#NaanVijay
நான் விஜய்
எப்பொழுதும் போல் எனது வாசிபிற்கு நெருக்கமான எழுத்தாளர் தோழர். நக்கீரன் அவர்களின் புத்தகம்.. ஒவ்வொருமுறையும் இவரது புத்தகங்களை திறக்கும் போதும் மனம் ஒரு வகை பதற்றதுக்குள்ளகிறது, மனம் ஒரு வலியை சுமக்கிறது.. நமது மண்ணுக்கும் மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகங்களை படிக்கும்போது ஏதும் செய்யாமல் நிற்கின்றோம் என்கிற குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.
கார்பொரேட் நிறுவனங்களின் லாப வெறிக்கும் எத்தனையோ நாடுகளும், காடுகளும் பலியகிறது, அதை அரசு சாமரம் வீசி நிற்கிறது... நமது நாடு மட்டுமல்ல உலகின் உள்ள எல்லா வளந்த நாடுகளும் வளரும் நாடுகளின் கழுத்தை அறுத்துதான் தன் கோர பசியை தீர்த்துக்கொள்கிறது.
உலக வர்த்தக கட்டிடம் இடிப்பிற்கும் மண்ணின் மரணத்திற்கும் உள்ள தொடர்பில் தொடங்குகிறது இந்த புத்தகம், தன்னை பெரிய அறிவாளியாய் காட்டிக்கொள்ளும் அமெரிக்க விஞ்ஞான மூலை காட்டின் ஒரு மூலையில் வாழும் ஆதிக்குடிகளின் முன்னாள் தொற்றுப்போனது ஒரு செய்தியை ஆணி அடித்தாற்போல் சொல்கிறது.. நமது அறிவியல் அறிவை விட அவர்களின் மண் பற்றிய அறிவு மேலானது..
வெறும் பறவை எச்சத்திற்காக பல நாடுகள் சண்டையிட்டதும் காத்திருந்து வாரி சென்று ஒரு நாட்டை காவு வாங்கியதும் மலைக்க வைத்த செய்தி.. நைரேட் கொடுக்கும் விவசாய மண்ணிற்காக ஏற்பட்ட போறும் அது தொடர்ந்திருந்தால் ஏற்படவிருந்த அபாயமும் பயமுறுத்துகிறது
பச்ச மாமா சாக்ர அறிவு வியப்புன் உச்சம், அமெரிக்க அறிவியல் மூலைகளால் அரியமுடியாததை அவர்கள் நிகழுத்தி காட்டிகொண்டிருந்தனர், அவர்களை நம்பாமல் அந்த அரசு அமெரிக்காவிடம் கை ஏந்தியது கேவலத்திலும் கேவலம்,
உயிர் எரிபொருள் என்னும் நிலத்தின் மீதான உழவர் மீதான வன்முறை ஒரு அதிகார வெறிதான்.. நாட்டில் சோற்றுக்கு கிடைக்க வேண்டிய நிலம் நாளை பிடுங்கி வண்டிகள் ஓட மட்டும் பயன்படபோகிறது என்பது இன்றே சிந்தித்து எதிர்வினை ஆற்ற வேண்டிய விஷயம்..
உயிர் எரிபொருளுக்கு அடுத்து உயிர் நெகிழி என்னும் அடுத்த ஆபத்தையும், தன் உண்மையையும் விளக்கிய கட்டுரை நம்மை இந்த விளம்பர உலகம் எப்படியெல்லாம் ஏமான்றுகிறது என்பதை திரைவிலக்கி காட்டுகிறது.. பசுமையை காக்கிறோம் என்ற பெயரில் மண்ணை அழித்து, உழவை கெடுத்து உணவில்லா ஒரு நிலையை உருவாக்கும் இப்படிப்பட்ட வளர்ச்சிகள் தேவையில்லாத ஆணிகள்..
உலகின் செயற்கையாய் உருவாக்கபட்ட ஒரு பாலைவனம் அது கடலைவிட 3மடங்கு உப்பு தன்மை கொண்டிருப்பதும் அதனால் பல கிலோமீட்டர் தள்ளி இருக்கும் விவசாய நிலம் மலடாவதும் ஏதேச்சையாய் நடந்தது போல காட்டப்பட்டாலும் அதற்கு பின் இருக்கும் உண்மை பருத்தி உற்பத்தி.. பணப்பயீர் என்கிற பெயரில் நடக்கும் அதிகார தாண்டவம், அதிலும் இதெல்லாம் நடப்பது தன்னை எளிய மக்களின் நாடக அடையாளபடுத்திகொண்ட சோவியட் ரசியாவில்.. எந்த கொள்கை ஆனாலும் காசுக்கு முன் எதுவும் நிற்காது என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய சான்று..
ஊர் மயமாக்கள் என்ற பெயரில் விளையும் மண்ணில் இருந்து அதன் பூர்வ குடிகளை துரத்திவிட்டு, கார்பொரேட் கூட்டிக்கொடுக்கும் கேடுகெட்ட உலக அரசாங்கங்களை நினைக்கும் போதெல்லாம் என்ன செய்யவேண்டும் என்பதே புரிவதில்லை.. உலகத்தை பட்டினி போட்டுவிட்டு இவ்வளவு வளர்ச்சி அடைந்து என்ன செய்யபோகிறோம்.. இன்று காசுக்காக எல்லாவற்றையும் அழித்துவிட்டு நாளை அடுத்த தலைமுறைக்கு என்ன மாதிரியான உலகை பரிசளிக்க போகிறோம் என்ற கேள்விகள் உள்ளுற உறுத்துகிறது..
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்..
மகாகவி . பாரதி
புத்தகம் : கார்பொரேட் கோடாரி
ஆசிரியர் : எழுத்தாளர் நக்கீரன்
பக்கங்கள் : 70
விலை : 70
பதிப்பகம் : காடோடி
No comments:
Post a Comment