85/100
நான் விஜய்
#NaanVijay
கடவுள் இந்த உலகத்தை படைத்தார் திடீரென்று அவருக்கு என்னமோ ஆகி என்னத்தையாவது இன்று பண்ணி தொலைப்போம் என்று தேடும் போது தூரத்தில் ஒரு புள்ளி போல ஒரு வெற்று கிரகம் இருக்க use it என்று அவரது 29492010 மூலை சொல்லவும் டபக்குனு கழுதை இருந்துட்டு போங்க அப்புடின்னு நம்மையெல்லாம் படைத்துவிட்டார்... அதோட அப்போ அப்போ வேற language மக்களுக்கு வேற வேற நாட்டு மக்களுக்கு வித்தியாசமான பெயரில் அவதரித்து, வித்தியாச வித்தியாச சித்து விளையாட்டுக்கலையெல்லாம் செய்து... நீ போய் அவனை உன் மதத்துக்கு மாத்து, அவன் பின்னாடியே நீ போய் அவனை உன் மதத்துக்கு மாத்துனு மதத்துக்கு ஒரு புரோக்கர் செட் பண்ணி அனுப்பி இருக்காரு... இவ்வளவு பண்ணிட்டு கொஞ்சோம் சாயிவோம்னு படுத்தா இந்த டார்வின் உன் இஷ்ட படில நாங்க பொறக்கல நான் பரிணாம வளர்ச்சி படித்தான் பொறந்தோம் வளந்தோம்னு தூக்கிட்டு வந்துட்டான் மனுஷன்... ராஸ்கல்...
Anyway மதவாதிகள் பெரும் பலமாய் இருந்த பிறப்பின் ரகசியத்தை நார்நாராய் கிழித்தெரிந்தது அவரது இந்த பரிணாம கோட்பாடு... உலகின் அனைத்து மக்களும் நம்பிகொண்டிருந்த ஒரு விதியை முற்றிலும் மாற்றி அமைத்தது இந்த பரிணாம கோட்பாடு... இதனால் பல மதங்கள் பலம் இழந்தது... பல பேர் வாழ்க்கை கேள்விகுறியானது... உடன் சிலரின் பிழைப்பை காக்கவும் தவறவில்லை
இந்தியாவை பொறுத்தவரை கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சியினர் பலநாள் காப்பாற்றியது டார்வின் இந்த பரிணாம கொள்கை தான், அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.. ஆனாலும் நாம் நிச்சயம் புரிந்து கொள்ளவேண்டியது உள்ளது இது ஒரு தியரி அதுவும் முழுதும் நிரூபிக்கப்படாதா, தக்க சான்றுகள் அற்ற ஒரு அரைவேற்காட்டு தியரி, இதை நான் சொல்லவில்லை டார்வின் பக்கத்திற்கு பக்கம் சொல்லி இருக்கிறார்.. இப்படி முழுமை பெறாத ஒரு தியரி உலக சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது காரணம் இதை இல்லை என்று மறுத்து மாற்று சொல்ல வேறு ஒரு நல்ல தியரி நம்மிடம் இல்லை என்பது தான்...
டார்வின் என்ன சொல்கிறார்.. உலகத்தின் அனைத்து இனமும் ஒன்றாய் இருந்து இன்னொன்றாய் பரிணமித்தவை தான், ஆனால் இந்த மாற்றம் நடந்ததற்க்கான சரியான சான்றோ எப்படி நடந்திருக்கும் என்றோ தனக்கு தெரியாது என்கிறார்.
ஒரு இனம் இன்னொன்றாய் பரிணமிக்க அவை ஒரு இடத்திலே பலகாலம் தங்கி இருத்தல் அவசியம் ஆகும்... ஆனால் உலகின் வெவ்வேறு பக்கங்களில் ஒரே போன்ற உயிரினம் காணப்படுகிறது... இந்த நகர்த்தல் எப்போது நடந்தது பரிணாமத்திற்கு முன்பா அல்லது பின்பா என்றால் அதற்கும் பதில் இல்லை..
கலப்பில் பிறந்த விலங்கு அல்லது உயிரினம் எப்போதும் மலட்டு தன்மையுடன் காணப்படும் என்கிறார்.. எனில் எப்படி இத்தனை புதிய இனங்கள் அல்லது உயிர்கள் தோன்றி இருக்க கூடும் என்ற கேள்விக்கு பதில் இல்லை
ஒரு இயலில் பறவைகளால் பல விதைகளை சுமந்து சென்று இன்னொரு இடத்தில் விதைத்து அவை கூட்டமாய் முளைக்க வாய்ப்பில்லை என்கிறார்.. அவரே 13வது இயலில் வாத்தின் பாதத்தில் பல விதைகள் கொண்டு செல்லப்பட்டு பரவுவதை நான் காண்கிறேன் என்று வேறுபடுகிறார்...
ஒரே வகை உயிரினம் வெவ்வேறு இடங்களில் காணப்படுதல் என்பது அரிது அல்லது சாத்தியம் குறைவு என்கிறார்... ஒருவேளை அப்படி இருந்தாலும் குணாதிசயங்கள் மட்டுமே ஒற்றுப்போக வாய்ப்பிருப்பதாக சொல்லுகிறார்.. உலகின் அனைத்து மூளையிலும் மனிதன் என்னும் உயிரினம் இருந்ததை மறந்து... 🤔
இன்னும் இப்படி பல முரண்கள் இருக்கிறது, இந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பு ஆசிரியரே டார்வின் தான் சொன்ன பல செய்திகளை 2மற்றும் 3,4ம் பதிப்புகளில் மாற்றி இருக்கிறார் என்கிறார்... எனில் டார்வின் தன் தியரி மீது எத்தனை பெரும் நம்பிக்கை கொண்டவராய் இருக்கிறார் என்பது புரிகிறது... எனிலும் இப்படி ஒரு அரைகுறை தியரி உலகையே மாற்ற உலகம் முழுக்க இருக்கும் கேடுகெட்ட மதவாதீகளே காரணம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
பரிணாம கோட்பாட்டில் இந்த புத்தகத்தில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால் பல வித இன கலப்பு ஏற்பட்டு பல புது இனங்கள் பிறந்திருகின்றன... அதில் வலிமைகுறைந்த இனங்கள் போட்டியிட முடியாமல் அழிந்து போகின்றன.... இதில் ஒரு இனம் தாதோன்றியாக தன்னைத்தானே தகவமைத்து மாறிக்கொள்கிறது என்பதில் எனக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை. ஆனால் நாம் எதோ ஒரு கலப்பினம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்...
டார்வின் இந்த தியரி தான் சரி என்றால் அதை நிரூபிக்க இதுவரை எந்த சான்றும் இல்லை என்பதை நாம் பகுத்தறிதல் நியாயம் ஆகும், உடன் மனிதன் சிந்திக்க தொடங்கிய இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் எந்த மூளையிலும் எந்த உயிரினமும் தன்னை இன்னொன்றாய் தகமைத்து கொண்டதாய் ஏதும் காணப்படவில்லை...
இதில் பலர் என்னோடு முரண் படலாம் ஆனால் இது என்னுடைய புரிதல் அவ்வளவே...
புத்தகம் : உயிரினங்களின் தோற்றம்
ஆசிரியர் : சார்லஸ் டார்வின்
பதிப்பகம் : விடியல்
பக்கங்கள் : 138
விலை : 100
No comments:
Post a Comment