் என்ன சிந்தித்தால் என்ன நடக்கும்... நல்ல சிந்தனை எது, கேட்ட சிந்தனை எது, ஏன் கற்பனை அவசியம், எந்த அளவு கற்பனை இருக்க வேண்டும் என்று பல்வேறு கோணங்களில் ஒரு தலைப்பை அணுகி இருப்பாரு..

இன்னும் சொல்லப்போனால் இந்த புத்தகம் முதல் பக்கத்திலே முடிந்து விட்டது, அதன் பின் எழுதப்பட்டவைகள் எல்லாம் அதன் நீட்சிகள் மட்டுமே... ஒரு கருத்தை நம் மனதில் சிந்தனையில் ஏற்றும் ஒரு முயற்சியே இந்தபுத்தகம்.

ஏற்கனவே என்னளவில் secret மற்றும் power of positive thinking, போன்ற புத்தகங்கள் படித்ததினால் இதில் எனக்கு புதிய செய்திகள் என்று எதுவும் இருக்கவில்லை  மாறாக இங்க இருக்கும் சில கார்பொரேட் சாமியார்களின் புகழை கொஞ்சம் அதிகம் பூசியது மட்டுமே ஒவ்வாமையாக இருந்தது.. இதுவரை நீங்கள் மேல் குறிப்பிட்ட எந்த புத்தகங்களையும் படித்ததில்லை என்றால் இந்த புத்தகம் நிச்சயம் சிந்தனைகள் பற்றிய ஒரு புதிய சிந்தனையாக இருக்கும்...

புத்தகம் : எண்ணங்கள்
பக்கங்கள் : 168
ஆசிரியர் : உதயமூர்த்தி
பதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் 
விலை : 70

Thursday, 1 September 2022

தாயுமானவள்



ரொம்ப கடுப்பான நாள் இன்னிக்குனுக் கூட சொல்லலாம். மாசக் கடைசி சேல்ஸ் க்ளோசிங் , டார்கெட் , அச்சிவ்மென்ட் , யோசிச்சாலே கடுப்பாகுது.
 சின்னதா வொர்க் நடுவுல ஒரு பிரேக் எடுக்கலாம்னு நாங்க தேடிவந்த இடம் தெருமொனை டீக்கடை. எங்கள மாதிரி சேல்ஸ் ரெப்க்கு எல்லாம் இளைபாருற வேடந்தாங்கல் இந்த டீக்கடைதான். பல நாட்கள் எவ்வளவோ மன வேதனையோட இங்க நின்னு டீ குடிசுருக்கோம். எத்தனையோ முறை பயங்கரச் ஜாலியா இங்க நேரம் கழிச்சிருக்கோம்.
 இன்பம், துக்கம் எல்லாத்துக்கும் சிலபேர் வைன் ஷாப் போவாங்க , ஆனா எனக்கு இந்த டீ கடைப் போதும் எல்லாப் பிரச்சனைகளும் ஒரு டீ குடிச்சு முடிக்கறதுக்குள்ள இன்னும் சொல்லப்போன நான் வேலைக்குப் போகத் தொடங்குன காலத்துல ஒரு டீ குடிச்சுட்டு 1 நாள் முழுக்க வேலை செஞ்சிருக்கேன். மதியம் வெளியே சாப்பாடு வாங்கி சாப்புடக் கூட காசு இல்லாம அலைஞ்ச காலம் அதெல்லாம். ஆனா இன்னைக்கு எல்லாம் மாறிடுச்சி காலம் எல்லாத்தையும் கொண்டுவந்துக் கொடுத்துருக்கு வித் டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்னோட .


தூரத்துல யாரோ தெரிஞ்சப் பொண்ணு மாதிரி இருக்குனு மனசு சொல்லுச்சி , டீ ஒரு கப் அடிச்சுட்டு ஒரு நிமிஷம் யோசிச்சேன். மனசு கண்டுபுடுச்சிடுச்சி , வரவ பேரு கவிப்பிரியா , கவினு கூப்பிடுவோம், என்ன ரிஜெக்ட் பண்ண சில பேருல மேடமும் ஒருத்தி .
 என்னைவிடச் சின்னப் பொண்ணுதான் , என்னமோ அவகிட்டப் பேசணும்னு தோணுச்சி . அதுக்கு முன்னாடி அவ யாரு அவளுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்னு யோசிச்சு பார்த்தா ஒரு சம்பவம்தான் நியாபகம் வருது .

