இந்தியக் கலைச் செல்வம் என்னும் இந்த தலைப்பில் ஆசிரியர் இந்திய சிற்பகலை மற்றும் சித்திர கலை பற்றி விரிவாக பேசி இருக்கிறார்...
ஆரம்பமே அட்டகாசம் என்பது போல்... எல்லோரா, அஜந்தாவை பற்றிய அவரது வர்ணனை அப்படியே கண்முன் காட்சி படமாய் நிறுத்துகிறது... பௌத்த மதத்தில் உள்ள இருவேறு பிரிவுகலான ஹினாயான பௌதம், மகாயான பௌதம் பற்றியும் அதை சார்ந்த தகவல்களும் இந்த புத்தகத்தின் மீதான ஈர்ப்பை இன்னும் அதிகப்படுத்தி விடுகிறது,
புவனேஸ்வர் என்னும் ஊரில் மட்டும் 7000 கோயில்கள் இருந்ததாகவும் இன்று அதில் 500 கோவில்கள் மட்டும் மிஞ்சிருக்கிறது என்பது போன்ற தகவல்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டுசெல்கின்றன
ஹோய்சலர் என்னும் இனத்திற்கு அந்த பெயர் காரணம் பற்றி நகைச்சுவை துணுக்குகளையும் தூவிவிட்டு கடந்துவிடுகிறார்... அதுவும் ஒரு அறிய தகவலாகவே மனதில் பதிகிறது
ஒரு கட்டுரையில் ஒரு பெண் முகம்மரைக்காமல் எப்படி பொட்டிடுவது என்று சொல்லும் பொது இது என்ன சம்மந்தமே இல்லமால் உருட்டுகிறார் என்று தோன்றிய பின் அடுத்த நொடியிலே அதை தான் கற்றுக்கொண்டது ஸ்ரீரங்கம் கோவிலில் என்றும் அதே போல் ஒரு சிற்பம் திருநெல்வேலி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருப்பதை சொல்லி பிரம்பிப்பூட்டுகிறார்
அதோடு இல்லாமல் தமிழகத்தில் சிற்பங்கள் மேலை நாடுகள் போல இல்லமால் ஒரு அதீத கற்பனை சக்தியை கொண்டிருப்பதையும் ஒரு கவிதைக்கு ஒப்பாக அதை வர்ணிக்கும் போதும் இனி ஒவ்வொரு கோவில் சிற்பத்தை பார்க்கும் போதும் அதன் பின்னால் உள்ள சிற்பி சொல்ல முற்படும் கவிதையை கேட்க மனம் நிச்சயம் ஆவல் கொள்ளும்.. அதிலும் குறிப்பாக தஞ்சை பெருவுடையார் கோவில் நடராசர் சிற்பத்தின் சிறப்பியல்பை அவர் சொன்ன பிறகே இத்தனை முறை சென்று கவனியாது விட்டோமே என்று மனம் உருத்தியது
அதிலும் நமக்கு தெரிந்தவரை கோவில்கள் இருவகை ஒன்று திராவிட முறைமை, மற்றொன்று ஆரிய முறைமை, ஆனால் இந்தியாவில் மூன்று முறைகளில் கோவில் உள்ளது நாகரம், வேசரம், திராவிடம், அது மட்டும் அல்ல அப்பர் பெருமான் இன்னொரு படி மேலே போய் 7 வகை கோவில்கள் தமிழிலே உண்டு என்றும் அவை
1, மாடகோவில்
2, கரக்கோவில்
3, ஞாழற் கோவில்,
4, கொடுமுடிக் கோவில்
5, இளங்கோவில்
6, மணிக்கோவில்
7, ஆலக்கோவில்
இப்படி விவரிக்க கோவிலை பார்க்கும் பார்வையே இனி மாறப்போகும்
இதோடு இல்லாமல் அங்கங்கே தேவாரம், திருவாசகம், கம்பன், பாரதி, என்று கவிதை தூரல்களை தூவி விடுகிறார்...
ஒரு புள்ளிக்கு மேல் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லும் போது கடைசி சில கட்டுரைகள் கொஞ்சம் கடுப்பேத்துகிறது...
மற்றபடி இந்த புத்தகத்தை படித்த பின்பு நாம் கோவில் செல்லும் போது கோவில் சிற்பங்களில் நம்மை அறியாமல் கவனம் செல்லும், அதன் பின் உள்ள கவிதைகளை நிச்சயம் மனம் தேடும்...
புத்தகம் : இந்தியக் கலைச் செல்வம்
ஆசிரியர் : தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
பதிப்பகம் : கௌரா புத்தக மையம் (நாம் தமிழர் பதிப்பகம்)
பக்கங்கள் : 130
விலை : 75
No comments:
Post a Comment