83/100
#NaanVijay
நான் விஜய்
#பெண்ணியம்
ஒரு புத்தகம் நாம் கையில் எடுத்து முடிக்கும் போது மனதில் பட்ட எதையும் பகுத்தாய்ந்து பதிவிடுவது வழக்கம், ஆனால் இந்த புத்தகம் சுய பகுத்தாய்வு செய்ய என்ன தூண்டிவிட்டது, திருமணம் ஆகி இன்னும் ஒரு வருடம் கூட ஆகாத எனக்கு இந்த புத்தகம் நிறைய பதில்களை பரிசளித்திருக்கிறது, என் எண்ண ஓட்டங்களை சீர் செய்ய ஒரு கருவியாய் இந்த புத்தகத்தை நான் எடுத்துக்கொண்டேன்.
கலவி என்பது கொடுத்து எடுத்துகொள்வதல்ல, இருவர் பங்கிட்டு கொள்வது, ஆனால் அந்த பங்கிடு நியாயமாய் நடக்கிறதா என்றால் நிச்சயம் பதில் இல்லை என்பது தான், கலவி அத்தனை முக்கியாம என்றால் ஆம் நிச்சயம் முக்கியமே, காரணம் அடுத்த தலைமுறையின் வரவு என்பதை விட, இன்றைய நாளை மனதார அனுபவித்து வாழ அதுவும் அத்தியாவசியமே.
உணவு இருப்பிடம் போல கலவியும் மனித வாழ்வில் இன்றியமையாதது, ஒரு சிறந்த திருமண வாழ்வில் இருக்கும் பல காரணங்களில் இதுவும் ஒன்று. ஒருவருக்கொருவர் புரிதல் என்பது படுக்கையிலும் இருத்தல் அவசியம் என்பதை உணர்த்துகிறது இந்த புத்தகம்,
ஒரு பெண் கலவியில் என்ன இழக்கிறாள் என்பதை இந்த புத்தகம் ஒரு கண்ணாடி பாகையாய் காட்டுகிறது, ஆணின் அறிவிலித்தனத்தால் ஒரு பெண் அனுபவிக்க அல்லது அடைய வேண்டிய அடிப்படை இன்பத்தைக்கூட வாழ்நாள் முழுவதும் ஒரு வெற்று புன்னகையோடு கடந்து விடுகிறாள் என்பது கொடூரமே.
எல்லா வகையிலும் பாலின உரிமை கோரும் பெண்கள், இந்த இடத்தில் அதை வெளிப்படையாய் பேச விடமால் அவர்களை ஊமையாக்கி வைத்திருக்கிறது இந்த சமூகம். அவர்களுக்காக பேச வேண்டும் என்பதை விட, மனதார காதல் கொண்டு அவர்கள் அடையவேண்டிய இன்பத்தை அவர்களுக்கு கொடுப்பது ஒவ்வொரு ஆணின் அடிப்படை கடமை, அது ஒவ்வொரு பெண்ணின் அடிப்படை உரிமை.
பெண்களை கொண்டாடும் தேசம் என்று ஊருமுழுக்க வெற்று கூச்சல் போடுவதை நிறுத்திவிட்டு அடிப்படையில் இருந்து மாற்றி அமைப்பது இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் கடமை ஆகும்.
இந்த புத்தகம் வெறும் கலவியோடு நின்றுவிடுகிறதா என்றால், அதுதான் இல்லை, கலவியை அடிப்படையாய் கொண்டு இங்கு நடக்கும் வாப்புணர்வுகளுக்கு எதிரான வாதத்தை முன்வைக்கிறது, அதற்கான காரணத்தை வேரில் இருந்து தேடி விடையளிக்கிறது, ஒரு சரியான கலவி ஒழுக்கம் இல்லாத்தால் தான் இந்த கொடூரங்களுக்கு பின்னால் இருக்கும் காரணம் ஆகிறது. சிறுகுழந்தைகள் வரை இந்த வெறிச்செயல் அத்துமீறி போகின்றது.
வெளிமண உறவுகளை பற்றிய என்பார்வையை இந்த புத்தகம் மீளாய்விற்கு உட்படுத்தி இருக்கிறது, காதல் ஒருவரிடம் தான் தோன்றவேண்டுமா அது அப்படித்தான் செயல் படவேண்டுமா போன்ற என் பல கேள்விகளுக்க்கு வெளிப்படையாய் பதில் அளித்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அதன் அழகையும் இந்த புத்தகம் மிக அழகாய் பேசுகிறது.
அதோடு குழந்தை வளர்ப்பை பற்றியும், அது சார்ந்த உளவியல் பக்கங்களும் என்னைப்போல அப்பாவாக காத்திருக்கும் பெற்றோர்களுக்கும் மிக அத்தியாவசியமான பக்கங்கள்.
மொத்தத்தில் பெண்களையும், கலவியையும் அறிந்துகொள்ள சென்று, நான் என்னை பற்றிய புரிதலை வளர்த்து கொண்டேன், இதற்கு ஆசிரியற்கு பேரன்புகளும் நன்றிகளும்.
புத்தகம் : கழிவறை இருக்கை
ஆசிரியர் : Latha
பக்கங்கள் : 224
விலை : 225
No comments:
Post a Comment