Monday, 24 October 2022

எப்போதாவது எண்ணிப்பாருங்கள் - புத்தக பார்வை

95/100

#NaanVijay

நான் விஜய்

இந்தியா சுதந்திர போராளிகள், தங்களுக்குள்ளும் தன் குடும்பத்தினருக்கும் எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்த புத்தகம், இந்த புத்தகத்தை இந்திய ஒலிபரப்பு அமைச்சகதுக்காக தொகுத்து வழங்கியவர் வானொலி புகழ் சரோஜ் நாராயன்சாமி,

இந்த புத்தகம் மிக முக்கிய கடிதங்களின் கோர்வை மட்டுமல்ல இவைகள் அன்றைய இந்தியாவை, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடுமைகளை, நம் தலைவர்களின் வீரத்தை பறைசற்றுகின்றது, ஜான்சி ராணி தொடங்கி நேதாஜி வரை ஒவ்வொரு கடிதங்களும் ஒவ்வொரு வரலாற்றை பேசுகிறது, இதில் நான் கற்றுக்கொண்ட அல்லது புரிந்து கொண்ட சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

1, மன்னர்கள் காலத்தில் ஆங்கிலயேர்க்கெதிரான போராட்டம் என்பது நாடு தழுவியதல்ல அவைகள் மாகாண போராட்டங்களே, ஒரு குறிப்பிட்ட மாகாண அரசுக்கும் ஆங்கிலேயர் எதிரான போர் மட்டுமே

2, சமஸ்தானங்கள் தங்கள் நலனை கருதியே போரிட்டனவே அன்றி ஒருங்கிணைந்த இந்தியாவிற்கனா போர் அது கிடையாது

3, இணைந்து போறிட்ட மன்னர்களுக்கும் கூட வெற்றிக்கு பின் அதை யார் சொந்தமாக்கி கொள்வது என்பதில் போர் தொடங்குவதற்கு முன்பே சண்டை ஏற்பட்டிருக்கிறது.

4, ஒன்றுபட்ட மன்னர்களுக்கு கூட ஒற்றுமை என்பது துளி அளவுக்கும் இருந்ததாக புலப்படவில்லை, இது சுயநல போராக தான் இருந்திருக்கிறது.

5, பகத் சிங் காலகட்டத்தில் இருப்பெரும் பிரிவு இருந்ததாக தெரிகிறது

6, நாட்டிற்காக போராடி கைது செய்யப்பட்ட புரட்சியாளர்களை காங்கிரஸ் கைவிட்டது என்பது அப்பட்டமாக தெரிகிறது.

7, காங்கிரஸ் மனது வைத்திருந்தால் பகத் சிங் உட்பட பல பேர் தூக்கு மேடையில் இருந்து தப்பித்திருக்கலாம் என்பது புரிகிறது.

8, பிச்சை எடுத்து பெரும் விடுதலை தனக்கு எவ்வளவு பெரிய இழுக்கு என்பதை பகத் தன்னுடைய தந்தைக்கு எழுதிய கடிதத்தில் தெரிகிறது.

9, ஒரு போராளி அரசின் சூழ்ச்சிக்கு வளைந்து கொடுத்து விடுதலைக்கு முயற்சி செய்வதை ஒரு கடிதத்தில் பகத் வன்மையாக கண்டிக்கிறார், இதில் இருந்து அன்றைய புரட்சி கட்சி காரர்களின் மனவலிமை வெளிப்படுகிறது.

10, ராம் பிரசாந்த் பிஸ்மில் கடிதம் அன்றைய காலகட்டத்தில் இருந்த மத வேற்றுமைகளை தோளுரித்து காட்டுகிறது, முக்கியமாக ஆரிய சமேஜம் போன்ற கட்சிகளை அவர் சாடுவதை உணரமுடிகிறது

11, பகத்தும் அவர் சகாக்களும் எழுதிய கடிதங்கள், கத்தி இன்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது என்னும் பாரதியின் கவிதையை வெறுக்க வைக்கிறது.

12, சிறைக்கு வெளியில் மட்டுமல்ல சிறைக்குள்ளும் தங்கள் உரிமைக்காக போராடிய பகத், லால், தத், ராம்பிரசாத், யதிந்திர தாஸ் போன்றவர்களின் போராட்டம் வியப்பளிக்கிறது,

13, 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து யதிந்திர தாஸ் சிறையில் மரணம் அடைந்ததும் அந்த அளவுக்கு மதிப்பற்ற முறையில் அன்றைய அரசும், இதைப்பற்றிய எந்த கவலையும் காங்கிரஸ் படவில்லை என்பதும் வேதனை அளிக்கிறது.

14, நேதாஜி கடிதம் அவர் இந்த நாட்டின் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை காட்டுகிறது, ஒரு பெரிய பதவியை உதறி தள்ளிவிட்டு இந்த நாட்டுக்காய் அவர் உழைக்க நினைப்பது அவரது கடிதங்கள் சொல்லும் செய்தி

15, எல்லா போராளிகளையும் காக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது என்பது புரிகிறது, புரட்சியாளர்கள் என்று ஒதுக்குவதை அவர் வெறுகிறார் என்பதை அவர் எழுதிய கடிதங்கள் புரியவைக்கிறது.

16, காங்கிரஸ் குறித்த ஒரு பெரிய கனவை நேதாஜி கொண்டிருந்தார் என்பது சிதறஞ்சன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிகிறது.

இப்படி அன்றைய அரசியலின் ஒரு புகைப்படமாய் இந்த புத்தகத்தில் உள்ள கடிதங்கள் நமக்கு வெளிப்படுத்துகிறது.

புத்தகம் : எப்போதாவது எண்ணிபாருங்கள்
தொகுப்பாளர் : சரோஜ் நாராயன்சாமி
பதிப்பகம் : இந்திய ஒலிபரப்பு அமைச்சகம்
பக்கங்கள் : 200
விலை : 55

No comments:

Post a Comment