Sunday, 9 October 2022

மகாகவி பாரதியின் பாஞ்சாலி சபதம் புத்தக அறிமுகம்

87/100

#NaanVijay

நான் விஜய்

இந்தியாவின் மிக புகழ்பெற்ற கதைகள் இரண்டு, ஒன்று ராமாயணம், இன்னொன்று மஹாபாரதம், இதில் மஹாபாரதம் என்பது மிக அதிக மாந்தர்களையும், பற்பல கிளைகாதைகளையும் கொண்டவை, அதிலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கென சில கதைகள் வழங்கப்பட்டு வருகிறது, இந்த புத்தகம் ஒரு முழு மஹாபாரத கதை அல்ல அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே...

மஹாகவி பாரதியின் பஞ்சாலி சபதம் எனும் இந்த கவிதை காவியம் பாண்டவர்கள் சூது விளையாடி அனைத்தையும் இழந்து இறுதியில், பாஞ்சலியின் சபததோடு முடிவுறும்.. இந்த காதையின் சிறப்பு பாரதி பாஞ்சலியை பாரத தாயாகவும், பாண்டவர்களை இந்தியர்களாகவும், கெளரவர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாகவும் உருவகபடுத்தி எழுதி இருப்பதே,

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது இந்த கவிதை வரிகள் மிகப்பெரும் எழுச்சியை மக்களிடம் பரப்பிற்று என்றே கூற வேண்டும், அத்தனை காத்திரமான வரிகளால் பாரதி மக்களின் உணர்வுகளை தூண்டி இருப்பார்.

இந்த புத்தகத்தை பல அறிஞர்கள் மேடையேற்றி இருக்கின்றனர், அதில் ஒருவர் தான் ஐயா முனைவர் ஞானசம்பந்தன், அவரது கல்லூரி நாட்களில் அவர் நண்பர்களோடு அவர் இயற்றிய இந்த நாடகத்தின் வசன குறிப்பு பல வருடங்கள் கழித்து அதே நாடகத்தில் தனது நண்பர் மூலம் பரிசாக கிடைக்க அதை அவர் இன்று புத்தகமாக நம்மிடையே தவழவிட்டிருக்கிறார்..

இந்த புத்தகம் அப்படியே பாரதியின் கவிதைகளை வசனமாக மாற்றாமல், அதற்குள் தன் திறமையை புகுத்தி இந்த கதையை ஆசிரியர் தனதாக்கி கொண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும், பாரதியை போல் உருவகங்கள் ஏதுமில்லாமல் பாரத கதையாகவே இதை நாடக வடிவில் மாற்றி இருக்கிறார் ஆசிரியர்.. இந்த புத்தகம் மஹாபாரததின் ஒரு சிறுபகுதியாய் இருந்தாலும் படிப்பதற்கு எளிமையும், சீக்கிரம் முடிந்து விட்டதே என்ற உணர்வையும் நிச்சயம் கடத்துகிறது...

புத்தகம் : மகாகவி பாரதியின் பஞ்சாலி சபதம்
ஆசிரியர் : முனைவர். கு. ஞானசம்பந்தம்
பக்கங்கள் : 72
பதிப்பகம் : செண்பகா பதிப்பகம்
விலை : 45

No comments:

Post a Comment