#நான்விஜய்
#நம்மாழ்வார்
புத்தகம் : 1
2024 புத்தாண்டில் பின்பற்ற பலா விஷயங்களை நீங்கள் தெரிவு செய்திருந்தாலும் இந்த சிறிய புத்தகத்தையும் ஒருமுறை படித்துவிடுங்கள்
ஒரு நோய் நமக்கு எதற்கு வருகிறது என்பதற்க்கான அடிப்படை புரிதல் இருந்தால் மட்டுமே அதற்க்கான தீர்வை கண்டுபிடிக்க முடியும், அதைத்தான் வள்ளுவர் நோய் முதல் நாடி என்கிறார்.. அதாவது அதன் அடியை வேறை கண்டுபிடிக்க வேண்டும் பின்புதான் அதற்க்கான தீர்வு கிடைக்கும்..
பெரும்பாலும் நமக்கு வரும் எந்த நோய்க்கும் மருந்து அவசியம் இல்லை, அதன் பணியை செய்ய அமைதியாக காத்திருந்தாலே போதுமானது.. ஏனெனில் நாம் நோய் என்று நினைக்கும் பல விஷயங்கள் உண்மையில் நம் உடலை சீர் செய்து கொண்டிருக்கிறது, ஜுரம் ஏன் வருகிறது என்று கவனித்தால் அது உடலை காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றி கொண்டிருக்கிறது என்பது நமக்கு புரியும்.. அதை தடுக்கும் பொழுது தான் உண்மையில் நமக்கு பெரும் பிரச்சனை வரும்.. இதைத்தான் இந்த சிறிய புத்தகத்தின் மூலம் நம்மாழ்வார் ஐயா நமக்கு கடத்த முயற்சிக்கிறார்.
புத்தகம் : நோயினைக் கொண்டாடுவோம்
ஆசிரியர் : கோ. நம்மாழ்வார்
பதிப்பகம் : தன்னறம்
பக்கங்கள் : 25
No comments:
Post a Comment