Wednesday, 26 October 2022

ஜானு - புத்தக பார்வை

98/100

#NaanVijay

நான் விஜய்

இந்தியா என்னும் நாட்டின் இறையான்மை என்னும் பொய்யை சில புத்தகங்கள் முகத்தில் காரி உமிழ்ந்து கிழிதெரியும், சில கட்சிகள் தங்களை பாமரர்களின் கட்சிகள் என்று மார்தட்டிக்கொள்ளும் போது நெஞ்சில் மிதித்து கேள்விகேட்கும், சில மாநிலத்தின் அழகில் நாம சிலாக்கிது நிற்கும் போது அதன் கொடூரபக்கங்களை நம் கண்முன்னே வரிவரியாய் காட்டும், இதையெல்லாம் ஒரே புத்தகம் செய்தால் அந்த புத்தகம் ஒருவரின் வாழ்வின் பயணங்களாய் இருந்தால்...

ஸி. கே ஜானு வயநாட்டின் போராளி பெண், இதற்க்கு முன்பு இப்படி ஒரு பெயரை கேட்டிருக்கிறீர்களா, நான் கேள்விக்கூடபட்டதில்லை, ஆனால் இன்று வியந்து பார்க்கிறேன், இந்தியாவின் மலையின மக்களின் முகவரியாய் ஐ. நா. வின் படிக்கலை ஏறிய ஒரே இந்திய பெண், இவர் வாழ்வியலை படியுங்கள் பின்பு கேரளா கடவுளின் தேசமாய் தெரியாது, பிணம் தின்னி கழுகின் கூடாரமாய் தெரியும், கம்யூனிஸ்ட்கள் போராளிகளாக தெரிய மாட்டார்கள், கொடூர பொறுக்கிகளாய் தெரிவார்கள்...

இந்த புத்தகம் காட்டை பற்றி ஆரம்பிகிறது, அதன் வாழ்வியலை பேசுகிறது, அதன் அழகை காட்டுகிறது, அங்கிருப்பவர்களின் தனித்தன்மையை போற்றுகிறது, மலையின மக்களை வாழ்த்துத்துகிறது...

கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் காட்டு வேலை போக மீதி நேரத்தில் பண்ணையாரிடம் செய்த வேலைகளை பேசுகிறது, அப்படி வேலை செய்யும் போது எங்கிருந்தோ வந்த கட்சியினர் அவர்களை வாழ்க ஒழிக கோசம் போட வண்டியில் ஏற்றி சென்றதை கூறுகிறது, அந்த கட்சியின் கொடியில் இருந்த சுத்தியலும் அறிவாலும் எதோ ஒன்றை பேச, எதற்கென்றே தெரியாமல் நின்ற மலையின மக்களின் அறியாமையை பேசுகிறது..

உங்கள் நிலத்தை காப்பற்றுகிறோம் வா போராடுவோம் என்றது கட்சி, உனக்கு சம்பள உயர்வை தருகிறேன் வா போராடுவோம் என்றது கட்சி, உன் வாழ்க்கையை வசந்தமாகிறேன் வா என்றது கட்சி, இதையெல்லாம் அழிப்பவர்கள் பண்ணையார்கள் என்றது கட்சி... ஆவேசம் பொங்க அந்த கூட்டம் போராட்டத்திற்கு போனது... போனபின் ஒவ்வொருவர் முகத்தை பார்த்து இப்படியாய் பேசிக்கொண்டது, ஏலே மேடையில இருக்கிறது உங்க பண்ணையாருதான, அட ஆமாம், பக்கத்துல பாரு உன் பண்ணையாரு உக்காந்துட்டு இருக்காரு... அட இது என்னப்பா அவங்கள எதிர்த்து போராட அவங்களே வந்திருக்காங்க என்று ஆச்சரிய ஓசைகள்...

சிகப்பு நிற கொடி கட்சியின் தலைவர்கள் அவர்கள் மேடையில் அமர்ந்த பண்ணையார்கள், இதுதான் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மலையின மக்களுக்கு செய்த போராட்ட வல்லமை..

