#NaanVijay #நான்விஜய்
இந்த உலகின் பல பக்கங்களில் பல பிரச்சனைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது, இதற்கு என்னதான் அடிப்படை காரணம் என்று தேடினால் கிடைக்கும் பதில் மதம், கடவுள், வேதங்கள், அன்பை பரப்ப வந்திருக்கும் அனைத்து மதங்களும் அதை பரப்ப தன் கையில் ரத்த கரையோடு தான் அந்த பரப்புரையை செய்கின்றனர் என்பதுதான் அபத்தமான உண்மை
தோழர் புவனன் எழுதிய இந்த புத்தகத்தை பற்றி கேள்விப்பட்ட சில தோழர்கள் பல இடங்களில் அலைந்து திரிந்து இதன் பாகங்களை திரட்டி இன்று ஒரு முழு புத்தகமாக நமக்கு திரட்டி தந்திருகின்றனர், இந்த புத்தகம் நான்கு குறு புத்தகங்களின் தொகுப்பாகும், பெரியாரின் சிந்தனையால் ஏற்கப்பட்ட தோழர் மதங்களை அதன் புனித நூல்களை பகுபாய்வு செய்து, அதன் கதைகளை பகுத்தறிந்து விமர்சனம் செய்திருக்கிறார், மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்ட எவர் இந்த புத்தகத்தை படித்தாலும் இவரை தேடிகண்டுபிடித்து அடிக்க கண்டிப்பாக தேடுவார்கள் என்பது உண்மை, ஆனால் அறிவுள்ளவர்கள் பகுத்தறிய தெரிந்தவர்கள் அதில் உள்ள உண்மையை புரிந்து கொள்வார்கள், வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் மத புத்தகங்கள் வெறும் பிதற்றல்கள் என்று நிரூபிக்கவே ஒருவர் அதை படித்து, அவர் எந்த நோக்கத்தோடு அதை படித்தாரோ அது நிறைவேறிவிட்ட சந்தோசத்தோடு அதை பற்றி பக்கம் பக்கமாக கிழித்து தொங்கவிட்டிருக்கிறார் என்பதே மிக பெரிய உண்மை,
இறுதியில் நாத்திகம் ஏன் தேவை, அதனால் இங்கு என்ன மாற்றம் நடந்திருக்கிறது, என்று பேசுகிறார், அவர் சொன்ன அத்தனையும் உண்மை தான் , இங்கு கலாச்சாரம் என்று சொல்லப்பட்ட பல விஷயங்கள் மாறிவிட்டது, முன்பு போல ஜாதிய கொடூரத்தை வெளிப்படையாக பல ஊர்களில் இன்று செய்ய முடியாது, பெண்களை அடிமைப்படுத்துவது என்பதை இன்று சட்டப்படி குற்றமாகியது, மறுமணம், விவாகரத்து எல்லாம் இயல்பில் வந்துவிட்டது, ஆனால் கடவுள் நம்பிக்கை?
இன்று உண்மையில் எத்தனை பெயர் நாத்திகவாதி, ஏன் தோழரின் கொள்கை குரு பெரியாரை பின்பற்றுவதாக சொல்லும் கட்சியில் யாரால் இன்று வெளிப்படையாக கடவுள் மறுப்பு பேச கூடிய தைரியம் இருக்கிறது, சனாதானத்தை எதிர்க்கிறோம் கடவுளை அல்ல கடவுள் நம்பிக்கையை அல்ல என்று சப்பைகட்டு கட்டும் பெரியாரியக்க தோழர்களை என்ன செய்வது?.. மனிதன் வளர அறிவு வளர்கிறது, அறிவு வளர பல மடைமைகள் உடைக்கிறது, கூடவே கடவுள் வேறு பரிணாமம் கொண்டு இங்கு வாழ்ந்து கொண்டே தான் இருக்கும்.. பயம் இருக்கும் வரை கடவுள் இருப்பார்..
சுவாமி விவேகானந்தர் சொன்னது போல இன்றைய உண்மையான நாத்திகம் என்பது மனிதன் தன்னம்பிக்கையோடு இருப்பது தான், தன்னம்பிக்கை அற்றவனுக்கு கடவுள் நம்பிக்கை தான் ஒரே பிடிப்பு.. ஆனால் அது பிற உயிரை வாங்கும் அளவுக்கு மூடத்தனம் ஆவதுதான் பயத்தின் உச்சம்..
புத்தகம் : கீதையோ கீதை, பைபிலோ பைபிள், குர்ஆனோ குரான்
ஆசிரியர் : தோழர் புவனன்
பதிப்பகம் : நிகர் மொழி பதிப்பகம்
பக்கங்கள் : 216
No comments:
Post a Comment