Saturday, 8 July 2023

அமெரிக்காவின் தோள்சீலை போராட்டம்

சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி தமிழ் ஊடகங்கள் இணையத்தில் வெளியிடுகின்றன, அந்த செய்தியின் சாரம் மற்றும் பின்னணியை அறிய google உதவியை நாடியப்போது அதுக்கொடுத்த பின்னணி தகவல்கள்..

அமெரிக்காவில் பல மாகனங்களில் பெண்கள் மேல் ஆடை இல்லாமல் சூரிய குளியல் எடுக்க தடைவிதிக்கபட்டிருக்கிறது, இதை எதிர்த்து maryland என்னும் மாகனத்தில் ஒரு வழக்கு தொடரப்படுகிறது, அதில் ஒரு குழுவை சேர்ந்த பெண்கள் எங்களுக்கு மேலாடை இல்லாமல் கடற்கரையில் குளிக்கும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கபடுகிறது, ஆனால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து அங்கு மேல்முறையீடு செய்யவும் அனுமதிக்கவில்லை.

இதன்பின் அந்த பெண்கள் குழு வேறு வழியின்றி அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை கொண்டு செல்கிறது, அங்கிருக்கும் நீதிபதிகள், maryland நீதிமன்றம் நடந்த விதம் வருத்தமளிப்பதாக தெரிவித்து, இதை மறுவிசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது, ஆனால் அதற்கு நீதிமன்ற தரப்பு இது கலாச்சாரத்துக்கும், பெண்கள் பாதுகாப்பிற்கும் எதிரானது என்று சொல்லி மறுக்க, வழக்கை உச்ச நீதிமன்றமே கையில் எடுத்து விசாரணையில் இறங்குகிறது, அப்போது தான் அமெரிக்காவின் பிற மாகான பெண்களும் தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று சொல்லி போராட்டத்தில் இறங்குகின்றனர்,

அமெரிக்காவின் ஒரு மிகப்பெரும் தெருவில் பெண்கள் மேலாடை இல்லாமல், நிறங்களால் வரைந்துகொண்டு ஒரு பெரிய பேரணியையும் நடத்துகின்றனர், இதன் விளைவால் சில மாகானங்கள் அந்த இடத்தில் பெண்களுக்கு அந்த உரிமை வழங்க முன்வருகின்றனர், இதை தங்கள் வெற்றியாய் நினைத்து அமெரிக்க பெண்கள் கொண்டாடுகின்றனர்,

இதில் வழக்கீல் முக்கியாமாக வைக்கப்பட்ட வாதம், அமெரிக்கா இன்று ஒரு முன்னுதாரணமான நாடு, செல்வசெழிப்பில் வளர்ந்த நாடு, சமஉரிமை பேசும் நாடு, ஆனாலும் அது பெண்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுகிறது, அதாவது ஒரு ஆணுக்கு கடற்கரையில் மேலாடை இல்லாமல் சுற்றும் உரிமை இருக்கிறது ஆனால் அது பெண்களுக்கு இல்லை, காரணம் கலாச்சாரம், பாதுகாப்பு, அப்படி எங்களை பாதுகாக்க மறைக்க வேண்டும் என்றால், எங்கள் தலைமுடி கழுத்து, தோல்பட்டை என்று அனைத்தையும் மறைத்து உட்கார வேண்டியது தான், அதுதான் இந்த நாடு எங்களுக்கு கொடுக்கும் சமஉரிமையா என்று கேள்விகள் கேட்டு திணறடித்தார், இதன் விளைவு தான் சில மாகனங்களின் இந்த முடிவு, இருந்தும் இந்த வழக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த வழக்கை குறித்த செய்தித்தான் தமிழ் ஊடகங்கள் வெளியிட, அதன் comment பகுதியில் நான் பார்த்த சில கருத்துக்கள் என்னை இன்னும் சிந்திக்க செய்தது.. அந்த கருத்துக்களில் பெரும்பாலும் சொல்லப்பட்ட ஒரு வார்த்தை தோல்சீலை போராட்டம்..

நம் நாட்டில் தோள்சீலை அணிய நாம் போராடி, நம் பெண்கள் அந்த உரிமையை பெற்றிருந்தனர், ஆனால் இந்த பெண்கள் கழட்ட உரிமை தேடுகின்றனர், இதற்கு ஒரு முற்போக்கு கூட்டம் முட்டுவேறு கொடுக்கிறது, இவர்கள் எல்லாம் என்னவகை பெண்கள் என்று அடுத்து அந்த பெண்களின் நடத்தையை குறித்து விமர்சனங்கள் வைக்க தொடங்கிவிட்டனர், இதில் ஒருவர் இந்த முற்போக்கு சிந்தனை கொண்டுதான் பல பெண்களை ஆண்கள் முற்போக்கு போர்வையில் அனுபவிக்கிறார்கள் என்று ஒரு குற்றசாட்டையும் வைக்க, அதற்கு பல ஆமாக்களும், லைக்ஸ்யும் தெறித்துகொண்டிருந்தது...

என் சிந்தையில் தோள்சீலை போராட்டமும், இந்த அமெரிக்காப்பெண்களின் topless போராட்டமும் ஒன்றாகத்தான் தெரிகிறது, நீ மறைக்க வேண்டுமா வரிகட்டு என்று சொல்லும்போது, இது என் உடல், இதில் எதை அணியவேண்டும் என்பது என் உரிமை என்று பேசி சண்டையிட்ட உயிரை கொடுத்த அந்த பெண்களின் போராட்டத்தில் எத்தனை நியாயம் இருந்ததோ, அதே நியாயம் இந்த அமெரிக்காப்பெண்களின் போராட்டத்திலும் இருப்பதாகத்தான் நான் உணர்கிறேன், எல்லா பக்கமும் வளர்ந்த ஒரு நாடு இன்னும் ஒரு பெண்ணின் உடையில் அதை நியமிக்கும் அதிகாரத்தை தன்கையில் வைத்திருக்க முயற்சிக்கிறது என்றால், இன்னும் அது பெண்களை சரியாக மதிக்கவில்லை என்பதே அந்த நாட்டின் சட்டத்தில் எனக்கு ஏற்படும் புரிதல்,

முற்போக்குவாதிகள் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றும் கூட்டம் என்று சொல்பவர்கள் பிரச்னை ஒன்று மட்டும்தான், இந்த முற்போக்கு சிந்தனையால் இன்று பெண்கள் அவர்களுக்கான உரிமைகளை பேச தொடங்கிவிட்டனர், தாங்கள் எப்படி நடத்தபட வேண்டும் என்பதை இன்று அவர்களே முடிவு செய்கின்றனர், இதை பொறுத்துக்கொள்ள முடியாத கூட்டம் எப்போதும் போல் தங்களுக்கு தெரிந்த பெண்களை போக பொருளாக பார்க்கும் அந்த மனோ நிலையை அவர்கள் காமத்திற்காக இப்படி சுதந்திரம் பேசுகின்றனர் என்று திசை திருப்பிவிடுகின்றனர்,

என்னை பொறுத்த வரையில் தோள்சீலை போராட்டம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு பெண்களுக்கு இந்த topless போராட்டமும் முக்கியம்.. அது அவர்கள் உடல், அவர்கள் உடை அவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும், நாம் மூடிக்கொண்டு வேடிக்கை பார்ப்போம், அவர்கள் வெற்றியை கொண்டாடவிட்டாலும், அதற்கு வேறு சாயல் பூசும் கோழைதனத்தை காட்டாமல் இருங்கள் போதும்...

நான் விஜய் 

No comments:

Post a Comment