2015 என் பிரன்ட்டோட கல்யாணம் திருச்சில , நான் தான் மாப்ளைய சென்னைல இருந்து கார்ல கூட்டிட்டுப் போறேன் , அவனுக்கு அது காதல் திருமணம்தான். பொண்ணு அவன் சொந்த அத்தை பொண்ணு, சொந்த அத்தை பொன்ன லவ் பண்றதுக்கு பேரு எப்போ காதல்னு மாத்துனாங்கன்னு தெரியல? ஆனாலும் இவன் லவ் பண்ணலேன்னா நிச்சயம் அந்த பொண்ண இவனுக்குக் கட்டிவெச்சுருக்க மாட்டங்க . என் நண்பன் கார் மெக்கானிக் , அந்த பொண்ணு காலேஜ் ஆஸ்.lecturer, MPhil, கருப்பா இருந்தாலும் கலையான முகம், ரெண்டுப்பேரும் செம்ம ஜோடிபொருத்தம். முன்னாடி இவங்க லவ்க்காக சென்னை டூ திருச்சி டிரைவர் வேலை பார்த்ததால , கல்யாணப் பொண்ணு எனக்கு ஏற்கனவே தோழியாயிட்டாங்க, அதனால ரொம்பச் ஜாலியா நல்லாப் பேசி போர் அடிக்காம போய்ச்சு அவன் கல்யாணம். அங்கதான் மொதமொதல்ல கவிய பார்த்தோம். எங்கள விட ஒரு 6 வருஷம் சின்னப் பொண்ணு, ரொம்ப அழக.
 என் தோழியோட ஸ்டூடென்ட், இதைக் கேட்டதும் கொஞ்சம் ஜர்க்க் ஆச்சு. ஆனா வயசு ஒன்னும் நமக்கு அவ்ளோ பெருசில்லையேன்னு மனசத் தேத்திகிட்டேன்.

கல்யாண வேலைல என் நண்பர்கள் கூட்டம் மொத்தமும் அந்தப் புள்ளை மேலதான் இருந்திருக்குனு ரூம்க்கு வந்து பேசும் போது தெரிஞ்சுகிட்டேன். பின்ன இருக்காத , அந்தப் இத்துப்போன கல்யாண மண்டபத்துல, பசில இருக்குறவனுக்கு பீப் பிரியாணி கெடைச்சா மாதிரி அப்படி ஒரு பொண்ணு, ஊரே அவளைத்தான் பாத்துருக்கும்.
 நான் பார்த்ததுல ஒன்னும் தப்பு இல்லையே, அப்புறம் ரெண்டுநாள் அந்தப் பொண்ணுகிட்ட வாய்ப்பு கெடைக்கும் போதெல்லாம் கடலை போட்டு, ஊருக்கு போறதுக்குள்ள அவ நம்பர் வாங்கியாச்சு . ஆனா என்ன பேசுறதுனு தெரியல? அதனால அப்புடியே வெச்சுட்டு விட்டுட்டேன், கொஞ்ச நாள் கழிச்சு எல்லாம் மறந்தும் போச்சு.

அதுக்கு அப்புறம் ஒருநாள் அவன் கல்யாண ஆல்பம் வந்துடுச்சின்னு பாத்துகிட்டு இருந்தோம். அப்போ மறுபடியும் அவ நியாபகம், அவ போட்டவையே திருப்பித் திருப்பி பார்த்துட்டு இருந்தத தோழி கவனிச்சுட்டா, அப்புறம் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் விஜய்னு ஒரு மெசேஜ் தோழிகிட்ட இருந்து சரி இதுக்குத்தான் திட்டபோறானு கால் பண்ணா, போன் எடுத்ததும், உனக்கு அவள புடிச்சுருக்கானு முதல் கேள்வி, நான் என்ன சொல்றதுன்னு யோசிச்சு ஒரு மாதிரி மழுபுறத்துக்குள்ள, மறுபடியும் அதே கேள்வியோட எனக்கு நேரடியா பதில் சொல்லுனு சொல்ல, நானு நல்லாத்தான் இருக்கா, புடிச்சுருக்கு பட் நீ நினைக்கிற மாதிரியில்லனு சொன்னேன். உடனே அவ கேட்ட அடுத்த கேள்வி என்ன ஒரு நிமிஷம் தல சுத்த வெச்சுடுச்சி, அவளை நீ கல்யாணம் பண்ணிபியானு கேட்டா, எனக்கு ஒன்னும் புரியல, அப்புறம் அவ அவல பத்தி சில விஷயங்கள சொன்னா.

