#NaanVijay
#Netflix
#DocumentarySeries
2018ல் டெல்லியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 11பேர் தூக்கில் தொங்கி இறந்திருகின்றனர், மொத்த ஊரும் ஷாக், என்ன நடந்திருக்கும், இது கொலையா, தற்கொலையா என்று பல கேள்விகள் உலாவர தொடங்குகிறது இந்த டாக்குமெண்டரி...
பலகட்ட விசாரணைகள் சோதனைகளுக்கு பிறகு இந்த வழக்கையே திருப்பி போடும் படி சில புத்தகங்கள் கிடைக்கிறது, அது அந்த குடும்பம் தொடர்ந்து 11வருடங்கள் எழுதி கொண்டிருந்த புத்தகம், அதுதான் இந்த கதையை தலைகீழாக திருப்பி போடுகிறது, அந்த புத்தகத்தில் இந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் என்னென்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்று அந்த புத்தகத்தில் இருக்கிறது, அதன்படி தான் அவர்கள் வாழ்கிறார்கள், வாழ்ந்தார்கள், மரணித்தும் போனார்கள், ஆம் அவர்கள் மரணத்திற்கு முன்பு வரை நடந்த அனைத்தும் அந்த டைரியில் எழுதிய படியே நடந்திருக்கிறது...
லலித் என்னும் அந்த வீட்டின் மூத்த மகன் தான் இதற்கு பின்னாளில் இருந்த psycho.. 2007ல் அவன் அப்பா இறந்த சில நாட்களில் அவன் அப்பா தன்னிடம் பேசுவதாக நம்ப தொடங்கியவன், பின்னாளில் தன் மூலமாக தன் குடும்பத்திடம் பேச ஆரம்பித்ததாக நம்பவும் வைத்திருக்கிறான், அவன் மூலமாக அவன் அப்பா பேசுவதை அந்த குடும்பம் நம்ப தொடங்கியதற்கு காரணமும் இருந்திருக்கிறது, அவன் அப்பா சொன்னதாக சொல்லப்பட்ட சில விஷயங்கள் நடக்கவும், அதன் மூலம் தங்கள் குடும்பம் செழிப்பாக மாறுவதாகவும் உணர்ந்ததால் வந்த வினை தான் இந்த கொடூர மரணங்கள்..
சில வருடங்களுக்கு முன்பு லலித் ஒரு விபத்தில் சிக்க அதில் இருந்து மீண்டும் வரும் போது மெண்டல் trauma வால் குரலை இழக்கிறார் அப்போதே அவரை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியும் செய்யாத குடும்பம் விளைவு தொடர்ந்து தந்தையின் மரணம், பின்பு தன்னையே தன் தந்தையின் வடிவமாக நினைக்க தொடங்க, சந்திரமுகி படத்தில் வருவதை போல அவ சந்திரமுகி அறைக்கு போனா சந்திரமுகியா தன்னை நெனச்சுக்கிட்டா சந்திரமுகியாவே மாறிட்டான்..
ஒரு psycho கூட்டிட்டு வந்து அவன் சொன்ன rituals பண்ணிக்கிட்டு கடைசியா அவன் சொன்னான்னு குடும்பமே தூக்குல தொங்கி இருக்கு... இதுக்கு முன்னாடி யாகம்ல பண்ணி கடவுள் கிளைமாக்ஸ்ல வந்து நொட்டுவாருன்னு நம்பி இருந்துருக்கானுங்க.. மூடநம்பிக்கையோட உச்சம் இது.. ஒருத்தனுக்கு மனநிலைமை சரி இல்லைனு சொல்லும் போதே மருத்துவரை பாத்திருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது, மனநல மருத்துவரை பார்த்தாலே அவன் பைத்தியக்காரனு நம்புற பொது புத்தியால வந்த வினைதான் இந்த மரணங்கள்.
இதில் கொடுமை என்னனா 14வயது குழந்தை உட்பட, ஒரு மாஸ்டர் டிகிரி படிச்ச பொண்ணு இப்புடி பல சமூகத்தால அறிவாளிகளா அடையாளம் காணப்பட்டவர்கள் இந்த குடும்பத்தில் இருந்ததுதான்.. இது மிகப்பெரிய முரண்..
பகுத்தறிவு என்பது படிப்பதால் வரதில்லை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்
#Webseries : House of Secrets
#OTT : Netflix
No comments:
Post a Comment