Sunday, 16 October 2022

சிறுவர்களுக்கான தத்துவம் - புத்தக பார்வை

92/100

#NaanVijay

நான் விஜய்

இன்றைய கல்வி முறை பிள்ளைகளுக்கு ஒரு சிறைசாலை போல செயல்படுவதாக பலநாள் உணர்ந்தது உண்டு... பள்ளிக்கு செல்வது பிள்ளைகளுக்கு எவ்வளவு ஒரு கடுமையான செய்தி, நாளை பள்ளி விடுமுறை என்பது ஒரு கொண்டாட்டத்திற்கான செய்தியாக இன்று காணப்படுகிறது... அந்த அளவிற்கு பிள்ளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றனரா என்று சிந்தித்தால், பதில் அதில் பாதி உண்மை என்பதே

பள்ளிக்கூடம் ஒரு மகிழ்ச்சியின் தலமாய் மாறாததற்கு காரணம் எப்படி பள்ளியோ அதே போல தான் பெற்றோர்களும், பிள்ளைகளை வெறும் மதிப்பெண் பட்டியலாய் மட்டும் பார்க்கும் மனநோய் தான் காரணம், எனில் இப்படிபட்ட காலகட்டத்தில் பிள்ளைகளுக்கு பள்ளியை எளிமை படுத்துவது எப்படி என்பதை தான் 8தலைப்பில் இந்த புத்தகம் மிக எளிமையாக சொல்லி இருக்கிறது.. இது குழந்தைகளுக்கான புத்தகம் என்றாலும் அனைத்து பெரியவர்களும் நிச்சயம் படிக்க வேண்டும், அப்போதுதான் பிள்ளைகளின் கற்றல் பற்றிய தெளிவு பிறக்கும், எப்படி சொல்லி தரவேண்டும் என்ற அறிவு விருத்தி ஏற்படும்

பார்த்தல் என்பது வெறும் பார்த்தல் அல்ல நோக்குதல், அதாவது பார்க்கும் யாவையும் உள்வாங்க வேண்டும், அனைத்தையும் கூடுமான மட்டும் மனதில் பதிய வேண்டும், என்றும் அதை எப்படி செய்வது என்றும் அதற்க்கான பயிற்சிகளும், எடுத்துக்காட்டுகளும் அருமை.

சிந்தித்தல் என்றால் உள்ளுற பேசி பதிலை தேடுதல், தனக்குள் ஒன்றை உள்வாங்கி அதைக்குறித்து தனக்குள்ளே கேள்வி எழுப்பி  அதற்கு தானே பதில் அளித்தல், அதாவது சிந்தித்தல் என்றால் ஒன்றை மனதில் நிறுத்தி தீர ஆராய்தல்

படித்தல் என்பது வேறு பார்த்தல் என்பது வேறு என்று விளக்குகிறார் ஆசிரியர், அர்த்தம் புரியாத ஒரு வார்த்தையை படித்தால் அது வெறும் பார்த்தல் மட்டுமே அது படித்தல் ஆகாது, படித்தல் என்பது அந்த வார்த்தையை பார்க்கும் போது மனம் அதன் அர்த்தத்தை உணர்தல் என்று விளக்குகிறார்.

எழுதுதல் என்றால் தோன்றுவதை எழுதுவது, எழுதியபின் அந்த வாக்கியம் முழுமை பெற்றதா அல்லது அர்த்தமற்று நிற்கிறதா என்ற புரிதலை அடைதல், உணர்வதை சரியான வாக்கியமாய் வடிக்க முடிந்தால் அதுவே சரியான எழுதுதல் ஆகும் என்கிறார் ஆசிரியர் இந்த பகுதி குழந்தைகளுக்கு மட்டுமல்ல தன்னை ஒரு எழுத்தாலனாய் நிறுத்திக்க நினைக்கும் அனைவரும் படிக்க வேண்டியது

கணிதம் என்பது ஒரு கடின பாடம் என்பதை இந்த பகுதி எளிமை படுத்த உதவுகிறது, அதை ஒரு கதையாடல் போல எப்படி மாற்றியமைப்பது என்பதை அழகான உதாரணங்களால் விளக்குகிறார் ஆசிரியர்

கலை என்பதென்ன அது ஏன் சுவரஷ்யமாய் பிள்ளைகள் எடுத்துக்கொள்கிறார்கள், அதை போல பிற பாடங்களை பிள்ளைகள் கொண்டாட என்ன வழிமுறை என்று விளக்குகிறார்... சுதந்திரம் என்னும் சிந்தனையின் வலிமையை கலையின் மூலம் எளிமைப்படுத்தி இருக்கிறார்..

எப்படி ஒரு பிள்ளைக்கு நன்மைஎது என்று விளக்க முடியும், எது நன்மை தரும் செயல் என்று பிள்ளைகளை ஏற்க வைக்க முடியும், என்பதை நல்லவறாக இருத்தல் என்னும் தலைப்பில் தக்க உதாரணங்களோடு சொல்லி இருக்கிறார்..

கற்றல் என்றால் என்ன? எது உண்மையில் கற்றல் என்பதாகும், படித்தலும், சிந்தித்தலும் எப்படி கற்றலாய் மாறுகிறது, சரியான கற்றல் என்றால் என்ன? பிறரிடம் இருந்து எப்படி கற்பது, நம்மிடமிருந்து நாம் எப்படி கற்பது என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல நம்மை போன்ற பெரியவர்களுக்கும் ஒரு அத்தியாவசிய பாடம்...

உங்கள் வீட்டில் பிள்ளைகள் இருந்தால் அவர்களை புரிந்துகொள்ள நீங்களும், படிப்பை புரிந்துகொள்ள அவர்களும் நிச்சயம் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.

புத்தகம் : சிறுவர்களுக்கான தத்துவம்
ஆசிரியர் : சுந்தர் சருக்கை
பதிப்பகம் : எதிர் வெளியீடு
பக்கங்கள் : 100
விலை : 300

No comments:

Post a Comment