கவிப்ரியா ஒரு சின்ன கிராமத்துல பொறந்தப் பொண்ணு ரொம்ப திறமைசாலி , ஆனா அவளுக்கு ஒரு சின்ன ப்ராப்ளம், அவளுக்கு உடேரஸ் இல்லை, புரியுறா மாதிரி சொல்லனும்னா அவளுக்கு எப்பவும் பீரியட்ஸ் ஆகாது, அதாவது அவளால எப்பவும் அம்மா ஆகா முடியாது, எல்லாரையும் போல அவளும் ஒரு சாதாரணப் பெண்தான் ஆனா அவளுக்கு பிறக்கும் போதே இந்த மாதிரி ஒரு சின்னக் குறை . இதனால அந்த பொண்ண எப்படி கட்டிக்கொடுகறதுன்னு அவ அம்மா அப்பா என் தோழிகிட்ட பொலம்பி இருகாங்க, என் தோழிகிட்ட என் நண்பனும் என்னப் பத்தி ரொம்ப நல்லவன், முற்போக்கு சிந்தனையாளன்னு ஏத்தி விட , அவ கடைசியா கவிய கட்டிகுறியானு என்கிட்டே வந்து இப்போ நிக்குறா.
 ஒரு நிமிஷம் கூட யோசிக்கல சரின்னு சொல்லிட்டேன், அவளை கட்டிகிட்டா நான் ரெண்டு கொழந்தையை தத்தெடுக்கலாம், இதுதான் என் மைண்ட்ல மொதல்ல ஓடிச்சு , நான் பேசுன நெறைய பொண்ணுங்க சொன்ன ஒரே வார்த்தை , எந்த பொண்ணும் தனக்கு கொழந்தை பொறக்குறத தடுத்துட்டு இன்னொரு கொழந்தைக்கு அம்மா ஆகமாடானு , ஆனா இவ ஆவா , அவளோட ஒரே பிரச்சனை அம்மா ஆக முடியாதுங்குறதுதான் .
 என்னால அவள அம்மா ஆக்கி அழகு பார்க்க முடியும்னு தோணுச்சு.

ஆனா இந்த விஷயம் கேட்டு என் தோழிய என் நண்பன் வருத்தெடுத்துட்டான். 
 எனக்குப் போன் பண்ணி அவதான் சொல்றான உனக்கு அறிவில்லையா , அம்மாக்கு நான் என்னடா பதில் சொல்லுவன்னு செம்ம கத்து , அப்புறம் அவன ஒரு மாதிரி பேசி சம்மதிக்க வெச்சுட்டேன், கடைசியா இபோ அந்த பொண்ணுகூட பேச ஏற்பாடு பண்ணி இருந்தாங்க.
அவகிட்ட நடுவுல கொஞ்சம் மெசேஜ்ல பேசி இருந்தாலும் நேர்ல பேசப்போறது இதுதான் முதல் தடவை. சோ கொஞ்சம் பதட்டமா இருந்தாலும் தையிறியத்த வரவெச்சுகிட்டு போய் பேசுனேன். எல்லாத்தையும் கேட்டுட்டு, மன்னிசுக்கங்க நான் உங்கள அப்படி பாக்கள , நான் இன்னொருத்தர லவ் பண்றேன்னு சொல்லிட்டு போய்ட்டா. சரியான பல்பு எனக்கு, பெரிய புரட்சியாளர் அளவுக்கு தோழியும் நண்பனும் கொடுத்த பில்ட்அப் எல்லாம் வேஸ்டா போச்சி. அப்புறம் தோழிகிட்ட விஷயத்த சொல்லிட்டு என் வேலைய பாக்க ஆரம்பிச்சேன்.

