சில நேரங்களில் சில படங்கள், படம்என்பதை தாண்டி ஒரு அனுபவமாக ஒட்டிக்கொள்ளும், அப்படி எனக்குள் ஒட்டிக்கொண்ட ஒரு படம் முன்பு நண்பன் இன்று சார்லி....!
பார்வதி அந்தபெயர்தெரியாத, உருவம் தெரியதா ஒருவனை தேடும்போது, நானும் இணைந்து கொண்டேன், எனக்குள் நான் வெகுநாட்களாய் ஒலி[ளி]த்திருக்கும் அந்த நபரை தேடுவதற்காக,
பிறருக்கு உதவுவது, அல்லது மற்றவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்பது, நாம் பிறருக்கு செய்யும் உதவிமட்டும் அல்ல, நமக்குள் ஒளிந்திருக்கும் நம் ஆத்மதிருப்தியை வெளிக்கொணரும் ஒரு முயற்சி அவ்வளவே, சார்லி பிறரின் சிரிப்பில் தன் வாழ்கையை திருப்தி படுத்திகொள்ளும் ஒரு மிகஎளியமனிதன், நான் ஆகாமுயற்சி செய்து கொண்டிருக்கும், ஒருஅசாதாரண சாதனை.....!
இது நிச்சயம் விமர்சனம் அல்ல....!
எனது ஏக்கங்களின் பதிவு அவ்வளவே....!
எனது ஏக்கங்களின் பதிவு அவ்வளவே....!

No comments:
Post a Comment