ஒரு காலத்தில் கட்சி ஆட்கள் மலையின மக்களின் ஆண்களை எங்கோ கூட்டி சென்றார்கள் வகை வகையாய் மது வாங்கி கொடுத்தார்கள், பல வித புகையிலை கொடுத்தார்கள் பதிலுக்கு அந்த ஆண்களின் நிலங்களை பெற்றார்கள், அவர் வீட்டு பெண்கள் கட்சிகாரர்களின் பிள்ளைகளை பெற்றார்கள், இருந்து அந்த கட்சிகள் இவருங்களுக்கானது என்று சாராய வாடையில் நம்ப வைத்திருக்கிறார்கள்,

இந்த பெண்கள் என் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற அதிமேதாவிதன கேள்விகள் எழுவது இயல்பு, விடிந்தால் கட்சி காரர்களின் தோட்டத்தில் தான் வேலை, அவர்கள் கொடுப்பதுதான் சம்பளம், தங்கள் நிலத்தில் இன்று கூலியாய் வேலை செய்ய அவர்கள் அனுமதி வேண்டும், எனில் இந்த அரசாங்கம் என்ன செய்கிறது...

மலையின மக்கள் யானைக்கூட்டத்திற்கு தொந்தரவாய் இருக்கின்றனர் என்று அவர்களே சில யானைகளை ஊருக்குள் புகவிட்டு அவர்களை விரட்டுகிறது, அவர்களே காட்டு தீயை உண்டாக்கி, உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று துரத்துகிறது, அதையும் மீறி போக வில்லை என்றால் இவர்கள் தான் கொளுத்தினார்கள் என்று பழியிட்டு உள்ளே தூக்கி போட்டு மிதிக்கிறது.. மீறி இருந்தால் ஒரு நாள் காட்டுதீ அவர்கள் குடிசையை லாவகமாக எரிக்க உதவியாய் இருக்கிறது...

மழையினமக்கள் தங்கள் பிணங்களை எரிக்கும் இடம் கூட இன்று பட்டா போட்டு கட்சிக்கும் பண்ணையார்களுக்கும் கொடுக்கப்பட்டுவிட்டது, 1856ல் வெள்ளையர்கள் மலையின மக்களை துரத்தி அடிக்க பயன்படுத்திய காட்டு பாதுகாப்பு சட்டத்தை இன்று பத்திரப்படுத்தி அவர்களை சரியான முறையில் விரட்டிகொண்டிருக்கிறது..

இதில் சிலரே எதிர்த்து நிற்கிறார்கள் அதில் ஒருவர் தான் ஜானு, தன் மக்களுக்காய் அதிகாரத்தை கேள்விக்கேட்டார், கட்சியை தூக்கி எரிந்தார், முதல்வர் வீட்டு வாசலில் நின்று நியாயம் கேட்டார், தலைமை செயலகத்தின் வாசலில் கூடாரமிட்டு அதிகாரத்தை அலறவிட்டார், இவரின் குரல் ஒருவேளை நமக்கு கேட்காமல் போய் இருக்கலாம், ஆனால் உலகம் கேட்டது ஐ. நா கவுரவம் கொடுத்தது.. சக போராளிகளை அவரிடம் கொண்டுவந்து நிறுத்தியது, ஒரு அரசாங்கத்தை தனிடம் ஒப்பந்தம் போட வைத்தது, அந்த ஒப்பந்ததை அரசு மீறும் போது அதிரடியாய் அதை நிறைவேற்றும் வலிமையை அந்த குழுவுக்கு கொடுக்க வைத்தது,

ஒரு பெண் எழுத்தறிவில்லாமல் தானே படித்து தானே கற்று, தானே சொல்லிக்கொடுத்து, தானே போராடி, தானே எதிர்த்து, தானே நின்று, தானே உலகை திரும்பிபார்க்க வைத்திருக்கிறார்... ஆனால் இந்த புத்தகம் அவரது குரலில் ஒரு மழலை வடிவமாய் கேட்கிறது, எல்லாமும் எளிதாய் நடப்பதைப்போல கடக்கிறது, தன்மேல் விழுந்த அடிகளில் மருத்துப்போய் சுரைனையில்லாததாய் வெளிப்படுகிறது..

ஜானு மலையின பெண்களில் ஒரு விடிவெள்ளி... மக்களை ஏமாற்றும் ஆணவ அரசுக்கு எதிரான கோடாரி காம்பு...

புத்தகம் : ஜானு
ஆசிரியர் : பாஸ்கரன்
பக்கங்கள் : 80
பதிப்பகம் : காலசுவடு
விலை : 40

No comments:

Post a Comment