ஒரு நாள் மீட்டிங் நடுவுல ஒரு கால் அவதான், சரி மீட்டிங் முடிச்சுட்டு பேசுவோம்னு கட் பண்ணிட்டேன் , அப்புறம் ஒரு மெசேஜ் நான் சென்னை வந்துருக்கேன் உங்களை பாக்கனும்னு, என்னோட மீட்டிங் நடந்த இடம் கோயம்பேடு பக்கத்துல தான் அதனால , பஸ் ஸ்டான்ட் எதிர்ல இருந்த சங்கீதா ஹோட்டல்ல மீட் பண்ணோம். அன்னைக்கு நடந்ததப் பத்தி சொன்னா. அப்புறம் என் தோழி தான் என்ன அவள பாக்கச் சொல்லி ப்ரொபோஸ் பண்ண சொன்னானு சொல்லி இருக்கா. நான் உங்கள தப்பா நெனச்சுட்டேன்னு சாரி சொன்னா. அப்புறம் அவ யாரையும் லவ்வெல்லாம் பண்ணலைன்னு சொன்னா, கூடவே அதுக்காக உங்கள கல்யாணம் பண்ணிக்கவும் முடியாதுனும் சொன்னா. எனக்கு ஒன்னும் புரியல இத போன்ல சொல்லி இருக்கலாமே இதைச் சொல்ல எதுக்கு இவ்ளோ தூரம்னு கேட்டன்.

இவளுக்கு இப்படி ஒரு ப்ராப்ளம் இருக்குனு தெரிஞ்சதும் நிறைய பேர் அந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணி இருக்காங்க . சின்ன வயசுல இருந்தே நெறைய பேரு அவள தப்பா நடத்தி இருகாங்க, இதுல நெருங்குன சொந்தகாரங்க கூட இருக்கானுங்க. இதனாலையே அவளுக்கு ஆண்கள் மேல ஒரு வித வெறுப்பு, லவ் பண்டரங்ற பேர்ல நெறைய பசங்க இதே மாதிரி அவள தொல்லை பண்ணி இருக்கானுங்க .
 என்னையும் அந்த கும்பல்ல ஒண்ணுனு நெனச்சி இருக்கா, அதான் அப்படி பொய் சொல்லி இருக்கா. அப்புறம் என் தோழி என்னபத்தி சொன்னத வெச்சு இன்னைக்கு இதெல்லாம் சொல்லி நேர்ல மன்னிப்பு கேக்கக் வந்துருக்கா.அதான் என்னப் பத்தி புரிஞ்சுடுசே இப்பவும் ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாற்றனு கேட்டேன், அதுக்கு அவ சொன்னா, இந்த கல்யாணத்துல லவ் இல்ல, என் மேல உங்களுக்கு இருக்குறது வெறும் இரக்கம் தான், அந்த இரக்கத்தை வெச்சு கல்யாணம் பண்ணிகிட்டா காலம் முழுக்க உங்களுக்கு ஒரு தியாகம் பண்ண ஃபில் கிடைக்கும். எனக்கு நீங்க பெரிய வாழ்க்கை கொடுதிங்கனு ஒரு உணர்வு இருக்கும். ஆனா காதல் இருக்காது, எனக்கு கல்யாணமே ஆகலேன்னா கூடப் பரவல்லா, ஆனா உங்க இயக்கத்தைக் காட்டி எனக்கு கல்யாணப் பிச்சை போடதிங்க , நான் காலம் முழுக்க இப்படியே இருந்துகுறேன். தப்பா நினைக்காதிங்க நீங்க நல்லவருதான் , இத்தனை நாள்ல ஒரு நாள் கூட நீங்க எனக்கு அனுப்புன மெசேஜ்ல எந்த தப்பான எண்ணமும் நான் பாக்கள அதோட அதுல எந்த லவ்வும் இல்ல. நீங்க நல்லவரா இருக்குறது மட்டும் என் வாழ்க்கைக்கு போதுமானது இல்ல, அதுல கொஞ்சம் காதலும் வேணும். சாரி எதாவது தப்பா பேசி இருந்தேன்னா.
 எல்லாத்தையும் சரியா பேசிட்டு போய்ட்டா , அதுக்கு அப்புறம் வாழ்க்கை வேற திசையில் கூட்டிட்டுப் போய்டுச்சி ரெண்டுப்பேரையும் இன்னைக்குத்தான் பாக்குறேன் அதுக்கு அப்புறம் அவள, அந்த தேவதைய .

