Saturday, 17 September 2022

எண்ணங்கள் புத்தக பார்வை

84/100

நான் விஜய்

#NaanVijay

நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்
- விவேகானந்தர்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
- திருவள்ளுவர்

சிந்தையிலே உயர்வு கொள்ளுதல் வேண்டும்
- பாரதி

கனவு காணுங்கள்
- அப்துல்கலாம்

உங்கள் சிந்தனையில் பாவம் இல்லாமல் இருக்கட்டும்
Bible

இப்படி உலகின் எந்த பக்கம் திரும்பினாலும் பெரும்பாலான தத்துவ மேதைகள் மதங்கள் இப்படி அனைத்தும் சிந்தனையின் முக்கியத்துவத்தை பேசுகிறது..

சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு மேலாளர் இருந்தார், அவர் எப்பொழுதும் நல்ல சிந்தனைகளை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்.. நேர்மறையான சிந்தனைகளை குறித்து விளக்குவார்.. அவரின் மீது பெரும் மரியாதை எனக்கு உண்டு, அதன் அடிப்படியில் நானும் அதை செயல்படுத்த முயன்றேன் இன்றும் முயற்றுக்கொண்டே இருக்கிறேன்.. ஆனால் அது அத்தனை எளிதல்ல என்பதை நடைமுறை வாழ்வில் புரிந்தும் வைத்திருக்கிறேன்..

ஆங்கிலத்தில் " A Power of Thinking Big" Secret போன்ற பல உலக பிரஸிதி பெற்ற புத்தகங்கள் உண்டு ஆனால் தமிழில் அப்படி ஒரு புத்தகம் யாரும் ஏன் இன்னும் எழுதவில்லை என்று பலமுறை தோன்றி இருக்கிறது..

என் அறியாமையை போக்கியது இந்த புத்தகம் 1970களிலே நம் மண்ணில் பிறந்த ஒருவர் இதைக்குறித்து இவ்வளவு தீர்க்கமாய் ஆராய்ந்து எழுதி இருப்பது வியப்பளிக்கிறது உதயமூர்த்தி அய்யாவை குறித்த செய்திகள் நமக்கு இத்தனை நாள் தெரியவில்லை என்பதே நமக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்று சொல்வதை அண்ணியாமாக மாற்றிவிட்டது.இயக்குனர் கே. பாலசந்தர் தனது உன்னால் முடியும் தம்பி படத்தில் இவரை கவுரவ படுத்தவே தனது நாயகனான கமலுக்கு உதயமூர்த்தி என்று பெயரிட்டிருக்கிறார் போன்ற செய்திகள் அதிசயிக்க வைக்கிறது..

நூலின் அம்சங்கள் ஒன்றே நல்ல சிந்தனை.. சிந்தனை சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இயங்கும் அதை விளக்கவும் நியாயப்படுத்தவும் பல சான்றிகளையும், சமகால நிகழ்வுகளையும் புத்தகம் முழுக்க வழங்கி இருக்கிறார்.. சிந்தனையால் என்ன நடக்கும் என்ன சிந்தித்தால் என்ன நடக்கும்... நல்ல சிந்தனை எது, கேட்ட சிந்தனை எது, ஏன் கற்பனை அவசியம், எந்த அளவு கற்பனை இருக்க வேண்டும் என்று பல்வேறு கோணங்களில் ஒரு தலைப்பை அணுகி இருப்பாரு..

இன்னும் சொல்லப்போனால் இந்த புத்தகம் முதல் பக்கத்திலே முடிந்து விட்டது, அதன் பின் எழுதப்பட்டவைகள் எல்லாம் அதன் நீட்சிகள் மட்டுமே... ஒரு கருத்தை நம் மனதில் சிந்தனையில் ஏற்றும் ஒரு முயற்சியே இந்தபுத்தகம்.

ஏற்கனவே என்னளவில் secret மற்றும் power of positive thinking, போன்ற புத்தகங்கள் படித்ததினால் இதில் எனக்கு புதிய செய்திகள் என்று எதுவும் இருக்கவில்லை  மாறாக இங்க இருக்கும் சில கார்பொரேட் சாமியார்களின் புகழை கொஞ்சம் அதிகம் பூசியது மட்டுமே ஒவ்வாமையாக இருந்தது.. இதுவரை நீங்கள் மேல் குறிப்பிட்ட எந்த புத்தகங்களையும் படித்ததில்லை என்றால் இந்த புத்தகம் நிச்சயம் சிந்தனைகள் பற்றிய ஒரு புதிய சிந்தனையாக இருக்கும்...

புத்தகம் : எண்ணங்கள்
பக்கங்கள் : 168
ஆசிரியர் : உதயமூர்த்தி
பதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் 
விலை : 70

No comments:

Post a Comment