#sigmundfreud #Interpretation of #Dream
#கனவுகளின்_விளக்கம்
இந்த புத்தகம் 1899ல் சிக்மன்ட் பிராய்ட் எழுதிய interpretation of Dreams என்கிற புத்தகத்தின் தமிழாக்கம், அப்படியே பக்கத்திற்கு பக்கம் வரிக்கு வரி மொழிபெயர்க்காமல், தமிழ் மக்களுக்கு புரியும்படி அந்த புத்தகத்தை எளிமையாக்கி, அதோடு சிக்மன்ட் அவர்கள் செய்த சில ஆராய்ச்சியின் நம்பிக்கையை அதற்கு பின் வந்த பல விஞ்ஞானிகள் கேள்விக்குட்படுத்தியத்தையும் அதன் சிக்கல்களையும் சேர்த்தே இந்த புத்தகத்தில் சேர்த்திருக்கிறார் நாகூர் ரூமி, அதுதான் இந்த புத்தகத்தையும் சிறந்த மொழிபெயர்ப்பாக்கி இருக்கிறது என்றே சொல்லலாம்.
சிக்மன்ட் பிராய்ட் ஏன் உளவியல் துறையில் முக்கியம் என்று யோசித்துபார்த்தால் அவர் சொன்ன அனைத்தும் சரியாக இருந்திருந்தால் அது நியாயமாக இருக்கலாம் ஆனால், பிராயட் சரியான விளக்கம் கொடுக்கவில்லை என்றாலும் அவரை ஏன் கொண்டாடுகிறார்கள், காரணம் அறிவியல் அப்படித்தான் வேலை செய்யும். அறிவியல் சிலவற்றை தவறு என்று கூறும் ஆனால் அதற்கு பதிலாக அதுதான் சரி என்று தர்க்கம் செய்யாது.. அந்த தவறான அல்லது முழுமை அடையாத ஒரு கண்டுபிடிப்பை சரி செய்ய அல்லது முழுமைப்படுத்த முயற்சி செய்வார்கள், அப்படித்தான் இதுவும் என்னை பொறுத்தவரை, பிராய்ட் அவர்களின் தியரி ஒரு முழுமை பெறாத தியரி அவ்வளவே.. அவர் புரிந்தவரை இதுதான் சரி என்று முடிவு செய்ய பின்னால் வரும் விஞ்ஞானிகள் அதன் நம்பக தன்மையை சோதிக்கிறார்கள். இதனால் அந்த தியரி இன்னும் வலிமையானதாக மாறுகிறது.
கனவு என்பது என்ன? ஒரு வித மன நோய் அல்லது ஆழ் மனதின் பேச்சாற்றல், கற்பனை திறன் அல்லது, நாம் விரும்பும் வாழ்க்கையை கற்பனையில் அமைத்துக்கொடுகிறது என்றும் சொல்லலாம். கனவுகள் எத்தனை வகைப்படுகிறது.. அத்தனையும் நாம் நினைவில் இருந்து தான் தோன்றுகிறது, அல்லது அதுவே ஒரு உலகத்தை உருவாக்குகிறது என்று பல கேள்விகள் இதை சுற்றி இருக்கிறது, கிட்டத்தட்ட அவற்றிற்கெல்லாம் நியாயம் பேசும் ஒரு தியரியாக இது இருந்தாலும் அது முழுமையடையாமல் இருக்கிறது அதுதான் சிக்கல். இதனால் பிராய்ட் எல்லாவற்றையும் பாலுணர்வோடு தொடர்புப்படுத்தும் போதுதான் பிறரும் இதில் சிக்கல் இருப்பதாக ஆராய தொடங்குகின்றனர், காரணம் அம்மா மகன் உறவில் கூட அவர் பாலுணர்வை மையமாக வைத்து வாதிடுவதுதான் இதற்கு அடிப்படை காரணம்.
பிராய்ட் எல்லா கனவும் நிஜத்தில் நம்மால் நிறைவேற்றிக்கொள்ள முடியாத அல்லது நாம் விரும்புகின்ற ஒன்றை நமது கனவில் நிறைவேற்றி தருகிறது என்று விளக்குகிறார் இதற்கு விருப்பகனவு என்றும் பெயர் வைக்கிறார். அதே போல சில கனவுகள் நாம் விரும்புவதற்கு எதிராக அமைந்ததாக இருக்கும் அதற்கு பின்னால் பாலுணர்வு செயல்பாடு இருக்கலாம் என்று கூறுகிறார், அதிலும் பெரும்பாலும் அனைத்து கனவுகளும் நிச்சயம் பாலுணர்வு தொடர்புடைய கனவுகள் தான் என்கிறார் அதாவது அது எந்த வயதில் வந்தாலும்.. ஒரு உதாரணத்திற்கு, அப்பா இரக்கவேண்டும் என்று மகனும் அம்மா இறப்பதாக மகளும் கனவு காணுவதற்கு காரணம் மகன் தந்தை இடத்தை தாயின் இடம் பெறவேண்டும் என்கிற ஆசையை கனவு நிறைவேற்றுவதாக கூறுகிறார்..
அதோடு இல்லாமல் கனவுகள் நமக்குள் இருக்கும் ஆழ் மன அபிலாசைகளை காமம் கிரோதம், பெருமை, பொறாமை, போன்ற உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது என்று சொல்கிறார், அதாவது ஒருவரை நிஜத்தில் நாம் பெரிதாக மதித்தாலும் உள்ளார அவர்மேல் இருக்கும் பொறாமையோ, கோவமோ, வன்மமோ நம் கனவு காட்டிக்கொடுத்துவிடும் என்று சொல்கிறார். ஆனால் சிக்மன்ட் கனவுகளை தேடி பார்த்து விளக்கம் சொன்னதெல்லாம் அவரிடம் வந்த மனநோயாளிகளின் கனவுகள் இதனால் இவருக்கு பின் வந்த பலர் அவர் நல்ல நிலைமையில் இருக்கும் மக்கள் கனவை விளக்கவோ ஆராயவோ இல்லை, இதன் காரணம் தான் அவரின் ஆராய்ச்சியை முழுமையடையாத ஒரு தியரி என்று பின்வருபவர்கள் சொன்னார்கள்.
இன்னும் பல சுவரசியமான புரியாத கனவுகளை புரிந்துகொள்ள இது ஒரு ஆரம்ப நிலை கையெடாக நிச்சயம் இருக்கும். அறிவியல் மற்றும் உளவியல் சார் துறைகளை விரும்புவோர் படிக்கவேண்டிய மிக முக்கிய புத்தகம் இது.. அதோடு இது உலகின் படிக்கவேண்டிய 5 முக்கியமான புத்தகங்களில் ஒன்றாக இது சொல்லப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
புத்தகம் : கனவுகளின் விளக்கம்
ஆசிரியர் : நாகூர் ரூமி (சிக்மன்ட் பிராய்ட் )
பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ்
பக்கங்கள் : 138
விலை : 188
No comments:
Post a Comment