அவளும் தூரத்துல பார்த்ததும் கண்டுபுடிச்சுட்டா. நேரா வந்து நலம் விசாரிச்சுப் பேச ஆரம்பிச்சா, அவ கழுத்துல தாலி இருந்தது.கல்யாணம் ஆகிடுச்சானு கேட்டேன். ஆமானு சொன்னா, யாரோ ஒரு கவேர்மென்ட் வேலை பாக்குற ஆளுக்கு ரெண்டாம் தாரமா கட்டிகொடுதுருக்காங்க.
 ரெண்டுபேருக்கும் கிட்டத்தட்டப் 15 வருஷ வித்தியாசம் வயசுல, அவர் முதல் மனைவிக்கு ஒரு 5 வயசுல பையன் இருக்கான். அவங்க இறந்து போனதால 2 வருஷம் கழிச்சு இந்தப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க.
 உள்ளுக்குள்ள சிரிக்கிறதா, திட்றதா யோசிச்சுகிட்டு இருந்தேன் அதே அவளை புரிஞ்சுக்கிட்டு பேச ஆரம்பிச்சா, நீங்க என்ன யோசிகிறிங்கனு தெரியுது, அவ்வளவ்வு வக்கனையா பேசிட்டு நீ கடைசியா இதா பண்ணியான்னு யோசிக்கிறிங்க, தப்பில்ல நியாயம் தான்னு ஆரம்பிச்சா.

இந்த உலகத்துல 2 வகையான பொண்ணுங்க தான், எந்த குறையும் இல்லாம பொறந்தாலும், தன்னை ஸ்பெஷல்னு காட்டிக்க , இல்ல தனித்துவமா வாழ ஆசைபடுற பொண்ணுங்க. இன்னொன்னு என்ன மாதிரி குறையோடு பொறந்ததும், எல்லோர மாதிரி ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ ஆசைப் படுற பொண்ணுங்க. ஆனா எங்களுக்கு இது ரெண்டுமே எப்பவும் அமையாது. எங்களால ஸ்பெஷலா இருக்க முடியாது . என்ன மாதிரிப் பொண்ணுங்க சாதாரண வாழ்க்கைய வாழ்வும் முடியாது, எங்கப் போனாலும் அவளால அம்மா ஆகா முடியாதுன்னு ஒதுக்கியே வெச்சாங்க, பொண்ணா பொறந்தா அம்மா ஆகியே ஆகணுமா என்ன?
 நாங்க மட்டும் ஏன் மலடி , ஆண்களுக்கு இப்படி பிரச்சனை இருந்ததே இல்லையா? உங்கள இந்த சமுகம் ஒதுகுறதே இல்லையே? ஒன்னு கருணையைத் தூக்கிட்டு வர்றிங்க, இல்ல காமத்தோட வரிங்க, நான் ஆசைப்பட்டதெல்லாம் கொஞ்சோண்டு காதல் ஆனா கடைசி வரைக்கும் கிடைக்கல.

இந்த உலகம் என்ன துரத்திகிட்டே இருக்கு , அம்மா ஆகா முடியாதவன்னு , அப்போதான் இவரு வந்தாரு, என் கொழந்தைக்கு அம்மாவ இருக்க முடியுமான்னு கேட்டு, என்னைவிட பெரியவர்தான். அந்த குடும்பம் என்னக் கொடுமைதான் படுத்துது. இவரு டெய்லி சந்தேக பட்டு அசிங்க படுத்திகிட்டுதான் இருகாரு, எல்லாத்தையும் தாங்கிட்டு இருக்குறேன். கடைசியா என் பையன் ஓடிவந்து அழாதமான்னு சொல்லுவான்னு, அவனை பொருத்தவரைக்கும் நான்தான் அவனோட அம்மா, இந்த உலகத்துல எவன் எத்துகிட்டாலும் எத்துக்கமா போனாலும், இப்போ நானும் அம்மா, எனக்கும் ஒரு பையன் இருக்கான். நாளைக்கு அவனுக்கு ஒரு நல்லதுன்னா, அவனுக்கு அம்மாவா நான்தான் போய் நிப்பேன். எனக்கு இது போதும். இப்போதைக்கு எனக்கு தேவையான சாதாரண வாழ்க்கை இதுதான். இப்படி அவ பேசி முடிச்சதும் என் உடம்பெல்லாம் புல்லரிச்சு போயிடுச்சி. பெண்ணாய் பிறக்கவே மாதவம் செய்திடல் வேண்டும், சரியாதான் சொன்னான் பாரதி.

அவளும் தாண்டி போயிட்டா, டீ முடிஞ்சுடுச்சி, இனி மறுபடியும் என்னோட இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டியதுதான்.

-நான் விஜய்-