மிக பொருத்தமான பெயர்... பூப்பு புத்தகத்தை பற்றி பேசுவதற்கு, இந்த புத்தகம் ஒரு நிகழ்வை மனதில் நிறுத்தி சென்றது.. அதையும் சொல்ல விருப்பம் கொண்டேன்
சென்னை பெரும் மழை வெள்ளத்தில் திருவொற்றியூர் பகுதியில் கிட்டத்தட்ட 8 இருந்து 12 அடி உயரம் வரை வெள்ளம் சூழ்ந்தது இது பெரும் வெள்ளத்தில் கிட்டத்தட்ட 3 நாட்கள் உணவு பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை தினம்தோறும் நானும் என் நண்பர்களும் விநியோகித்து கொண்டிருந்தோம், ஒரு நண்பன் அந்த வேளையில் உள்ளே நிறைய பெண்கள் இருக்கிறார்கள் அதில் யாரோ ஒருவர் மாதவிடாய் காலத்தில் இருந்திருக்கலாம் அவர்களுக்கு அணையாடை கிடைக்க வழி இல்லையே நாம் எதாவது செய்தாக வேண்டும் என்று சொல்ல, அதற்கான முயற்சியில் இறங்கினோம்... இரவு 11 மணி அளவில் பெரம்பூர் மாதா கோவில் சில தொண்டு நிறுவனங்கள் அணையாடை இலவசமாக தருகின்றனர் என்று அறிந்து செல்லும் வழி எல்லாம் வெள்ள பெருக்கு இருப்பினும் எப்படியோ கடந்து சென்று அதை வாங்கி கொண்டோம், கிடைத்த அளவு போதுமானதாக தோன்றாத காரணத்தால் கையில் இருந்த காசுகளிலும் எந்தெந்த கடைகளில் கிடைத்ததோ அத்தனையும் வாங்கி கொண்டு களத்தில் இறங்கினோம்...
45 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா கை எடுத்து கும்பிட்டு சொன்னார்... இதை எப்படி கேட்பது என்று விழித்துகொண்டிருந்தோம் கடவுள் போல வந்திங்க... ரொம்ப நன்றிப்பா உங்களுக்கெல்லாம்... என்று சொல்லி அதோட நில்லாமல், ஒவ்வொரு பெண்கள் இருக்கும் வீட்டையும் மாடியில் நின்று எங்களுக்கு காண்பித்தும் அவரே பலபேரை கூப்பிட்டும் வாங்கி கொள்ளும் படி சொன்னார்... சில பேர் தயங்க.. நம்ம வீட்டு புள்ளைங்க வந்துருக்கு தயங்காமல் வாங்குங்க என்று ஒரு குரல் கொடுத்தார்... அன்று பெரும் திருப்தி கிடைத்தது.. இங்கிருந்த மக்களுக்கு உளமார எதோ செய்துவிட்டோம் என்று...
பூப்பு மீண்டும் அந்த அழகிய தருணத்தை நினைவு படுத்திவிட்டது... மாதவிடாய் சிக்கல்களை எந்த தோய்வும் இல்லாமல் சிறந்த நடையில் எளிதில் விளங்கும் படி சொல்லி இருக்கிறார் நூல் ஆசிரியர், ஒரு பெண்ணின் சிந்தனையில் தோன்றும் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்ததோடு... சில வினாக்களை சமூகத்தின் மீதும் விட்டெரிந்திருக்கிறாரார்..
ஒரு சமூகத்தின் மூடத்தனத்தில் பெரும்பாலும் சிக்கி கொள்வது பெண்கள் தான்.. அதிலும் இந்த மாதவிடாய் ஒரு விடாது கருப்பாய் பலகாலமாக பெண்களை தூரத்திக்கொண்டே இருக்கிறது.. இதை வைத்து சமூகம் ஒவ்வொர் முறையும் பெண்ணை ஒதுக்கி, தீட்டு என்று தீண்டிக்கொண்டே இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்து இயம்பிருக்கிறார்...
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது போல பெரும்பாலான வீடுகளில் இந்த மூடதனம் பெண்ணின் மேல விழ பெண்ணே காரணமாகிறாள் என்பது மறுக்க முடியாத உண்மை...
எனை பொறுத்தவரை பூப்பு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் படிக்க வேண்டிய முக்கிய சிந்தனை...
இன்னும் பல இல்லங்களில் இந்த பூப்பு பூத்து தெளிவை பரப்பட்டும்...
புத்தகம் : பூப்பு
ஆசிரியர் : ரேணுகா தேவி
பதிப்பகம்: வாலறிவன் பதிப்பகம்
பக்கங்கள் : 48
No comments:
Post a Comment