#NaanVijay
நான் விஜய்
எழுத்தாளர் அசோக மித்திரன் அவர்களின் இரண்டு குறுநாவலும், 3சிறுகதையின் தொகுப்பே இந்த புத்தகம்,
வேறு மண்ணில் பிறந்து தமிழ்நாட்டிற்கு வந்து இங்கே தன்னை ஒரு சிறந்த எழுத்தாளராய் நிலைநிறுத்தி கொண்டவர் ஆசிரியர், இவரின் பல படைப்புகள் இந்திய மொழிகள் பலவற்றுள் மொழிபெயர்க்கபட்டுள்ளது, இந்த நூற்றாண்டின் சிறந்த படைப்பாளிகளில் இவரும் ஒருவர்..
ஒரு நாவல் என்பது அல்லது சிறுகதை என்பது அது எழுதப்பட்ட காலத்தின் பிரதியாகும், நமக்கு 2ம் உலகப்போரை பற்றி தெரிந்திருக்கும் ஆனால் அதை சிலவரிகளில் கடந்து இருப்போம், அந்த போர் நடக்கும் போது இந்தியா எப்படி இருந்தது, இங்கிருந்த மக்களின் மன நிலைமை என்ன? இங்கு இருந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? போன்ற கேள்விகளுக்கு நம்மிடயே பதில் இருக்காது.. அந்த கேள்விக்கான பதில் என்பது அந்த காலத்தை மையமாக கொண்ட எழுத்தாளர்களின் எழுத்துகளே ஆகும்,
சங்ககாலம் என்பதையும் அதற்கு முட்பட்ட காலத்தையும் நம்மிடையே இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்கள் எப்படி ஆதாரமாய் நின்று விளக்குகிறதோ, அது போல ஆசிரியரின் பம்பாய் 1944 என்கிற குறு நாவல் அன்றைய மக்களின் ஆசாதாரண சூழலை பேசுகிறது, அவர்களின் உணர்வுகளை நமக்கு கடத்துகிறது...
லீவ் லெட்டர் எனப்படும் இன்னொரு குறு நாவல் ஒரு சிறுவனை கதை சொல்லியாக்கி அவனை கொண்டு தன் அப்பாவின் பணி சூழலை புரியவைக்க முயற்சி செய்வதும், 2மனைவிகளை உடைய ஒருவரின் மன நிலையையும் ஓர் குடும்பம் அதனால் சந்திக்கும் சிக்களையும் அதையும் மீறி இருக்கும் ஒரு துளி காதலையும் இயல்பாக பேசி இருக்கிறது,
இவைகள் இல்லாம இன்னும் 3 சிறுகதைகளும் இருக்கிறது நண்பனின் தந்தை என்னும் கதையில் ஒரு எல்லாவற்றையும் இயல்பாக கடக்கும் ஒருவன் தன் தந்தை மரணத்தை எப்படி ஏற்றுக்கொள்கிறான் என்பதை 3நபராய் நின்று பார்த்து கதை சொல்லி இருக்கிறார் ஆசிரியர்
ஹார்மோனியம் வாசிக்கும் ஒரு ஏழை யாசகனின் சில நொடி சந்திப்பை, அவனின் திறமை என்று 2பக்கங்களில் ஒரு சிறு ஆய்வு போல அந்த நொடிகளை விளக்கி, அதன் வலியையும் நமக்கு கடத்த முயற்றிருக்கிறார்,
மூன்றாவது கட்டைவண்டி என்னும் சிறுகதை, இந்த மூன்று சிறுகதைகளும் அந்த 2குறு நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்மட்டில், 2-3 பக்கங்களில் முடிந்தாலும் ஒரு செய்தி சொல்லி கடந்துபோகும் ஒரு நிகழ்வு போல இருக்கிறதே அன்றி ஒரு கதையாய் மனதில் நிற்கவில்லை, இது என்னுடைய புரிதல், ஆனால் 2 குறு நாவல்களும் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார், என்ன மாதிரியான மன நிலைமையை பேசுகிறார் என்பதை மிக தெளிவாய் புரியவைக்கிறது..
இந்த குறு நாவலும், சிறுகதைகளும் 2010-11 காலகட்டத்தில் எழுதப்பட்டவை, இந்த காலகட்டத்தில் அமர்ந்து 2ம் உலகப்போரின் நிகழ்வுகளை கதையாக்கி இருப்பது அவரது மனோபலத்தின் வலிமையை புரியவைக்கிறது.
புத்தகம் : நண்பனின் தந்தை
ஆசிரியர் : அசோக மித்திரன்
பக்கங்கள் : 112
விலை : 100
No comments:
Post a Comment