Sunday, 9 March 2014

போராட்டம்


போராட்டம் 

                                               போராட்டம் 

                     
                         இன்றைய இந்தியாவில் எங்கும், எதற்கும் போராட்டங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன, ஆனால் இந்த போராட்டங்கள் இந்த  மாற்றங்களை சாத்தியபடுத்தியதா என்றால் நிச்சயம் இல்லை, நம் நாட்டில் போராட்டங்களால் என்ன பயன் என்ற கேள்வி நம்மிடையே எழும்பதான் செய்யும், இந்த சாத்தியமற்ற அல்லது வெற்றியை தராத போராட்டங்கள் நிச்சயம் நம் மனதில் போரட்டத்தின் மீது நமக்குள்ள மதிப்பினை தரம்தாழ்த்த செய்யும், இந்த தோல்விகளுக்கு காரணம் நிச்சயம் போராட்டங்கள் இல்லை, போராடியவர்கள் மட்டும்தான், இது சாத்தியமல்ல போரடுபவர்கள் உணர்வு மதிக்கப்படுவதில்லை என்று நீங்கள் ஆயிரம் விளக்கம்  மொழிந்தாலும், போராடுபவர்களின் ஸ்திர தன்மை இல்லை என்பதே மன்னிக்க முடியாத உண்மை, இது  ஏன் மன்னிக்க முடியாத உண்மை என்றால் போராடும் முனைப்போடு களம் கண்ட பின் பலரும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையும் முயற்சியில்தான் இறங்குகின்றனர் ஆனால், நடுவில் கிடைக்கும் சில தற்காலிகமான முடிவுகளுக்கு சமதித்து, அவர்கள் போராட தொடங்கிய அந்த உயரிய நோக்கத்தை அல்லது வெற்றியை இழந்து விடுகின்றனர், எடுத்த முடிவில் உறுதியான வெற்றிக்கு பதிலாக, தற்காலிக தீர்வை மட்டுமே தேடுகின்ற ஒரு போராட்டமாக இன்றைய போராட்டங்கள் மாறி இருப்பதால், இந்த போராட்டங்களால் நிச்சயம் இந்த இந்திய தேசத்தில் மட்டுமல்ல, அவர்கள் வீட்டில் கூட ஒரு துரும்பையும் அசைக்க எவராலும் முடியாது, எனவே மாறவேண்டியது போராட்டங்கள் அல்ல, போராடுபவர்கள் என்ற உணர்வை நாம் பெற்ற பின்பு, நம் லட்சிய முடிவை எட்டும்வரை நம் போராட்டத்தை தொடர்ந்தால் நிச்சயம் அந்த போராட்டம் இந்த நாட்டை மட்டுமல்ல, இந்த உலகையே மாற்றும்...........................

                  போற்குடியில் பிறந்துவிட்டு.................!
                                                 போர்கலத்தை கண்டு அஞ்சுவதா.................!

                            நான் விஜய் 
 

No comments:

Post a Comment